தமிழ்நாடு செய்திகள்

இன்று இரவு முதல் சென்னையில் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

தமிழ்நாடு வெதர்மேன் அவ்வப்போது தனது ஃபேஸ்புக்கில் மழை குறித்த தனது கணிப்பை துல்லியமாக அளித்து வருகிறார். அந்த வகையில் நாளை முதல் மழை இரண்டாம் சுற்று ஆரம்பிக்கவுள்ளதாகவும், இன்று இரவு முதல் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது: வடக்கு கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் இரண்டாவது சுற்று இன்றிரவு முதல் தொடங்குகிறது. வழக்கமாகவே, வடகிழக்கு பருவமழையானது காற்றழுத்த தாழ்வு நிலைகள் சார்ந்தது. […]

தினகரனின் பண்ணை வீட்டில் ரகசிய அறைகள்: தம்பி வீட்டிலிருந்து 7 கிலோ தங்கம்

சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று புதுவையில் டிடிவி தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சோதனை மேற்கொண்ட போது அங்கு ரகசிய அறைகள் இருந்ததாம். அந்த அறைகளுக்கு மின்சாதன பூட்டு போடப்பட்டிருந்ததால், சிறிது நேர போராட்டத்திற்கு பிறகே அதிகாரிகள் அந்த அறைகளை திறந்ததாகவும், ஆவணங்கள் மற்றும் பொருட்களை கைப்பற்றிய பின்னர் […]

மக்களுக்கு புரியும்படி கமல் பேச வேண்டும்: இளங்கோவன் கருத்து

கோபியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியது: நடிகர் கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஆனால், அவர் மக்களுக்கு புரியும்படி பேசினால் நன்றாக இருக்கும். சென்னை மக்கள் வெள்ளத்தால் அவதியுறும் போது, சேலத்தில் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். நிலைமை இப்படி இருந்தால், வெள்ள நிவாரண பணி எப்படி சரியாக நடைபெறும் என்றார்.

இரட்டை இலை சின்னத்திற்கும் வருமான வரி துறை சோதனைக்கும் தொடர்பில்லை

சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது. முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் வருமான வரி துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரி ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா வீடுகளிலும் […]

என்னை பற்றிய குறைகளையும் மக்கள் கூறலாம்: செயலியை அறிமுகப்படுத்தி கமல் பேச்சு

புதிய செயலியை அறிமுகப்படுத்திய கமல்ஹாசன் அதன் மூலம் தன்னை பற்றிய குறைபாடுகள் இருந்தாலும் கூறலாம் என தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுக்கு நேற்று 63-வது பிறந்தநாளாகும். பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் அவர் நற்பணி மன்றம் சார்பில் விழா ஒன்று நடைபெற்றது. இதில் புதிய செயலியை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி பேசினார். அவர் கூறுகையில், மக்கள் பிரச்சனையை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். நிறைய விடயங்களை கற்றுக்கொள்வதற்காக தான் சுற்றுப்பயணம் […]

என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் கமல்ஹாசன் வேண்டுகோள்

இன்று கமல்ஹாசனுக்கு 63வது பிறந்த நாளாகும். இந்த நாளில் வழக்கம் போல நலத்திட்ட உதவிகள் வழங்கத் திட்டமிட்டிருந்தனர் கமல் நற்பணி இயக்கத்தினர். ஆனால் மக்கள் மழை வெள்ள பாதிப்பில் உள்ள இந்த நேரத்தில் யாரும் என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், இன்று மற்றும் ஒரு வழக்கமான நாள்தான் என்றும் கமல் ஹாஸன் கூறியுள்ளார். பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட, அதை மாற்றத்துக்கான நாளாக மாற்றுங்கள் என்று தன் […]

அரசை கேலி செய்யாதீர்கள், கள வீரர்களுக்கு சலாம்! நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் அரசின் சில பொறுப்பற்ற செயல்களை குறி வைத்து ட்விட்டரில் கருத்துக்களை அதிரடியாக வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நிகழ்வுகள் மூலம் களத்திலும் நேரடியாக இறங்கிவிட்டார். அவரின் செயல்பாடுகள், அறிவிப்புகளுக்கு சில எதிர்ப்பும் தெரிவித்துவருகிறார்கள். தற்போது அவரின் மீது சில வழக்குகளும் பாய்ந்துள்ளது. நிலவேம்பு கசாயம் குறித்து சர்ச்சைக்கு முடிவுகள் கூறியுள்ளார்கள். இந்நிலையில் அவர் ட்விட்டரில் இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ […]

சினிமா இல்லாமல் இருந்துவிட முடியும், உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது!

சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கூட்டம் நடைபெற்றது. இந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு கமல்ஹாசன் பேசியதாவது:- மழை காலங்களில் வெள்ள சேதம் பெரும் பிரச்சினையாக உள்ளது. எனக்கு தெரிந்த சில நண்பர்கள், நற்பணி இயக்கத்தினர் குளங்கள், ஏரிகளை செப்பனிட என்ன செய்ய வேண்டுமோ அதற்கு உதவி செய்வார்கள் மற்ற மாநிலங்களில் விவசாய கடன்களை ரத்து செய்யும் அரசு தமிழகத்திற்கு ஏன் மறுக்கிறது. அரசியல் […]

ஆஸ்பத்திரியில் அட்மிட்டான குஷ்பூ..! ஆபரேசனுக்கான ஏற்பாடுகள் தீவிரம்…!!

ரஜினி, கமல், பிரபு என அப்போதைய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் குஷ்பு. தற்போது படத்தயாரிப்பு, அரசியல் என ஈடுப்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் தொடர் வயிற்றுவலியால் அவதிப்பட்டுவந்தார். அதற்காக சிகிச்சை எடுத்து வரும் அவர் இன்று காலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயிற்றில் இருக்கும் சிறு கட்டியை அகற்றுவதற்கான அறுவைசிகிச்சை நடைபெறவுள்ளது. இது முடிந்து அவர் 2 வாரங்கள் முழுமையான ஓய்வு எடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதன் அவர் […]

சென்னையில் மீண்டும் விட்டு விட்டு தொடரும் மழை

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. கனமழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதையடுத்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். சென்னையில் இன்று காலை முதல் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று […]