Saturday , July 5 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 28)

தமிழ்நாடு செய்திகள்

அடித்து நொறுக்கப்பட்ட கர்நாடக பேருந்தின் கண்ணாடி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்று கூறி வரும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்குள் வரும் கர்நாடக மாநில பேருந்துகளும், கர்நாடகத்திற்குள் செல்லும் தமிழக பேருந்துகளும் ஒருவித அச்சத்துடனே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் செல்லும் கர்நாடக …

Read More »

காவிரி விவகாரத்துல திமுகவும் அதிமுகவும் ஓவரா நடிக்குறாங்க

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிற விவகாரத்துல திமுக வும், அதிமுகவும் அப்பட்டமாக நடிக்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த அதிரடியாக தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் …

Read More »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஜிஎஸ்டி செலுத்த மாட்டோம்? இது புது டிவிஸ்ட்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தாமல், மத்திய அரசிடம் எதிர்ப்பை புதிய விதத்தில் வெளிப்படுத்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இது குறித்து அவர் …

Read More »

ஐ.பி.எல் போட்டியை புறக்கணியுங்கள்

சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்குமாறு தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 10ம் தேதி ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளது. காவிரி விவகாரம் பூதாகரமாகியுள்ள இந்த சூழ்நிலையில், …

Read More »

தன்னந்தனியாக பேருந்தை நிறுத்திய திமுக பெண் தொண்டருக்கு ஸ்டாலின் அழைப்பு

நேற்று திமுக உள்பட 15 எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த் மற்றும் சாலை மறியல் போராட்டத்தால் தமிழகமே ஸ்தம்பித்தது. குறிப்பாக திமுக தொண்டர்கள் தமிழகமெங்கும் முழக்கமிட்ட கோஷங்களால் தமிழக காவல்துறை திணறியது இந்த நிலையில் நேற்று வேலூர் – திருப்பத்தூர் சாலையில் அரசு பேருந்து ஒன்றை தன்னந்தனியாக திமுக கொடியை கையில் ஏந்திய ஒரு பெண் வழிமறித்து தனது எதிர்ப்பை காட்டினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. தனியொரு …

Read More »

நெற்றியில் சந்தனம் வைத்த மாணவிகளை துன்புறுத்தியதாக பள்ளி நிர்வாகம்

தமிழகத்தில் இயங்கி வரும் பல தனியார் பள்ளிகள், மத நோக்கத்திலும், மதங்களை பரப்புவதிலும் ஈடுபட்டு வருவதாகவும், பிற மதங்களை சார்ந்த மாணவ, மாணவிகளை துன்புறுத்தி வருவதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் சமீபத்தில் எழுந்து வருகின்றது. இந்த நிலையில் ஆரணியை அடுத்த தேவிகாபுரம் என்ற பகுதியில் இயங்கி வரும் குளினி மெட்ரிக் கிருஸ்துவ பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் இன்று காலை பள்ளிக்கு வரும்போது நெற்றியில் சந்தனம் வைத்து கொண்டு வந்தனர். அந்த …

Read More »

தனி ஆளாக பேருந்தை தடுக்கும் திமுக பெண் தொண்டர்

காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகமெங்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணாசாலையில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வி.சி.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் இணைந்தன. அதன்பின் மெரினாவில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல், அதிமுக தொழிற்சங்கத்தை தவிர …

Read More »

போராட்டம் 100 சதவீதம் வெற்றி: ஸ்டாலின் பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் 5ம் நாளாக இன்று திமுக போராட்டத்தை கையில் எடுத்தது. சென்னை …

Read More »

ஆளுநரை சந்தித்த பூரிப்பில் முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் பிறகு முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்காமல் இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் …

Read More »

​“திராவிடத்தை யாராலும் ஒழிக்க முடியாது” – கமல்ஹாசன்

சென்னை பொன்னேரியில் தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், படித்து முடித்த பின் மாணவர்கள் எதிர்கொள்ள போவது அரசியலையும், ஊழலையும் தான் என்று தெரிவித்தார். மாணவர்கள் அரசியல் புரிந்தவர்களாக இருந்தால் அரசியல்வாதிகள் நேர்மையானவர்களாகி விடுவார்கள் என்று கமல்ஹாசன் கூறினார். மாணவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு, மத்திய அரசுக்கு இல்லை என்றும் …

Read More »