இலங்கை செய்திகள்

கேப்பாபுலவு போராட்டம்

தீவிரமடையும் கேப்பாபுலவு போராட்டம்

தீவிரமடையும் கேப்பாபுலவு போராட்டம் விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக கேப்பாபுலவு பிலவுக்கடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். பிலவுக்குடியிருப்பு 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணிகளை தம்மிடம் மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி 9 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் மக்கள் இதனை தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு பிலவுக்கடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இதுவரை தீர்க்கமான முடிவுகள் முன்வைக்கப்படாத […]

ஈரோஸ் கட்சி

ஈரோஸ் கட்சியின் வடமாகாண தலைமை அலுவலகம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு

ஈரோஸ் கட்சியின் வடமாகாண தலைமை அலுவலகம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு ஈரோஸ் கட்சியின் வட.மாகாண தலைமை அலுவலகம் இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கனகபுரம் வீதியில் அமைந்துள்ள குறித்த தலைமையகம் இன்று காலை 10.30 மணியளவில் கட்சியின் செயலாளர் நாயகம் இரா. பிரபாகரனால் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய கட்சியின் செயலாளர் நாயகம், ‘இன்னமும் அரசியல் சக்தி தமிழ்தேசிய கட்சி என்று ஏமாற்றுகொண்டிருக்கின்றோமே தவிர அதற்கான தீர்வுகள் […]

காணிகளை விடுவிக்குமாறு கோரி

காணிகளை விடுவிக்குமாறு கோரி புதுக்குடியிருப்பிலும் தொடர் போராட்டம்

காணிகளை விடுவிக்குமாறு கோரி புதுக்குடியிருப்பிலும் தொடர் போராட்டம் ராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரியும் கேப்பாப்பிலவு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பதோடு, புதுக்குடியிருப்பில் கையகப்படுத்தப்பட்டுள்ள சுமார் 19 ஏக்கர் காணிகளையும் விடுவிக்க வேண்டுமெனக் கோரி இம்மக்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய […]

அரசாங்கம் ஹாபிஸ் நசீர் அஹமட்

தேர்தல் முறைமை திருத்தத்தில் அரசாங்கம் மிக அவதானமாக கையாள வேண்டும்

தேர்தல் முறைமை திருத்தத்தில் அரசாங்கம் மிக அவதானமாக கையாள வேண்டும் உத்தேச தேர்தல் முறைமை சீர்திருத்தத்தில் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவங்களை பாதுகாப்பதற்கான சரத்துக்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார். தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைமை இணைந்த தேர்தல் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டாலும், விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் கிடைக்கப்பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய அச்ச நிலைமை சிறுபான்மையினர் […]

போரால் பாதிக்கப்பட்டோருக்கு

போரால் பாதிக்கப்பட்டோருக்கு செயற்கைக் கால்கள் பொருத்தும் நிகழ்வு

போரால் பாதிக்கப்பட்டோருக்கு செயற்கைக் கால்கள் பொருத்தும் நிகழ்வு கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினால் போரின்போது கால்களை இழந்தவர்களுக்கான செயற்கைக் கால்கள் பொருத்தும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் போரில் தமது கால்களை இழந்த முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்கள் என சுமார் 30 பேருக்கான செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. அமெரிக்காவின் நிதி உதவியுடன், கண்டி மாற்று வலுவுள்ளோருக்கான நிலையத்தினால் இந்த உதவித்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த […]

ஐ.நா.விடம்

பொறுப்புக்கூறல் விவகாரம்: ஐ.நா.விடம் கால அவகாசம் கோரும் இலங்கை

பொறுப்புக்கூறல் விவகாரம்: ஐ.நா.விடம் கால அவகாசம் கோரும் இலங்கை இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா.வில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் இன்னும் நடைமுறைப்படுத்தாமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இவ்விடயம் குறித்து மேலும் ஒன்றரை வருட கால அவகாசத்தை கோருவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு சிவில் அமைப்புகளின் ஒத்துழைப்பை அரசாங்கம் […]

கோப்பாபுலவு மக்கள் எச்சரிக்கை

இன்றே இறுதி நாள் : கோப்பாபுலவு மக்கள் எச்சரிக்கை

இன்றே இறுதி நாள் : கோப்பாபுலவு மக்கள் எச்சரிக்கை சொந்த காணிகளை மீளப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கோப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை முதல் மக்கள் இரவு பகலாக பிலக்குடியிருப்பு பகுதியிலுள்ள இராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிள்ளைகள் இன்றும் பாடசாலை செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. குறித்த மாணவர்கள் பாடசாலை செல்வதற்கான ஒழுங்குகளை செய்து […]

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்

அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஒருநாள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு, ஓய்வூதியம், சம்பள முரண்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கோரி, நாடாளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப் பணிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்கச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் கல்விசாரா ஊழியர்கள் கடந்த வருடம் ஜூலை […]

ரணிலை

ரணிலை எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ரணிலை எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், சிறிலங்கா மெதுவாகவே செயற்படுவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்,கவலை வெளியிட்டுள்ளார். டாவோசில் கடந்த மாத நடுப்பகுதியில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார். இந்த மாநாட்டின் பக்க நி்கழ்வாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா மனித உரிமை […]

கண்ணிவெடி மீட்பு

கிளிநொச்சியில் கண்ணிவெடி மீட்பு

கிளிநொச்சியில் கண்ணிவெடி மீட்பு கிளிநொச்சி வட்டக்கச்சியிலுள்ள கிராம அலுவலா் காணியிலிருந்து மிதி வெடி ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. வட்டக்கச்சி சில்வா வீதியில் அமைந்துள்ள கிராம அலுவலகரின் காணியில் துப்பரவு செய்யும் பணியின் போதே காணியில் மிதி வெடி காணப்பட்டுள்ளது. இதனையடுத்து இராமநாதபுரம் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டு அவா்களால் மீட்கப்பட்டு இன்று திங்கள் கிழமை விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச்செய்யடவுள்ளது.                   […]