இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுடரேற்றி அஞ்சலி

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுடரேற்றி அஞ்சலி இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் பொதுச் சுடரினை ஏற்றி வைத்து, அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் மலர் தூவியும் ஈகைச் சுடரேற்றியும் அஞ்சலி செலுத்தியதுடன், இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தினர். […]

இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற முடியாது : ஜனாதிபதி திட்டவட்டம்

இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில் அமைச்சர்கள், சட்டமா அதிபர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். குறித்த சந்திப்பில் காணாமல் போனோர் தொடர்பாகவும், இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பாகவும், […]

ஈழத்தில் செங்குருதி தோய்ந்த மிகப்பெரிய துக்க நாள் இன்று! – தரணியெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகள்; பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்காலில்

ஈழத் தமிழர் வாழ்நாளில் இன்று கறுப்பு நாள்; செங்குருதி தோய்ந்த மிகப்பெரிய துயர்படிந்த நாள்; மாபெரும் மனிதப் படுகொலை நடந்த நாள்; முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு உயிர் பறித்தெடுக்கப்பட்ட தமது உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலிசெய்யும் நிகழ்வுகளில் தமிழர்கள் ஈடுபடும் நாள். தமிழ் இனத்தின் மீது அரசாலும் அதன் படைகளாலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆகப் பிந்திய மிக மோசமான படுகொலையின் பெரும் துயரை நினைவேந்தும் நாள் இன்று. இறுதிக்கட்டப் […]

இலங்கை பல்லின மக்களும் வாழும் நாடு; சிங்களவரும் இந்தியாவிலிருந்தே வந்தனர்! – மகாவம்சக் கதை கூறி ஞானசார தேரருக்கு மனோ பதிலடி

“சிங்களவர்களும் இந்தியாவிலிருந்தே வந்தனர் என்று நீங்கள் கூறும் அதே மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இலங்கையானது பல்லின மக்களும் வாழும் நாடாகும். இங்கு தமிழ்மொழியும் அரச கரும மொழியாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.” – இவ்வாறு எடுத்துரைத்து பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பதிலடி கொடுத்தார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன். பொதுபலசேனா அமைப்பு தலைமையிலான கடும்போக்குடைய சிங்கள, பௌத்த தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய […]

இலங்கை சிங்கள பௌத்த நாடு! அனைவரும் இதை ஏற்கவேண்டும்!! – இல்லையேல் நல்லிணக்கம் சாத்தியமில்லை என்கிறார் ஞானசார தேரர்

“இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குரிய நாடு. இதை அனைவரும் ஏற்றாகவேண்டும். எனவே, வந்தேறுக்குடிகளான தமிழ், முஸ்லிம் மக்கள் எமது (பௌத்தர்களின்) கலாசாரம், மொழியைக் கற்கவேண்டும். அப்போதே நல்லிணக்கம் சாத்தியமாகும்.” – இவ்வாறு தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசனிடம் கடுந்தொனியில் எடுத்துரைத்தார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர். தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசனை சந்தித்துப் […]

இனப்படுகொலையின் சாட்சியாக இன்றும் பல தடயங்கள் முள்ளிவாய்க்காலில்!

அரச படைகளின் இனவெறித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் காவுகொள்ளப்பட்ட முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் தடயங்களை இப்போதும் காணமுடிகின்றது. விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் காலப் பகுதியில் இராணுவத்தின் பிடியில் இருந்து தமது உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்றிக்கொள்வதற்காகப் பல இடம்பெயர்வுகளைச் சந்தித்த தமிழ் மக்கள் இறுதியாக முள்ளிவாய்க்கால் பகுதியை வந்தடைந்தனர். மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிறிய நிலப் பரப்புக்குள் அடக்கப்பட்டவேளை இராணுவம் ஏவிய எறிகணைகளால் தினமும் வகைதொகையற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன. […]

யாழில் படுகொலைகளுக்கு நீதி வேண்டிபல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் எனவும், வழக்கை கொழும்புக்கு மாற்றக் கூடாது எனவும் கோரிய பல்கலைக்கழக மாணவர்கள் சமூகம், கடந்த வருடம் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முற்பகல் 11.30 […]

வடமேல் மாகாண சபையிலும் பிரளயம் ஏற்படும் அறிகுறி! – பெரும்பாலான உறுப்பினர்கள் மஹிந்த அணிக்குத் தாவ முயற்சி

வடமேல் மாகாண சபையிலும் ஆட்சி மாற்றமொன்று ஏற்படக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன எனவும், அச்சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் மஹிந்த அணியான பொது எதிரணியின் பக்கம் சாயவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டில் இரண்டு வருடங்களுக்கு முன்பு அச்சபையின் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சராகவிருந்த டி.பி.ஹேரத் பண்டாவின் பதவி பறிக்கப்பட்டு லக்ஷ்மன் வெண்டருவவுக்கு வழங்கப்பட்டது. அன்றுமுதல் சபை உறுப்பினர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி இன்று […]

சீன நீர்மூழ்கிக்கு சிறிலங்கா அனுமதி மறுத்ததை உறுதிப்படுத்தினார் அமைச்சர் சரத் அமுனுகம

இராணுவ நடவடிக்கைகளுக்காக துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கு சீனா உள்ளிட்ட எந்தவொரு நாட்டுக்கும் சிறிலங்கா அனுமதி அளிக்காது என்று சிறிலங்கா அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், பீஜிங்கில் இந்தியாவின் பிரிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். சீன நீர்மூழ்கியை கொழும்பில் தரிப்பதற்கு சிறிலங்கா அனுமதி வழங்க மறுத்தது என்பதை உறுதிப்படுத்திய அமைச்சர் சரத் அமுனுகம, “எமது துறைமுகங்கள் […]

சீனாவின் முதலீடுகளை வரவேற்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவில் பிரதான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் முதலீடுகளை வரவேற்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார். பீஜிங்கில் நேற்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று சீனாவின் அதிகாரபூர்வ செய்தி ஊடகமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. அம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுகநகரத் திட்டங்களை வெற்றிகரமாக முன்நோக்கி நகர்த்துவதற்கு சீனாவுடன் இணைந்து பணியாற்ற சிறிலங்கா விரும்புகிறது என்றும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார். […]