தமிழ்நாடு செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு பின் சிறு சலனம் இல்லாமல் அரசு தொடர்ந்ததற்கு சசிகலாவே காரணம் – தினகரன்

ஜெயலலிதா மரணத்திற்கு பின் சிறு சலனம் இல்லாமல் அரசு தொடர்ந்ததற்கு சசிகலாவே காரணம் என்று தினகரன் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தங்கியுள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை டிடிவி தினகரன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து இன்று குடகு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- *நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் […]

சசிகலாவுக்கு பயந்து ஜெயலலிதா உடல்நிலை குறித்து பொய் சொன்னோம்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு தகவல்

சசிகலாவுக்கு பயந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பொய் கூறிவிட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பல்வேறு கிசிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா 74 நாட்கள் இருந்தார். முதலில் அவருக்கு லேசான காய்ச்சல் என்றனர். […]

தூத்துக்குடி மீன்வளத்துறை அலுவலகத்தை சிறிய விசைப்படகு மீனவர்கள் முற்றுகையிட்டு சாலைமறியல்

தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 300க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் மீன் பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் 270க்கும் மேற்ப்பட்ட பெரிய விசைப்படகுகள் தங்களுக்கு தங்கு கடல் மீன் பிடிப்பு வழங்க கோரி பல வருடங்களாக போராடி வந்த நிலையில் இவர்கள் தடையை மீறி கடந்த 18ம் தேதி தங்குகடல் மீன்பிடித்தலுக்கு சென்றதால், 163 விசைப்படகுகளுக்கு ஒரு மாதம் தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டது. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் […]

தனிக்கட்சி தொடங்குவதாக கமல் அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கப் போவதாக கூறியுள்ளார். 100 நாளில் தேர்தல் வந்தால் போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார். இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் […]

பிரதமர் மோடியின் திட்டத்திற்கு முழு ஆதரவு: ரஜினிகாந்த் அறிவிப்பு

தூய்மை இந்தியா திட்டத்தில் பிரதமர் மோடிக்கு தான் முழு ஆதரவு அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு அவருடைய ரசிகர்களை சந்தித்தார். அப்போது, அரசியல் பற்றிய தனது கருத்துக்களை தெரிவித்தார். ‘போருக்கு தயாராக இருங்கள். தேவைப்படும் போது களம் இறங்குவேன். அரசியல் சிஸ்டம் சரியில்லை’ என்று கூறினார். இதனால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனவே, ரஜினி […]

கமல் அறிவிப்புக்காக காத்திருக்கின்றேன்: கஸ்தூரி

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்ததில் இருந்தே பலரும் அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேரவிருக்கின்றாரா? என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். அதற்கேற்றாற்போல் அவருக்கு ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனது சகோதரர்கள் என்று கூறிவிட்டதால் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல் நெருங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, ‘இருவருமே ஊழலுக்கு எதிரானவர்கள். விரைவில் கமல்ஹாசனின் மிகப்பெரிய […]

கலாமிற்கு மாலை போடும் அருகதை இவர்களுக்கு கிடையாது – விஷால் விளாசல்

தமிழக அரசியல்வாதிகள் பற்றி ஒரு காட்டமான கருத்தை நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்கு விஷால் பேட்டியளித்தார். அப்போது அனிதாவின் தற்கொலை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால் தற்கொலை செய்து கொள்ளுபோது அனிதா எவ்வளவு வலியுடன் இருந்திருப்பாள் என நினைத்தால் வேதனையாக இருக்கிறது. அனிதாவின் இடத்திலிருந்து யோசித்தால்தான் அந்த வலி தெரியும். அனிதா மாதிரியான குழந்தைகளை கனவு காணச்சொன்ன அப்துல்கலாமை இந்த அரசியல்வாதிகள் […]

ஊதியம் கிடையாது என்பது ஆசிரியர்களுக்கு மட்டும் தானா அரசியல்வாதிகளுக்கு பொருந்தாதா?

சென்னை: சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் எம் எல் ஏக்கள் தொடர்பாக கமல்ஹாசன் விமரசனம் செய்து டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அவர் தனது டுவிட்டரில் கமல்ஹாசன் கூறி இருப்பதாவது:- மரியாதைக்குரிய நீதிமன்றம் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் குறித்து எச்சரிக்கை செய்தது. வேலை செய்வதில் இருந்து விலகி நிற்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு இதே போன்ற எச்சரிக்கைகளை வழங்கும்படி நீதிமன்றத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். வேலைக்கு செல்லவில்லை என்றால் சம்பளம் இல்லை என்பது அரசு ஊழிர்களுக்கு […]

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்; ரஜினியையும் இணைத்து கொள்வேன்

சென்னை: நடிகர் கமல்ஹாசன், ரஜினியிடம் அரசியல் குறித்து பேசுவேன் என்று கூறியுள்ளார். கமல்ஹாசன் அண்மைகாலமாக தமிழக அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். இதனால் கமல் எப்போது வேண்டும் என்றாலும் அரசியலில் குதிக்கலாம் என்று செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல், நான் தொழிலுக்காக நடித்து வருகின்றேன்.சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர். அறவழியில் போராடுவதே ஆரம்பம், அஹிம்சையின் உச்சக்கட்டம் போராட்டம் […]

எந்த நேரத்திலும் கைது நடவடிக்கை பாயலாம்? பரபர ஆலோசனையில் தினகரன்

சென்னை: தம் மீது எந்த நேரத்திலும் கைது நடவடிக்கை பாயும் என்பதால் தினகரன் தீவிர சட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடி தரப்பு – தினகரன் அணி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து தினகரன் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. அதேநேரத்தில் ஏற்கனவே நாஞ்சில் சம்பத்தை முடக்கியது போல தம் மீதும் வழக்குகள் பாயலாம்; […]