இலங்கை செய்திகள்

அரசாங்கம் விடுத்த அழைப்பு நிராகரிப்பு

அரசாங்கம் விடுத்த அழைப்பு நிராகரிப்பு: 10ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்

அரசாங்கம் விடுத்த அழைப்பு நிராகரிப்பு; 10ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம் காணிப் பிரச்சினை தொடர்பாக அலரிமாளிகையில் நடைபெறும் கலந்துரையாடலுக்கு வருமாறு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் நிராகரித்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தமது நிலமீட்பு போராட்டத்தை 10ஆவது நாளாக இன்றும் முன்னெடுத்து வருகின்றனர். பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இராப்பகலாக போராட்டத்தை முன்னெடுத்து […]

கேப்பாப்பிலவு மக்களிடம் காணிகளை

கேப்பாப்பிலவு மக்களிடம் காணிகளை ஒப்படைக்கவும்: இராணுவம் ஜனாதிபதியின் உத்தரவை மீறியுள்ளது

கேப்பாப்பிலவு மக்களிடம் காணிகளை ஒப்படைக்கவும்: இராணுவம் ஜனாதிபதியின் உத்தரவை மீறியுள்ளது “காணிகள் மீளக் கையளிப்பு தொடர்பில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை பாதுகாப்புப் படையினர் மீறியுள்ளனர். எனவே, கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்க அரசு உடன் நடவடிக்கை வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாக எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை […]

சட்டத்தில் திருத்தம்

காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தம்!

காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தம்! காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படும் நிலையில், குறித்த அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார். காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை அமைப்பதற்கான சட்டத்தை […]

கர்ப்பிணிப் பெண் படுகொலை

ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் படுகொலைக்கு நீதி கோரி பெண்கள் அமைப்பினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. ஊர்காவற்துறை பொது சந்தைக்கு முன்பாக காலை 9 மணியளவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண்கள் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான ஞானசேகரன் […]

வடக்கு மாகாண மீனவ அபிவிருத்தி

வடக்கு மாகாண மீனவ அபிவிருத்தி திட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தீர்மானம்

வடக்கு மாகாண மீனவ அபிவிருத்தி திட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தீர்மானம் வடக்கு மாகாண நிலையான மீனவ அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து முற்பண கடனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்- ”வட. மாகாண நிலையான மீனவ அபிவிருத்தி […]

இரட்டைப் படுகொலை ஏறாவூர்

ஏறாவூர் இரட்டைப் படுகொலை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஏறாவூர் இரட்டைப் படுகொலை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு ஏறாவூரில் தாய் மற்றும் மகள் என இரட்டைப் படுகொலைச் சந்தேக நபர்கள் அறுவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் குறித்த ஆறு பேரும் இன்று (புதன்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏறாவூர் நகர […]

மனங்களில் மாற்றம் வேண்டும் - சிவஞானம் சிறிதரன்

மனங்களில் மாற்றம் வேண்டும் – சிவஞானம் சிறிதரன்

மனங்களில் மாற்றம் வேண்டும் – சிவஞானம் சிறிதரன் தனது இனம் சார்ந்த கருத்துக்களை வெளியிடும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கு எதிராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்துக்களை வெளியிட்டமை நல்லாட்சி அரசாங்கத்தின் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக குரல் கொடுப்பதை அமைச்சர்கள் தடுத்து வருகின்றனர். இதன் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை எவ்வாறு மைத்திரி ரணில் அரசாங்கம் […]

காணியை அடையாளம்

காணியை அடையாளம் காட்டினால் விடுவிப்போம்: இராணுவம்

காணியை அடையாளம் காட்டினால் விடுவிப்போம்: இராணுவம் கேப்பாபிலவு விமானப்படை அமைந்துள்ள பகுதியிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், தமது காணிகளை சரியாக அடையாளம் காட்டுவார்களாயின் அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. இந்த விடயத்தை கேப்பாப்புலவு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து மக்கள் போராடி வருவதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என்று ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன […]

மைத்திரி அநுர குமார

மைத்திரி தனது நண்பர் ராஜிதவை காப்பாற்ற முயற்சிக்கின்றார்: அநுர குமார குற்றச்சாட்டு

மைத்திரி தனது நண்பர் ராஜிதவை காப்பாற்ற முயற்சிக்கின்றார்: அநுர குமார குற்றச்சாட்டு தனது நண்பரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்னவை பாதுகாக்கும நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சைட்டம் சர்ச்சை தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடாமல் மௌனியாக இருப்பதாக ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது. சைட்டம் கல்வி நிறுவனத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்ளக் கூடாதென தற்போதைய ஜனாதிபதி, சுகாதார அமைச்சராக இருந்த சமயத்தில் அவராலேயே நியமிக்கப்பட்ட குழு வலியுறுத்தியிந்த நிலையில் இன்று ஏன் அவர் […]

கேப்பாபுலவு காணி மீட்பு

கேப்பாபுலவு காணி மீட்பு விவகாரம் : தீர்வு வேண்டி சிவலிங்க பூஜை

கேப்பாபுலவு காணி மீட்பு விவகாரம் : தீர்வு வேண்டி சிவலிங்க பூஜை கேப்பாபுலவு கிராம மக்களின் போராட்டத்திற்கு தீர்வு கிட்ட வேண்டும் என பிரார்த்தனை செய்து கேப்பாபுலவு பிள்ளையார் ஆலயத்தில் மூன்றாவது நாளாகவும் சிவலிங்க பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கேப்பாபுலவு பகுதியிலுள்ள தமது காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த வருடம் மார்ச் மாதம் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆறுமுகம் வேலாயுதபிள்ளை என்பவரே இந்த பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றார். […]