செல்வம் பெருகும் வரலட்சுமி விரதம்! ஆதியும் அந்தம் இல்லா அரும்பெரும் மதமாக மேன்மையுறும் இந்து மதம் தனின் வழிபாட்டு முறைமைகளில் இந்து மக்களால் தவறாது கடைப்பிடிக்கப்படுபவை விரதங்கள் ஆகும். விரதம் என்பது எம் மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவன் திருவருளை பெற்றுக் கொள்வதற்கு நாம் இயற்றும் ஒரு வழிபாட்டு முறையாகும். இத்தகு விரதங்கள் பல எம் இந்து மதத்தவரால் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஒவ்வொரு கடவுளுக்கு என்று பல விரதங்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் […]
ஆன்மிகம்
ஆன்மிகம்
ஸ்ரீ மகா லக்ஷ்மியின் அவதாரமாக விளங்கும் துளசி!!
துளசி செடி ஸ்ரீ மகா லக்ஷ்மியின் அவதாரமாக துளசி விளங்குவதுடன், பாம்பை மெத்தையாக கொண்டு துயிலும் பெருமாளின் மார்பில் மாலையாக என்றென்றும் தவழ்ந்து வலம் வருகிறாள். துளசி, சங்கு, சாளக் கிராமம் மூன்றும் ஒன்றாக வைத்து பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மகா ஞானியாகும் பாக்கியம் கிடைக்கும். எம் பெருமானுக்கு இரண்டு பொருட்களில் தீராத காதல் உண்டு. ஒன்று கள்ளம் கபடு இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பக்தர்கள் மீது. ஒரு […]
அனைவராலும் கொண்டாடப்படும் முக்கியத்துவம் வாய்ந்த தீபாவளி பண்டிகை…!
புனிதத் தலமான கேதார்நாத்தில் சுயம்புவாகத் தோன்றிய சிவனை அடைய விரும்பி பராசக்தி 21 நாள் விரதம் இருந்ததாக கந்தபுராணம் கூறுகிறது. அதன் இறுதியில் சிவன் சக்திக்கு காட்சியளித்து தன்னில் ஒருபாதியாக சக்தியை ஏற்று அர்த்தநாரீஸ்வரராக மாறினார் என்பது புராணம் கூறும் கதை. அந்த நன்னாள் தான் தீபாவளித் திருநாள். இதையொட்டி, புரட்டாசி மாதம் தசமி வளர்பிறை திதியில் துவங்கி ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசி திதி வரை 21 நாள்கள் […]
குரு பார்க்க கோடி நன்மை எனக் கூற காரணம் என்ன…?
உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் ஆலயத்தில், நவகிரக சந்நதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்கலாம். மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வணங்கினால் மலையளவு உள்ள துயரம் கடுகளவாக குறைந்து விடுவதுடன் மட்டுமல்லாமல், குரு பகவானின் பரிபூரண அருளாசியும், நன்மைகளும் தேடி வரும். துன்பங்கள் நீங்கி இன்பங்களை பெறலாம். குரு பகவானின் அருள் கிடைக்க முருகன் கோயிலுக்கு சென்று வணங்கலாம். திருச்செந்தூர் குரு ஸ்தலமாகும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, […]
மூன்று தேவியரை வணங்க ஏற்ற நவராத்திரி காலம்…!
நவராத்திரி பிரதமை திதி தினத்தன்று தான் கும்பம் வைத்து பூஜை ஆரம்பிக்க வேண்டும். நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லஷ்மி, துர்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரத்தின் நோக்கமாகும். இந்த நாட்களில் கொண்டை கடலை, கடலை பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன் விதவிதமான நைவேத்தியங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து […]
எள்ளெண்ணெய் எரிக்கும் வழிபாட்டில் மக்கள்!!
“புரட்டாசி சனி” என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்எண்ணெய் (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றி அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை இன்று மக்கள் ஆர்வத்துடன் செய்து வருவதை அவதனிக்க முடிந்துள்ளது.
சனிதோஷம் விலகி வாழ்வில் மகிழ்ச்சி பெற இதை மட்டும் செய்தால் போதும்
ஒவ்வோர் ஆண்டும் புரட்டாதி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகள் தோறும் சனிபகவானை நினைந்து மனம்,வாக்கு,மெய்யால் வழிபாடு இயற்றுகின்ற மரபை இந்துக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இக்காலப்பகுதியில் அதிகாலை வேளையில் எழுந்து நீராடி, தோய்த்துலர்ந்து ஆடைகள் அணிந்து அடியவர்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவர். சைவ ஆசார முறைப்படி உணவு சமைப்பர். வாழை இலையில் பழம், பாக்கு, வெற்றிலையோடு அன்னமிட்டு அதற்கு உகந்த கறிகளைச் சேர்த்து சனீஸ்வரனுக்கு நிவேதனம் செய்வர். காகத்துக்குச் சாதம் வைத்து வழிபாடு […]
நந்திக்கடல் தண்ணீரில் விளக்கெரியும் வற்றாப்பளை அம்மனின் அற்புதம்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து அதில் ஒரு வாரம் விளக்கேற்றும் நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகின்றது. இந்த ஆலயத்தை அண்டிய பகுதிகளிலேயே முள்ளிவாய்க்கால் இறுதியுத்தம் நடந்தது. ஈழத் தமிழ்மக்களின் வரலாற்றுடன் பின்னிணிப் பிணைந்த இந்த ஆலயம் தமிழ்மக்கள் சந்தித்த முள்ளிவாய்க்கால் அவல வரலாற்றிலும் இரண்டக்கலந்துவிட்டது. 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இறுதி […]
கருடனை எந்த கிழமையில் வணங்கினால் என்ன பலன்….!
திருமாலின் வாகனமாக இருப்பவர் கருடன். பறவைகளின் அரசனாக விளங்கும் கருடன், மங்கள வடிவமாக கருதப்படுகிறார். அமிர்தத்தை தேவ லோகத்தில் இருந்து பூமிக்கு எடுத்து வந்த பெருமை இவரை சாரும். கருடனுக்குகருடாழ்வார் என்று சிறப்பு தருகிறது புராணங்கள். இந்த கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் பார்த்தல் குறிப்பிட்ட பலன்களை பெறலாம். ஞாயிறு – நோய் நீங்கும். திங்கள் – குடும்பம் செழிக்கும். செவ்வாய் – உடல் பலம் கூடும். புதன் – […]
மகாவிஷ்ணு ராமாவதாரத்தை எடுப்பதற்கு முன்பாக
மகாவிஷ்ணு ராமாவதாரத்தை எடுப்பதற்கு முன்பாக, அனைத்து தெய்வங்களும் 33 கோடி தேவர்களும் வைகுண்டத்தில் சங்கமித்தார்கள். ராமாவதாரத்தில் எந்தெந்த பாத்திரங்கள் வரும், அவற்றை யார், யார் ஏற்பது என்பது குறித்து தீர்மானிக்கப்பட்டு வந்தது. எல்லா பாத்திரங்களுக்கும் யார் பொறுப்பேற்பது என்பது தீர்மானமாகிவிட்டது. சிவனும் கூட ஆஞ்சநேயர் பாத்திரத்திற்குத் தயாராகிவிட்டார். ஆனால் ஒரே ஒரு பாத்திரத்திற்கு மட்டும் பதில் இல்லை. அது மந்தாரை என்ற கூனி பாத்திரம். உண்மையில் ராமாயணத்தில் திருப்பம் ஏற்படுத்துவது […]





