காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனது பிரமதர் ஆசை குறித்தும், தலைவர் பதவியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து, வரும் நாட்களில் கட்சியின் நிலை குறித்தும் பேசியுள்ளார். அவை பின்வருமாறு… காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து சோனியா காத்து விளக்கினார். மேலும் அந்த பதவியில் அவரது மகன் ராகுல் காந்தியை அமர்ந்தார். மேலும் கட்சியின் சில அடுத்த நகர்வுகளை பற்றி அவர் கூறியதாவது, நான் பிரதமர் ஆவது […]
இந்தியா செய்திகள்
கர்நாடகாவிற்கு தனிக்கொடி
கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா தங்களுக்கென்று தனி கொடி வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறித்தி வந்தார். இந்நிலையில், கர்நாடக அரசின் தனிக்கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இந்த கொடி தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. கர்நாடகாவிற்கு தனி கொடியை உருவாக்க அரசு சார்ப்பில் தனிக்குழு ஒன்றை அமைத்திருந்தார். நமது தேசிய கொடியை போலவே இந்த கொடியும் மூவர்ணங்களை கொண்டுள்ளது. மஞ்சள், வெள்ளை நிறமும், சிவப்பு வண்ணம் […]
ஸ்ரீதேவியின் இறப்பு சம்மந்தப்பட்ட சான்றிதழ்களில் உள்ள மர்மம்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில் மிகபெரிய பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. ஒரு திருமணத்திற்காக கணவருடன் பிப்ரவரி 24 ஆம் தேதி துபாய் சென்றார் அங்கு இரவு 11.30 மணியளவில் திடீரென உயிரிழந்துள்ளார் என அவருடைய உறவினர் சஞ்சய் செய்திகள் வெளியிட்டார். ஸ்ரீ தேவி அவர்களது உடல் பிரேத சோதனைக்கு பிறகு, அவர் இறந்ததற்கான உண்மை தகவல் வெளியாகியுள்ளது. குளியலறையில் உள்ள தொட்டியின் நீரில் […]
ஸ்ரீதேவியின் பூதவுடல் இன்றிரவு மும்பை வந்தடையும்! நாளை தகனம்!
இன்று இரவுக்குள் நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வந்தடையும். இறுதி மரியாதை மற்றும் இறுதி சடங்குகளுக்கு பின்னர் நாளை உடல் தகனம் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவி தன்னுடன் உணவருந்த வருவார் என்று அவரது கணவர் போனி கபூர் காத்திருந்த நிலையில் ஹோட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் அவர் பிரேதமாக கிடந்துள்ளார். துபாய் நகரில் நடிகை ஸ்ரீதேவி தங்கி இருந்த ஹோட்டல் அறையில் அவர் உயிருடன் இருந்த […]
மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்
கேரளாவில் 9 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 3 அயோக்கியன்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதிலும் இந்த கொடுமை குறைந்த பாடில்லை கேரளா கோட்டயம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் அதே பகுதியிலுள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவிக்கு அகில் […]
இந்தியா வரும் ராஜபக்சேவை வரவேற்கும் சந்திரபாபு நாயுடு
இலங்கையில் நடந்த இறுதிப்போரின்போது லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை இந்தியாவுக்கு வருகை தருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் ராஜபக்சேவுக்கு ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்பு கொடுக்கவுள்ளது தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது. அண்மையில் இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அதிபர் சிறிசேனாவின் ஆட்சியே ஆட்டம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. வெகுவிரைவில் இலங்கையில் […]
நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்
மாரடைப்பால் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல தமிழ், தெலுங்கு, இந்தி நடிகையான ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54 துபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவிக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது உயிர் பிரியும்போது கணவர் போனிகபூர் மற்றும் மகள் குஷிகபூர் உடனிருந்தனர் குழந்தை […]
சிறுவனை நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்த தாய்
மும்பையில் 8 வயது சிறுவன் ஒருவன் மரத்தில் நிர்வாண நிலையில் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகைப்படம் ஒன்று டுவிட்டரில் வெளிவந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்த மும்பை போலீசார், அந்த சிறுவனை மீட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது, அந்த சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் அடம்பிடித்ததால் அதற்கு தண்டனையாக அந்த சிறுவனின் தாய் மற்றும் சகோதரர் மரத்தில் கட்டி வைத்ததாக தெரிகிறது. ஆனால் இதுகுறித்த புகார் […]
தாய் இறந்தது கூட தெரியாமல் அருகில் தூங்கிய மகன்
தன்னுடைய தாய் இறந்தது கூட தெரியாமல், 5 வயது சிறுவன் அருகிலேயே தூங்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி பலரின் மனதையும் உலுக்கியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசிப்பவர் சமீனா சுல்தானா. இவரின் கணவர் அயூர் 3 வருடங்களுக்கு முன்பு அவரை பிரிந்துவிட்டார். இதனால், அவர் தன்னுடைய 5 வயது மகனோடு வசித்து வந்தார். அந்நிலையில், சமீனாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை அறிந்த அயூப் அவரை உஸ்மானிய மருத்துவமனையில் […]
மீண்டும் பஞ்சாயத்தை கூட்டும் சுப்பிரமணியன் சுவாமி
பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஜம்மூ காஷ்மீரில் ராணுவ […]





