ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயிலில் வெடி குண்டு வெடித்தத சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. ரஷியாவில், தலைநகர் மாஸ்கோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க். அங்கு பூமிக்கு அடியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள இரண்டு மெட்ரோ ரெயில் நிலையங்களில் 2 மெட்ரோ ரெயில் பெட்டிகளில் நேற்று குண்டுகள் வெடித்தன. கேட்பார் இன்றி கிடந்த பொருட்களில் இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த குண்டு […]
முக்கிய செய்திகள்
Head News
ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இல்லை – மு.க.ஸ்டாலின்
ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார். தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை விமான நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- மே மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க […]
விபத்துகளில் பலியான 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
விபத்துகளில் பலியான 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நாகப்பட்டினம் மாவட்டம், சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த ரோணித் கிருஷ்வான்; விழுப்புரம் மாவட்டம், தடாகம் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் மற்றும் ராஜவேல்; திருவள்ளூர் மாவட்டம், பெரியகளட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் மற்றும் வினித் மற்றும் பிளேஸ்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த […]
மாறி வரும் இலங்கைத் தீவின் வரைபடம்
இலங்கைத் தீவின் வரைபடம் மாற்றமடைந்து வருகிறது கொழும்பு துறைமுக நகரம் அல்லது நிதி நகரத்தை அமைக்கும் பணிகளால் இலங்கைத் தீவின் உருவ வரைபடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இலங்கைத் தீவின் புதிய வரைபடத்தை வரையும் பணியில் நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். துறைமுக நகரத் திட்டம் நிறைவடைந்த பின்னரே, இலங்கைத் தீவின் இறுதி வரைபடம் வெளியிடப்படும். தற்போது துறைமுக நகரப் பணிகள் நடந்து வரும் நிலையில், கொழும்பில் காலிமுகத்திடலை […]
வில்பத்து தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் தவறானது ; ஸ்ரீநேசன்
சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு அனைத்து சிறுபான்மை சமூகங்களும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகள் காணப்பட்டாலும் அநீதிகளுக்கு எதிராக போராடும் பொழுது அதனை பொருட்படுத்தாது செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு – குடியிருப்பு கனிஸ்ட வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய […]
போர்க்குற்றங்கள் நடக்கவேயில்லை, விசாரணை எதற்கு? – ராஜித கேள்வி
இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் எவையும் இடம்பெறவுமில்லை, அவ்வாறு இடம்பெற்றதாக அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவுமில்லை. இந்தநிலையில், போர்க்குற்ற விசாரணைகள் தேவையற்றது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். “போரின் போது போர்க்குற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை. அவ்வாறு குற்றங்கள் இடம்பெற்றன என்று நாங்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை. எனவே, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளும் தேவையற்றது. போர்க்குற்ற விசாரணைகள் என்கின்ற போது, புலிகளின் குற்றங்களை விசாரிப்பது யார்- அவர்களில் யாரை விசாரிப்பது- அவர்களின் […]
வடக்குப் போராட்டங்களுக்கு உரிய தீர்வைத் தரவேண்டும்! – மைத்திரியிடம் விக்கி நேரில் வலியுறுத்து
காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணி விடுவிப்புப் போராட்டம் மற்றும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் எடுத்துக்கூறியுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவருக்கு சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார். ஜனாதிபதியை மைத்திரிபாலவை வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஜனாதிபதி செயலத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் முன்வைத்துள்ள பரிந்துரைகள் வருமாறு:- காணாமல்போனவர்கள் காணாமல்போனவர்களின் உறவினர்களின் தொடர்ச்சியான போராட்டம் கிளிநொச்சியில் […]
புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக சிறையில் அடைக்கப்பட்டார் வைகோ!
தேசத் துரோக வழக்கில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு கூட்டம் ஒன்றில் பேசிய பேசிய வைகோ, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பொலிஸார் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். குறித்த வழக்கானது பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று வைகோ […]
டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் – சீனா,ரஷ்யா ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது
டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் சீனா,ரஷ்யா ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது. தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் […]
பாரிஸ் பருவநிலை ஒப்பந்த விவகாரம் – இந்தியா மீது டிரம்ப் நிர்வாகம் குற்றச்சாட்டு
பாரிஸ் பருவநிலை ஒப்பந்த விவகாரம் தொடர்பாக இந்தியா மீது டிரம்ப் நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது. சுற்றுச் சூழல் மாசுபாடு தொடர்பாக ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் நகரில் ஒன்று கூடி ஒருமனதாக வரைவு ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கினர். பல்வேறு நாடுகள் இந்த வரைவு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த நிலையில் இந்தியாவும் தனது ஒப்புதலை கடந்தாண்டு அளித்தது. இந்த நிலையில், பாரிஸ் பருவநிலை உடன்படிக்கை […]





