முக்கிய செய்திகள்

Head News

ஜகத் ஜயசூரியவைக் கைதுசெய்தால் முன்னாள் போராளிகளை சிறைபிடிப்போம்! – மிரட்டுகிறார் சம்பிக்க

போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமானால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் கைதுசெய்யவேண்டிய நிலை ஏற்படும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கட்டளைத் தளபதியாக […]

ராஜபக்ஷக்களின் ‘பைல்’களை தூசு தட்டத் தயாராகிறது அரசு! – சட்டமா அதிபர் திணைக்களத்திடம் விசேட அறிக்கை கோருகிறார் புதிய நீதி அமைச்சர்

துரித விசாரணைகளின்றி நீண்டகாலமாக தேங்கிக் கிடக்கும் ராஜபக்ஷக்களின் விசாரணைக் கோவைகள் தொடர்பில் தமக்கு விசேட அறிக்கையொன்றை விரைவில் சமர்ப்பிக்குமாறு புதிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது. மேற்படி விசாரணைக் கோவைகளில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்கும், இவற்றுக்கு எதிராக ஏன் சட்ட ஏற்பாடுகள் மந்தகதியில் இடம்பெறுகின்றன என்பதை அறிந்துகொள்வதற்காகவுமே நீதி அமைச்சர் விசேட அறிக்கையைக் கோரியுள்ளார் என உயர்மட்ட அதிகாரியொருவர் […]

புதிய அரசமைப்பை பெரும்பான்மையுடன் நிறைவேற்றியே தீருவேன்! – மைத்திரி திட்டவட்டம்

“புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட்டு அது நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என நம்பகரமாக தெரியவருகின்றது. மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விவசாய அமைச்சால் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய சேவைக்கால பயிற்சிநிலை கட்டடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பங்கேற்றார். கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போது கிழக்கு மாகாண சபையின் அரசியல் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து […]

சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளியோம்! – புதிய நீதி அமைச்சரும் விடாப்பிடி 

சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசு ஒருபோதும் இடமளிக்காது என்று புதிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள நேற்று திட்டவட்டமாக அறிவித்தார். அத்துடன், கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற ஊழல்,மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஏன் ஸ்தம்பிதமடைந்துள்ளன என்பதை தான் ஆராய்வார் என்றும் அவர் கூறினார். அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து புதிய நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தலதா அத்துகோரள நேற்று தனது கடமைகளை நீதி அமைச்சில் வைத்து […]

ஜகத் ஜயசூரியவை கைது செய்ய சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டும்! பிரித்தானியா விடுத்த கோரிக்கை

பிரேசிலுக்கான இலங்கை தூதுவர் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டு வழக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும் என பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான, போல் ஸ்கலி இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “பிரேசிலுக்கான இலங்கை தூதுவர் ஜகத் ஜயசூரியவை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் சிவப்பு […]

உள்நாட்டில் நம்பிக்கை இழந்ததால்தான் வெளிநாட்டில் வழக்கு! – ஜகத் ஜயசூரிய விவகாரம் குறித்து சுமந்திரன் கருத்து

“பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் உள்நாட்டில் நீதி நியாயம் கிடைப்பதில் நம்பிக்கையின்மை ஏற்பட்டதால்தான் நமது மக்கள் வெளிநாடுகளில் வழக்குப் போடும் நிலைமை வந்திருக்கின்றது.” – இவ்வாறு கருத்து வெளியிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ.சுமந்திரன். போரின் இறுதிக் கட்டத்தில் வன்னித் தளபதியாக இருந்தவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஜகத் ஜயசூரிய, தற்போது பிரேஸில் மற்றும் அதைச் சூழ்ந்த நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராக […]

பொறுப்புக்கூறலிலிருந்து பின்வாங்கவில்லை அரசு! மெதுவாகவே அது நிறைவேற்றப்படும்!! அவசரப்படக்கூடாது என்கிறார் மைத்திரி

பொறுப்புக்கூறலிலிருந்து அரசு பின்வாங்கவில்லை என்றும், அதற்குரிய ஏற்பாடுகள் இலங்கைக்கே உரிய பாணியில் மெதுவாக நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகப் பிரதானிகள், பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது, இறுதிப்போரின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்துவதில் இலங்கை அரசு பின்வாங்குகின்றது என அனைத்துலக மட்டத்தில் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி […]

“எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே?” – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கு, கிழக்கு, தெற்கில் போராட்டம் 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் கொழும்பிலும் நேற்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. வலிந்து காணாமல்போகச்செய்யப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட சமூகத்தினர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்பினர் மற்றும் அரசியல்வாதிகள் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றனர். ஒவ்வொரு மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் அங்கு காணாமல் […]

சர்வதேசம் ஊடாக தமிழருக்கு நீதி: எதிர்பார்ப்பு தளர்ந்துபோகவில்லை!! – அமெரிக்க காங்கிரஸ் அலுவலர்களிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

“சர்வதேச சமூகத்தின் ஊடாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். எமது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆனால், நாம் அந்த எதிர்பார்ப்பிலிருந்து தளர்ந்துபோய்விடவில்லை. ஐ.நா. தீர்மானத்தை மைத்திரி ரணில் தலைமையிலான அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் செயற்படுகின்றோம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தன்னை சந்தித்த அமெரிக்கக் காங்கிரஸ் அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இந்தச் […]

நோர்வே தமிழ் மாணவரொருவர் துரண்ணியம்(trondheim ) பகுதியில் சடலமாக மீட்பு

நோர்வே நிடேல்வா(nidelva ) பகுதியில் தமிழ் மாணவன் ராகவன் ஜீவகரன் வயது 21, திங்கள் அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,ராகவன் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான எந்த சான்றுகளும் இல்லை. ராகவன் ஆகஸ்ட் 15 முதல் காணாமல் போயிருக்கின்றார். அதன் பின்னர் அவரது சடலத்தை போலீசார் நிடேல்வா(nidelva ) பகுதியில் திங்கள் இரவு அன்று பழைய பாலத்தின் கீழே கண்டுபிடித்தனர். செவ்வாய்கிழமையன்று அச் சடலம் ராகவன் உடையது […]