Other News

மீண்டும் மருத்துவமனையில் விஜயகாந்த்

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த், கருணாநிதியின் மறைவிற்கு பின் திரும்பி வந்தார். விமான நிலையத்திலிருந்து நேரிடையாக கருணாநிதியின் சமாதிக்கு சென்ற அவர் நடக்க முடியாமல், சுற்றி நடப்பதை உணரமுடியாமல் நின்ற விதம் அந்த வீடியோவை பார்த்த பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. வீடு திரும்பிய விஜயகாந்திற்கு கடந்த ஆகஸ்ட்30 ந்தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் தற்பொழுது […]

டிரெண்டுக்காக அரசியல் பேசும் விஜய் – அதிமுக அமைச்சர் பதிலடி

சமீபகாலமாக விஜய் அரசியல் சார்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் தனது அரசியல் பிரவேசத்திகு அடிபோட்டார். இந்த படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை, ஒருவேளை நான் முதல்வரானால், ஊழலை ஒழிக்க முயற்சி செய்வேன், ஆனால் அது முடியுமா? என்று தெரியவில்லை என்று கூறினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வருவாய்த் […]

நாட்டில் பல இடங்களில் பலத்த மழை

நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினமும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும்.கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ […]

இலங்கையில் பேஸ்புக்கை தடை செய்ய திட்டம்?

இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதனால் இலங்கையில் பேஸ்புக் தடை ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரச தகவல் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இலங்கையில் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார். சிறுவர் தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு […]

காளிகோயில் திருவிழாவால் அரசியல் கைதிகளை மறந்தாரா? சம்பந்தன்!

அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பில் தீர்வைப் பெற்றுக் கொடுக்கா விட்டால் அரசியலில் இருப்பவர்கள் பதவி விலகுங்கள் இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பாக சட்டமா அதிபரைச் சந்திப்பதற்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அது ஏன்? […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 03.10.2018

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வேற்று மதத்தவர்கள் அறிமுகமா வார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள். ரிஷபம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். மிதுனம்: மாலை 4 மணி […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 02.10.2018

மேஷம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன்  புது ஒப்பந்தம் செய்வீர்கள்.  உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச் சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். நீண்ட நாட்க ளாக தள்ளிப் போன காரியங் கள் இன்று முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து […]

1000 பேரை கொன்று குவித்த இந்தோனேஷிய சுனாமி

இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. கடற்கரை திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான மக்கள் சுனாமியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை […]

பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் ஐஸ்வர்யா செஞ்ச காரியம்!

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபைனல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வெளியே வந்த ஐஸ்வர்யா குதுகலத்தில் உள்ளார். மேலும்  இரண்டாம் இடம் பிடித்த ஐஸ்வர்யா வெற்றி குத்தாட்டம் போட்டுள்ளார். டிக்டாக்கில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் போது ஐஸ்வர்யா  தான் டைட்டில் வின்னரோ என சந்தேகத்தை எழுப்பியது.

ஹெச் ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டது: எஸ் வி சேகர்

பெண் பத்திரிக்கையாளரகளைப் பற்றி தவறானக் கருத்துகளைப் பகிர்ந்ததற்காக சர்ச்சையில் சிக்கினார் நடிகர் எஸ் வி சேகர். இதனையடுத்து அவரைக் கைது செய்யப் போலீஸ் தனிப்படை அமைத்துள்ளதாகவும் அதனால் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில காலங்களாக ஊடகங்களில் தலை காட்டாமல் இருந்த எஸ் வி சேகர் தற்போது மீண்டும் பழைய மாதிரி வெளியில் நடமாடத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் இன்று சென்னை அடையாறில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் […]