Sunday , October 19 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 13)

தமிழ்நாடு செய்திகள்

கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்? குழப்பம் ஆரம்பம்! மீண்டும் பரபரப்பு..

கருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிடுவது யார் என்ற எதிர்பார்ப்பில் அத்தொகுதி மக்கள் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை என்ற கிராமத்தில் பிறந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இவர் இந்த தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக இடங்களில் வெற்றி பெற்றவர் கருணாநிதி. இவர் கடந்த 7-ஆம் தேதி உடல்நல குறைவுகளால் மரணமடைந்தார். இதையடுத்து கருணாநிதியின் திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தொகுதியில் யார் …

Read More »

கருணாநிதியின் வீட்டில் மோதல்? உடைகின்றது தி.மு.க…!!

தி.மு.க தானாகவே உடையும் என்றும், அதனை உடைக்க வேண்டிய அவசியம் தனக்கு கிடையாது என்றும் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் கருணாநிதி உயிரிழந்து நாளையுடன் ஒரு வாரம் ஆகவுள்ள நிலையில் அவரது வீட்டில் தற்போது மோதல் வெடித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அழகிரி தற்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றார். “தி.மு.கவில் உள்ளவர்கள் பணத்திற்கு விலைப்போய்விட்டார்கள். இந்நிலையில், நான் அதிருப்தியில் …

Read More »

திமுகவில் அழகிரிக்கு இடமில்லை; அன்பழகன் அதிருப்தி

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் நாளை திமுக செயற்குழு கூட்டம் முதல்முறையாக நடைபெற உள்ளது. இதில் திமுக கட்சியின் நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவரை கட்சியில் சேர்க்க அவரது ஆதரவாளர்கள் சிலர் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தகவலை அறிந்த திமுக பொதுச் …

Read More »

தி.மு.க விற்குள் மீண்டும் வருவாரா அழகிரி – தமிழ்நாட்டில் பரபரப்பு

தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்த மறைந்த கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களின் புதல்வர் மு.க.அழகிரிகடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டதாக அப்போது அறிவிக்கப்பட்டது. கடந்த ஓகஸ்ட் 07 இல் கருணாநிதி மறைவின் பின்னர் கட்சித் தலைமைத்துவம் மற்றும் கட்சி நிர்வாகிகளை …

Read More »

கருணாநிதி இல்லாத இடத்தை அடக்கி ஆளப்போகும் இந்தப் பெண்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்துவேலர் கருணாநிதி உடல் நலக்குறைவினால் காலமானதாக கடந்த ஏழாம் திகதி காவேரி மருத்துவமனையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கருணாநிதியின் உடல் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரின் மறைவிற்கு பின்னர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் சர்ச்சைகள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி ஆகியோருக்கிடையிலான மோதலும் ஒன்று. எனினும் அண்மைய காலங்களாக நடந்து வரும் சில சம்பவங்கள், குறித்த …

Read More »

மெரீனா கடற்கரையில் கருணாநிதியின் ஆவி? கொதிப்பில் மக்கள்..

கருணாநிதி இறந்து முழுதாக இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை. ஆனால், அதற்குள் மெரீனா அருகே கலைஞர் கருணாநிதியின் ஆவியை பார்த்த தொண்டர் என்ற பெயரில் ஒரு எடிட் செய்யப்பட்ட படத்தை பரப்பிவருகிறார்கள். இதை அப்படியா என்று ஏமார்ந்து பார்ப்பவர்கள் சிலர், இது போலி தான் என்று அறிந்தும்.., அவனை திட்டித்தீர்த்துவிட வேண்டும் என்று முடிவுக்கட்டி அந்த படத்தை பார்ப்பவர்கள் பலர். பிரபலங்களை வைத்து மட்டும் தான் இவர்கள் இப்படி …

Read More »

பார்ப்போரை கண்கலங்க வைக்கும் கருணாநிதி தயாளு அம்மாளின் புகைப்படம்!

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் இணையதளத்தையும், சமூக வலைதளங்களையு் ஒரு புகைப்படம் உலுக்கி எடுத்து வருகிறது. அந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் நெகிழ்ந்து போகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஆயிரம் அர்த்தங்களை அந்த புகைப்படம் எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொருவரும் தங்களது மனதைப் பிசையும் வாசகங்களை போட்டு அதை ஷேர் செய்தும் வருகிறார்கள். தயாளு அம்மாள் வீட்டுக் கதவைத் திறந்து பார்க்கிறார். வெளியில் கருணாநிதி நிற்கிறார். இதுதான் அந்தப் புகைப்படம். அதற்கு ஒவ்வொருவரும் …

Read More »

நள்ளிரவில் கருணாநிதி சமாதியை நோக்கி படையெடுக்கும் மக்கள்!! என்ன நடந்தது…

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினாவில் அண்ணா சமாதி அருகே நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், நள்ளிரவிலும் கலைஞரின் சமாதியை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதியைச் சுற்றிலும் சூழ்ந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இந்நிலையில், கலைஞர் சமாதியை காண நள்ளிரவு என்றும் பாராமல் அதிகளவில் தொண்டர்கள் வருகைத் தந்துள்ளார்கள். மேலும், எம்.ஜி.ஆர். சமாதியிலும், ஜெயலலிதா சமாதியிலும் மின்குமிழ்கள் எரிகின்றன, ஆனால், அண்ணா …

Read More »

உயர்நீதிமன்ற தீர்ப்பை கேட்டு கருணாநிதி காலடியில் கதறியழுத ஸ்டாலின்

நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, ஸ்டாலின் நேரில் சந்தித்து மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் கலைஞருக்கு இடம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். பதிலுக்கு சட்ட சிக்கல்கள் இருப்பதால் அண்ணா சமாதியில் இடம் ஒதுக்க முடியாது என்றும், அதற்கு பதிலாக காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என்றும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் இரு …

Read More »

தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார்!!

கருணாநிதி

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார். அவருக்கு வயது 94 வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் …

Read More »