இலங்கை செய்திகள்

புலிகளின் காலத்தில் பாவனையில் இருந்த வெடிபொருட்கள் கிணற்றில் இருந்து மீட்பு!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் கிணறு ஒன்றிற்குள் இருந்து நேற்றையதினம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றில் இருந்து இரண்டு கைக்குண்டுகள், ஆர்.பி.ஜி எறிகணைகள், தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அவற்றை செயலிழக்க செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை விடுதலைப்புலிகளின் காலத்தில் பாவனையில் இருந்த வெடிபொருட்களே அவை எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அகதி ஒருவர் தமிழகத்தில் எரித்துக்கொலை!

தமிழகத்தின் நாகர்கோவில் உள்ள கனகமாணிக்கபுரம் சுடுகாட்டில் இலங்கை அகதி ஒருவரை எரித்து கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அகதி ஒருவர் உட்பட மேலும் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நாகர்கோவில் கனகமாணிக்கபுரம் சுடுகாட்டில் எரிக்கப்பட்ட நிலையில் ஆன் ஒருவரின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதன்போது திருநெல்வேலி சமூங்கபுரங்கபுரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 34 வயதுடைய […]

இலங்­கைக்குள் நுளைந்த 20 அவுஸ்தி­ரே­லிய புல­னாய்வு அதி­கா­ரிகள்

ஈஸ்டர் ஞாயிறு தீவி­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக அவுஸ்தி­ரே­லியா 20 புல­னாய்வு நிபு­ணர்­களை இலங்­கைக்கு அனுப்­பி­யி­ருப்­ப­தாக, அந்த நாட்டின் உள்­துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரி­வித்தார். இலங்­கைக்கு பயணம் மேற்­கொண்­டி­ருந்த அவர், செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பின்போதே இந்த தக­வலை வெளி­யிட்டார். ”தீவி­ர­வாத தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணையில் ஈடு­பட்­டுள்ள ஸ்ரீ­லங்கா புல­னாய்வுக் குழுக்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக அவுஸ்தி­ரே­லியா 20இற்கும் அதி­க­மான புல­னாய்வு அதி­கா­ரி­களைக்கொண்ட குழு­வொன்றை இங்கு அனுப்­பி­யுள்­ளது. அவர்கள் […]

விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி சிலர் அரசியல் இலாபம் பெற முயன்றதாக சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு!

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களுடன் விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி சிலர் அரசியல் இலாபம் பெற முயன்றதாக அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். குறித்த அச்சுறுத்தல்கள் யாவும் கடந்த வருடம் மட்டக்களப்பில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குரிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே கடந்த சில காலங்களாக அரசாங்கத்துக்கும் புத்திஜீவிகளுக்கும் இடையிலான பிளவுகள் […]

உணவகம் ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

மீகஹத்தேன பொலிஸ் பிரிவில் உள்ள உணவகம் ஒன்றின் மீது நேற்றைய தினம் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், குண்டு வெடிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தின் போது, உணவக உரிமையாளரும், பணியாளர் ஒருவரும் மட்டுமே அங்கிருந்துள்ளனர். அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் , வெடிக்காத கைக்குண்டை மீட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மஹிந்த – மைத்திரி முறுகல் தீவிரம்

மஹிந்த ராஜபக்ஷவிற்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்றினை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு குண்டு துளைக்காத வாகனமொன்றை வழங்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். இதற்கு ஆளும் தரப்பில் உள்ள சில முக்கிய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்தனர். இந்தநிலையிலேயே மஹிந்தவிற்கு குண்டு துளைக்காத வாகனம் ஒன்றினை வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்ப்பு […]

காணாமல் போனவர்களின் உறவுகளை சந்தித்த கனடிய தூதர்!

கிளிநொச்சிக்கு சென்றுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்னொன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதேவேளை இன்று காலை அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமாரை அவரது அலுவலகத்தில் சந்திதிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எமது தலைவர்கள் இனத்தின் நலன் சார்ந்து செயற்படுவதில்லை

இலங்கையின் அரசியல் நிலைமையை தீர்மானிப்பவர்களாக பௌத்த மதகுருமார் விளங்குவதாகவும் , தமிழ் தலைமைகள் இனத்தின் நலன் சார்ந்து செயற்படுவதில்லையென்றும் வட மாகாண முன்னாள் மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னொன் மற்றும் அனந்தி சசிதரனுக்கும் இடையில் இன்று கிளிநாச்சி சோலைவனம் ஹோட்டலில் சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் தலைமைகள் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 06.06.2019

மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 ரிஷபம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். பணக்கஷ்டம் தீரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, […]

முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், வீடுகள் மீது கல்வீச்சு

கெக்கிராவ பகுதியில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவித்து நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே பள்ளிவாசல்கள் மீதும், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை சம்பவத்தின் போது பொலிஸார் பாதுகாப்பிற்கு இருந்த போதும் கல்வீச்சு தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.