ஆரோக்கிய குறிப்புகள்

தலைமுடியை இயற்கையாக பராமரிக்க உதவும் பூந்தி கொட்டை…!

நாம் பயன்படுத்தும் பலவிதமான சோப்புகளில், சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் தோல் வறட்சி, வியர்வை கோளங்களில் அடைப்பு, ரோமக்கால்களில் அடைப்பு, ரோமங்கள் வெடித்து, தோலின் மென்மையான புற அடுக்கு தடித்து, வீங்கி நிறம் மாறல், நகமும், தோலும் இணையும் இடத்தில் வெடிப்பு ஏற்பட்டு, அங்கு பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகள் வளருதல் என பல தொல்லைகள் ஏற்படுகின்றன. உலர்ந்த பூந்தி கொட்டையைக் உடைத்து, கொட்டையை நீக்கி, அதன் தோலை வெதுவெதுப்பான நீரில் ஊற […]

இயற்கையாக கிடைக்கக்கூடிய கள்ளின் மருத்துவப் பயன்கள் என்ன தெரியுமா..!

தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் கள் முக்கியத்துவம் பெறுகிறது. கள்ளின் மருத்துவப் பயன்களை தெளிவாக பதிவு செய்து சென்றுள்ளனர் சித்தர்கள். சித்தர் பாடல்களின் பல இடங்களில் கள்ளின் மருத்துவ மகத்துவங்களை அறிந்துகொள்ள முடிகிறது. பனை மரத்து கள்ளால் ஆண்களுக்கு உடல் வலிமையையும், விந்து சக்தியும் அதிகரிக்கும் என அகத்தியர் குணப்பாடம் கூறுகிறது. பனை மரத்தின் பால் தெளுவு அல்லது தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். காலையில் வெறும் […]

கிரீன் டீ தெரியும் கிரீன் காபியின் பலன்கள் தெரியுமா !

கிரீன் டீ என்பது பலருக்கும் தெரிந்த பானமாகும். உடல் எடையை குறைக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என இதன் பயன்கள் பற்றி பலர் அறிந்திருப்பார்கள். சரி, கிரீன் காபியை பற்றி தெரியுமா? அதன் அற்புத பயன்களை பற்றி கேள்விபட்டதுண்டா? கிரீன் காபி தயாரிக்கப்படும் விதைகளில் சாதா காபி விதையை விட குளோரோஜினிக் ஆசிட் அதிகளவில் அடங்கியுள்ளது. இதனால் இதை பருகுவதில் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன நீரிழிவு நோயைக் […]

தலை வைத்து தூங்குவதற்கு ஏற்ற திசை எது தெரியுமா?

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கண்வு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்க கூடாது. வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும்போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப்படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி உண்டாலும். மல்லாந்து […]

உடலுக்கு ஆரோக்கியம் தரும் 5 நிமிட லிப் டூ லிப்

தினமும் 5 நிமிடம் லிப் டூ லிப் முத்தம் உடலின் ஆரோக்கியம் மேம்படுத்த உதவும். அன்பை பறிமாற முத்தம் கொடுப்பது வழக்கம். முத்தம் புத்துணர்ச்சியை கொடுப்பது மட்டுமல்லாமல் உடலிற்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும். குறிப்பாக லிப் டூ லிப் முத்தம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். தினமும் 5 நிமிடம் லிப் டூ லிப் முத்தம் கொடுப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. அடிக்கடி முத்தம் கொடுக்கும் போது உடலில் அட்ரினலின் […]

மலட்டுத்தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் நிவாரணம்

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தாது விருத்தி தரும் பூசணிக்காய். இந்த மருந்தை சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக […]

தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா !

மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர். உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும். மாதவிடாய் […]

உடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை

இயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்து உடல் எடையை அதிகரிக்கிறது. கறிவேப்பிலை செரிமான பிரச்சினையைப் போக்க உதவும். கறிவேப்பிலையை பச்சையாகவும் ஜூஸ் செய்தும் உட்கொள்ளலாம். காலை நேரத்தில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சிறிது எடுத்துக்கொண்டால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை குறைய வழிவகுக்கும். பச்சை கறிவேப்பிலையில் கெட்ட கொழுப்புக்களை எரிக்க அதிகளவில் உதவும். ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்து […]

எதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா!

கற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. பச்சை நிறத்தில் காணப்படும் கற்றாழை முட்களுடன் காணப்படும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற திரவம் பயன்படுகிறது. கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் […]