சமீபத்தில் தமிழக ஆளுனராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோஹித் அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று திடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று எச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் சமீபத்தில் ‘மெர்சல் படத்தால் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள், அதன் பின்னர் நடந்த வருமான வரி சோதனை குறித்து எச்.ராஜா, ஆளுனருடன் பேசியிருப்பாரா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னர் ஏற்படும் நிகழ்வுகளை …
Read More »நவீனமயமாகும் ராணுவ மையங்கள்…
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள சுமார் இரண்டாயிரம் ராணுவ மையங்களை, நவீனப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 58 ராணுவ மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து மையங்களும் நவீனப்படுத்தப்படும் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த 10ம் தேதி டெல்லியில் தொடங்கிய ராணுவ மாநாட்டில், விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக மாநிலங்களுடன் தகவல் பரிமாற்றத்தை அதிகப்படுத்தவும், ராணுவத்தின் உள்கட்டுமானத்தை ஊக்கப்படுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் ராணுவ அதிகாரிகள் …
Read More »விஜயுடன் மெர்சல் படத்தை பார்த்த கமல்..!
மெர்சல் திரைப்படம் குறித்த சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனை, நடிகர் விஜய் சந்தித்துள்ளார். விஜய் மற்றும் படக்குழுவினருடன் ‘மெர்சல்’ திரைப்படத்தை இன்று பார்த்துள்ளார் கமல்ஹாசன். இது தொடர்பான புகைப்படங்களை மெர்சல் படத்தின் இயக்குநர் அட்லி, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கமல்ஹாசன் மெர்சல் திரைப்படத்தைப் பார்க்கும்போது, உடன் இருந்தது வாழ்வின் முக்கிய தருணம் என குறிப்பிட்டுள்ளார். மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களையும் தவறான தகவல்களையும் …
Read More »ரஜினி மெர்சலுக்காக பேசமாட்டார்; போர் வரும்போதுதான் பேசுவார் – சீமான்
மெர்சல் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசமாட்டார் என கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், போர் வரும்போது மட்டுமே ரஜினி பேசுவார் என விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது இவ்வாறு தெரிவித்த அவர், கட்டண விலை உயர்வால் மக்கள் திரையரங்கில் படம் பார்க்கும் நிலை இல்லை என்றும் கூறினார். இனிமேல் எல்லாரும் இணைய தளத்தில்தான் படம் பார்க்கும் நிலை ஏற்படும் என்றும் கூறினார். ராஜேந்திர …
Read More »டெங்கு: ஒரே நாளில் 5 பேர் பலி!
தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் இன்று ஒரே நாளில் இரண்டரை வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் தொடரும் உயிரிழப்புகளால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தருமபுரி ராஜாதோப்பு பகுதியைச் சேர்ந்த 3 வயது குழந்தை ஹரிஹரசுதன் டெங்கு காய்ச்சலால் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல காய்ச்சலுக்கு ராமநாதபுரம் மாவட்டம் அரியனேந்தலில் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. …
Read More »பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள் பரோல் கிடைக்குமா? அற்புதம்மாள் மனு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு சமீபத்தில் பரோல் கிடைத்தது. ஒரு மாதம் கிடைத்த பரோல் கடந்த மாதமே முடிவடைந்தாலும் பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அவருக்கு ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பரோல் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க முதல்வரிடம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் …
Read More »மீண்டும் ஒலிக்கும் கருணாநிதியின் குரல் – திமுகவினர் ஆரவாரம்
திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் தன் காந்தக்குரலில் உரையாற்றுவார் என அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் கோபால் தெரிவித்துள்ள விவகாரம் திமுகவினர் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் மற்றும் முதுமை காரணமாக வீட்டை விட்டு வெளியே வராமல் ஓய்வு எடுத்து வருகிறார். அந்நிலையில் நேற்று இரவு திடீரென அவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு சென்றார். முரசொலி பவளவிழாவை …
Read More »மெர்சலில் ஜிஎஸ்டி காட்சிகள் திடீர் நீக்கம்: இன்கம்டாக்ஸ் ரெய்டு பயமா?
இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்திற்கு ரிலீசுக்கு முன்பே பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் ரிலீசுக்கு பின்னர் அந்த படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி காட்சியால் மத்திய அரசின் ஆதரவாளர்கள் கொதித்து எழுந்தனர். குறிப்பாக தமிழக பாஜக தலைவர்கள் படக்குழுவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளர் முரளிராமசாமி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி என்று கூறப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு காட்சிகளை நீக்கிவிடுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் …
Read More »கொதித்தெழுந்த எச்.ராஜா
ஜி.எஸ்.டி பற்றி மெர்சல் படத்தில் நடிகர் விஜய் பேசிய வசனம் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. சிங்கப்பூரில் 7 சதவீத ஜி.எஸ்.டி வரியை வசூலிக்கிறார்கள். ஆனால், அங்கே மருத்துவத்தை இலவசமாக தருகிறார்கள். ஆனால், இந்தியாவில் 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறது. எனினும், இங்கு எல்லாவற்றையும் பணம் கொடுத்தே பெறுகிறோம் என மெர்சல் படத்தின் இறுதி காட்சியில் விஜய் வசனம் பேசியுள்ளார். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், மத்திய …
Read More »நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார்!
நிலவேம்பு கசாயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதற்காக நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் கொடுத்துள்ள புகாரில், நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் சரியான ஆராய்ச்சி முடிவு வரும் வரை நிலவேம்பு கசாயத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டாம் என தனது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கருத்தால் டெங்கு காய்ச்சலுக்காக …
Read More »