அரசுப் பணிகள் விட்டுவிட்டு அரசு பொறுப்பில் இல்லாத சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் சிறையில் இருக்கும் சசிகலாவை தமிழக அமைச்சர்கள் இன்று சந்தித்து பேசினர். சென்னையில் ஏராளமான அரசுப் பணிகள் இருக்கும்போது, அவற்றை விட்டுவிட்டு, அரசு பொறுப்பில் இல்லாத சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்தது விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில் சசி அடைக்கப்பட்டுள்ளார். இவரை சமீபத்தில் தினகரன் சந்தித்து வந்தார். இந்நிலையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் […]
தமிழ்நாடு செய்திகள்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் – ஜி.கே.வாசன்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் – ஜி.கே.வாசன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், ”புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்தக்கூடிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும். இதைத் தான் இப்போதைய […]
கோவையில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்த போரட்டம்
கோவையில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்த போரட்டம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் – கோவையில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்த போரட்டம் நடைபெற்றது இதில் பணமதிப்பிற்க்க நடவடிக்கைகளால் இரவு பகல் பாராமல் வேலை செய்த ஊழியர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்ககோரியும் மத்திய அரசின் நீதித்துறை சீர்திருத்தங்கலை எதிர்த்தும் ஒரு […]
அடக்குமுறைகள் மூலம் நெடுவாசல் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் பரவும் – ராமதாஸ் எச்சரிக்கை
அடக்குமுறைகள் மூலம் நெடுவாசல் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் பரவும் – ராமதாஸ் எச்சரிக்கை அடக்குமுறைகள் மூலம் நெடுவாசல் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால், அந்தப் போராட்டம் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவ வழி செய்துவிடும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு […]
சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு 2 மாதத்தில் சிறப்புச் சட்டம் நிறைவேற்ற அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு 2 மாதத்தில் சிறப்புச் சட்டம் நிறைவேற்ற அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு 2 மாதத்தில் சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இதனை நிறைவேற்றத் தேவையான நிதியையும் அரசே ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுரை உட்பட 13 […]
ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தால் திமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் – ஸ்டாலின் எச்சரிக்கை
ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தால் திமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் – ஸ்டாலின் எச்சரிக்கை ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கும் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஒவ்வொரு துறையாக சீரழித்து வரும் குற்றவாளி சசிகலாவின் […]
திருச்செந்தூர் அருகே மணப்பாடு கிராமத்தில், சுற்றுலா பயணிகள் சென்ற மீன்பிடி படகு விபத்து : பலி 10 ஆக உயர்வு
திருச்செந்தூர் அருகே மணப்பாடு கிராமத்தில், சுற்றுலா பயணிகள் சென்ற மீன்பிடி படகு விபத்து : பலி 10 ஆக உயர்வு தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே மணப்பாடு கிராமத்தில், சுற்றுலா பயணிகள் சென்ற மீன்பிடி படகு நேற்று விபத்திற்குள்ளானது. 40 பேர் பயணம் செய்த இந்த படகில், 9 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலில் மூழ்கிய மற்றவர்களை […]
நாசகர திட்டங்களை நிறைவேற்ற தமிழகம் என்ன பலியாடா? – வைகோ கேள்வி
நாசகர திட்டங்களை நிறைவேற்ற தமிழகம் என்ன பலியாடா? – வைகோ கேள்வி அடுத்தடுத்து நாசகர திட்டங்களை நிறைவேற்றப்படுவதற்கு தமிழகம் என்ன பலியாடா? என மதிமுக பொதுச் செயலர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். உயர் நீதிமன்ற கிளை வளாகத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற 2 மாதத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். இப்பணிக்கு தேவையான நிதியை தமிழக […]
ஜெயலலிதாவின் பெயரில் அரசு திட்டங்கள் கூடாது – தலைமைச் செயலரிடம் ஸ்டாலின் நேரில் கடிதம்
ஜெயலலிதாவின் பெயரில் அரசு திட்டங்கள் கூடாது – தலைமைச் செயலரிடம் ஸ்டாலின் நேரில் கடிதம் “ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் பெயரில் உள்ள திட்டங்களை பெயர் மாற்றம் செய்ய வேண்டும், குற்றவாளியின் படங்களை சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், அமைச்சர் அலுவலங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு விழாக்களில் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது” என வலியுறுத்தி தலைமைச் செயலரிடம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) நேரில் […]
மக்களாட்சியை அமல்படுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி
மக்களாட்சியை அமல்படுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி தமிழக சட்டப்பேரவையை கலைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். தமிழகத்தில் மக்களாட்சியை அமல்படுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த […]





