முக்கிய செய்திகள்

Head News

கோத்தபாய ராஜபக்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கோத்தா ஜனாதிபதியாக வருவதை விரும்பவில்லை

கோத்தபாய ராஜபக்­ ஜனாதிபதியாக வருவதை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உண்மையில் விரும்பவில்லை. எமது உறவுகள் தற்போதுவரை வீதியில் அலைந்து திரிவதற்கும் அவரே காரணம் என அம்பாறை, மட்டக்களப்பு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். கல்முனையில் நேற்று ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு ஒன்றில் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நியமனம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும் கருத்து தெரிவிக்கையில், எங்களது […]

சவேந்திர சில்வா

இராணுவத்தின் மனிதாபிமானத்தை தமிழர்கள் அறிவர்

இராணுவத்தின் மனிதாபிமானத்தை தமிழர்கள் அறிவர் இராணுவத்தினர் மேற்கொண்ட மனிதாபிமான பணிகளை வடக்கிலுள்ள மக்கள் நன்கு அறிவார்கள். எவர் என்ன குற்றச்சாட்டை இராணுவம் மீது சுமத்தினாலும், உண்மையை வடக்கு மக்கள் அறிவார்கள் என தெரிவித்துள்ளார் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா. நேற்று கண்டியில் தலதா மாளிகை, மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

திருட்டு வழியில் சஜித்தை ஜனாதிபதியாக்க மாட்டோம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை திருட்டுத்தனமான முறையில் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ மாற்ற மாட்டோம் என இராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார். நேற்று (23) மாலை மாத்தறையில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். பொதுமக்களின் பலத்தினுாடாக சரியான முறையான வழிமுறையில் ஆட்சி பீடம் ஏற்றுவோம் எனவும் அவர் கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் […]

ஜனாதிபதி

பிக்குகளால் எனக்கு தலையிடி மைத்திரி புலம்பல்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு சற்று முன்னர் முடிவடைந்தது. ஜனாதிபதி செயலகத்தில் சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பில் இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வழக்கமாக முக்கிய சந்திப்புக்களில் இரா.சம்பந்தனே அதிகம் பேசுவது வழக்கம். ஆனால் இன்று இரா.சம்பந்தன் பேசவில்லை. மாவை சேனாதிராசாவிடம், பிரச்சனைகளை பேசும்படி குறிப்பிட்டார். பின்னர் ஏனைய எம்.பிக்களும் பிரச்சனைகள் […]

பொன்சேகா

சஜித்திற்கு எதிராக பொன்சேகா போர் கொடி

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை பின்கதவால் பிரதமராக நியமித்தால் அதனை நிச்சயம் தோற்கடிப்போம் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இந்த தகவலைக் கூறினார். அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமிப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாக ஆரம்பித்திருந்தன. இருப்பினும் அவ்வாறு எந்தவொரு நியமனமும் இதுவரை இடம்பெறவில்லை. இதுகுறித்து […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 24.08.2019

இன்றைய ராசிபலன் 24.08.2019 மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி […]

என்னை பிடித்து படுக்கையில் தள்ளினான்… தனி ஆளாக போராடிய 11 வயது சிறுவன்…

இந்தியாவில் தாயின் நகையை திருடிய திருடினை துணிச்சலுடன் பிடிக்க உதவிய 11 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மும்பையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருபவர் பிரபாகர். இவர் மனைவி திவ்யா. மகன் தனிஷ் மகதிக் ( 11). நேற்று முன்தினம் பிரபாகர் அலுவலகத்துக்குச் சென்றுவிட்ட நிலையில் திவ்யா வெளியே சென்றிருந்தார். தனிஷ் மதிய உணவுக்காக, வீட்டுக்கு வந்திருந்தான். அப்போது அங்கு வந்த ஒருவர், தான் மின் ஊழியர் […]

மைத்திரி மஹிந்த

மைத்திரி மஹிந்த மீண்டும் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் மீண்டும் சந்திக்க உள்ளனர். இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை இந்த வாரத்தில் நடைபெறக்கூடிய சாத்தியங்கள் உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அதற்கு வெளியே உள்ள […]

சர்வதேசத்துடன் மோதும் போக்கை அரசு கைவிட வேண்டும் – மங்கள

சர்வதேச சமூகத்துடன் மோதும் கொள்கையை வெளிவிவகார அமைச்சு பின்பற்றக் கூடாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். இலங்கை கடந்த காலத்தில் தனிமைப்பட்ட மோதல் போக்கை பின்பற்றுகின்ற வெளிவிவகார கொள்கைக்கு திரும்பக்கூடாது. கடந்த கால வெளிவிவகார கொள்கைகளை மீண்டும் பின்பற்றினால் கடந்த நான்கு வருடங்களில் கிடைத்த பல நன்மைகளை இழக்க வேண்டி வரும் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய இராணுவ […]

சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற இரு மெளலவிகள் கைது

சஹ்ரானுடன் நுவரெலியாவில் ஆயுதப் பயிற்சி பெற்ற இரு மௌலவிகள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஹெட்டி பொல மற்றும் நிக்கவரட்டிய ஆகிய பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் மௌலவிகளாக இருந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.