கேப்டன் விஜயகாந்த் தற்போது மீண்டும் பரபரப்பாக பல மீடியாக்களுக்கு பேட்டியளித்து வருகின்றார். இதில் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். இதில் இவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கின்றீர்களா? என்று ஒரு கேள்வியை கேட்க உடனே கேப்டன் ‘பிக்பாஸுன்னா என்ன’ என்று கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பிறகு சில நொடி கழித்து மீண்டும் ‘ஓ கமல் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றாரே அதுவா?, அதெல்லாம் பார்க்க நேரமில்லைப்பா, …
Read More »அடுத்த தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: விஷால் அதிரடி
நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க பொது செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆகிய பதவிகளை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அடுத்த நடிகர் சங்க தேர்தல் பற்றி கேட்கப்பட்டது. அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்திமுடிக்கப்படும் என்றும், அதில் நிச்சயம் நானும் போட்டியிடுவேன் என விஷால் அப்போது தெரிவித்தார்.
Read More »சசிகலா, தினகரன் இருவரும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்- ஓபிஎஸ் தரப்பு
சசிகலாவும், டிடிவி தினகரனும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்றும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது டிடிவி தினகரன் அதிமுக உறுப்பினராகக் கூட இல்லை எனவும் தேர்தல் ஆணையத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது ஓபிஎஸ் அணி. அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலைச்சின்னத்தைப் பெற ஈபிஎஸ், ஓபிஎஸ்,தினகரன் ஆகியோரின் தரப்பு தீவிரமாக போராடி வருகிறது. இதற்காக இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு மூட்டை மூட்டையாக பிரமாண பத்திரங்களை தாக்கல் …
Read More »‘கெயில்’ திட்டம் ஸ்டாலின் எச்சரிக்கை
‘மீண்டும் கெயில் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய,- மாநில அரசுகள் முயற்சித்தால், விவசாயிகளுடன் இணைந்து, தி.மு.க., போராடும்’ என, அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில், விளை நிலங்களுக்கு இடையில், ‘கெயில்’ நிறுவனத்தின் எரிவாயு குழாய்களைப் பதிக்க, மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரிஆகிய, ஏழு மாவட்டங்களில், விளைநிலங்களின் வழியாக, 310 கிலோ மீட்டர் துாரத்துக்கு, 20 மீட்டர் …
Read More »மோடியை திருமணம் செய்ய ராஜஸ்தான் பெண் தர்ணா
புதுடில்லி, பிரதமர் மோடியை திருமணம் செய்வதற்காக, ராஜஸ்தானை சேர்ந்த பெண், டில்லியில், ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார். டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர், ஓம் சாந்தி சர்மா, ௪௦. பிரதமர் மோடியை திருமணம் செய்ய விரும்பி, டில்லி ஜந்தர் மந்தரில், ஒரு மாதத்துக்கும் மேலாக, தர்ணா போராட்டம் நடத்திவருகிறார்.இது பற்றி, சாந்தி சர்மா கூறியதாவது: …
Read More »தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- (அடைப்புக்குறிக்குள் இருப்பது பழைய பதவி) கவிதா ராமு – அருங்காட்சியகங்கள் இயக்குனர் – (தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக பொது மேலாளர்). டி.அன்பழகன் – ஆவணக் காப்பக இயக்குனர் – (எல்காட் பொது மேலாளர்). எஸ்.சிவராசு – கோயம்புத்தூர் வணிக வரிகள் (அமலாக்கம்) இணை கமிஷனர் – (திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர்). எஸ்.பி.அம்ரித் …
Read More »சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் சசிகலா !!!
சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையே தனது கணவரை பார்ப்பதற்காக …
Read More »தமிழக புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் இன்று(அக்.,5) சென்னை வருகிறார்.
தமிழக கவர்னராக இருந்த ரோசையாவின் பதவிக்காலம் முடிந்த பின், மஹாராஷ்டிர மாநிலம் கவர்னராக இருந்து வந்த வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 30ம் தேதி(செப்.,30) உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று(அக்.,5) பிற்பகல் சென்னை வருகிறார். கிண்டி ராஜ்பவனில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில், …
Read More »மோடி மீது நடிகர் பிரகாஷ்ராஜ் ஆவேசம்
பிரபல கர்நாடக பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் பேசுகையில், லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்களின் செயல்பாடுகள் குறித்து, மவுனமாக இருப்பதன் மூலம் தன்னைவிட மிகச்சிறந்த நடிகர் என்பதை பிரதமர் நிரூபித்திருப்பதாக விமர்சித்துள்ளார். …
Read More »அரசியலில் வெற்றி பெறும் சூட்சமங்கள் கமலுக்கு மட்டுமே தெரியும்!
நடிகர் திலகம், செவாலியே சிவாஜி என தமிழ் சினிமாவில் ஒப்பற்றவராக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். அவரின் மணி மண்டபம் இன்று சென்னை அடையாறில் திறக்கப்பட்டது. இவ்விழாவில் அரசியல் பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் என பலர் பங்கேற்றனர். நடிகர் சங்கம் சார்பாகவும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் கமல் பேசிய போது எத்தனை தடைகள் இருந்தாலும், ஒரு ரசிகனாக இங்கு வந்திருப்பேன். இந்நிகழ்விற்கு என்னை அழைத்த கலைத்துறைக்கும், தமிழக அரசுக்கும், அரசியல்லுக்கும் நன்றி …
Read More »