நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டுகளில் தெளிவான வளர்ச்சியை எட்டியுள்ளது – இவ்வாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். கொழும்ரில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, ~~நாட்டின் நிதி உள்ளடகத்தை அதிகரிக்க மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை முக்கிய அம்சமாகும். கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோருக்கு அதற்கான வசதிகளை …
Read More »பிரதமருக்கு எதிரான தீர்மானம் : சு.கவில் பொதுவான இணக்கப்பாடு இல்லை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பொது எதிரணி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இணக்கப்பாடு எட்டப்படவில்லை – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸ்ஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். புpரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இன்று அல்லது நாளை பொது …
Read More »ஜனாதிபதியின் உயிரை காப்பாற்றிய தமிழ் மக்கள் : கருணாகரம்
தமிழ் பேசும் மக்கள் தனது உயிரை காப்பாற்றியுள்ளனர் என ஜனாதிபதி கூறியிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அபிவிருத்திக்கு அப்பால் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக இன்றுவரையில் போராடிக்கொண்டுள்ளது. 2001ஆம் ஆண்டு தமிழர்களின் ஒருமித்த …
Read More »சிறுபான்மை சமூகம் தாக்கப்படும்போது பெரும்பான்மை சமூகம் இரசிக்கிறது
கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அண்மையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களுக்கும் வணக்கஸ்தலங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டமை, பெரும்பாலான சிங்களவர்களுக்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்தியுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு பெரும்பாலான சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. எனினும், அதில் எவ்வித உண்மையும் இல்லை. 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் போதும் பெருமளவான சிங்களவர்கள் மகிழ்ச்சியுற்றனர். அரேபிய கலாசாரத்தை சில …
Read More »புட்டினுக்கு மைத்திரியும் மஹிந்தவும் வாழ்த்து
ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புட்டினுக்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். புட்டினின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் வளர்ச்சிப் பாதையில் பாரிய முன்னேற்றம் ஏற்படும. அதன்மூலம் ரஷ்ய மக்கள் தமது இலக்கை அடைந்துகொள்வார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்தும் வலுப்பெறுமென எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, …
Read More »அமுலுக்கு வருகிறது புதிய வரிமுறை
புதிய வரி முறையின் மூலம் நாட்டின் வியாபார சூழலை ஊக்குவிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய உள்நாட்டு வருவாய் சட்டம் குறித்து நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற பொது விழிப்புணர்வு கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகாரம் பெற்ற புதிய உள்நாட்டு வருவாய் சட்டமானது, முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் …
Read More »இலங்கை குறித்த அறிக்கை ஐ.நா.-வில் நிறைவேற்றம்!
இலங்கை குறித்த பூகோள கால மீளாய்வு அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரின் நேற்று (திங்கட்கிழமை) அமர்வில் இலங்கை குறித்த முதல் விவாதமாக பூகோள கால மீளாய்வு அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி முதல், 17ஆம் திகதிவரை, ஜெனீவாவில் நடைபெற்ற பூகோள கால மீளாய்வு பணிக்குழு அமர்வில், இலங்கை தொடர்பாக …
Read More »கண்டி வன்முறையை கோழைத்தனமானது ரவிநாத் ஆரியசிங்க ஐ.நாவில் கண்டனம்
கண்டியில் முஸ்லிம் மக்கள் மீது அண்மையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையானது, ஜனநாயக மற்றும் பன்முக சமுதாயத்தில் இடமற்ற சிலரால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான செயல் என ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 37ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை குறித்து நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இத்தகைய சம்பவங்கள் உரிமைகளும், …
Read More »தேவை ஏற்பட்டால் அரசியலில் பிரவேசம் : கோட்டா
மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரவேண்டிய அவசியமில்லை. எந்த வழியில் வேண்டுமானாலும் சேவை செய்ய முடியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், தேவை ஏற்பட்டால் அரசியலில் நுழைவது குறித்து தீர்மானிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார். கோட்டாவின் அரசியல் பிரவேசம் தொடர்பாக அண்மைய காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அரசியலில் நுழைவது தொடர்பாக …
Read More »தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டத்தில் கூட்டமைப்பு
2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசு கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை. இலங்கைக்கான கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில் அரசு எதனையும் செய்யாது என்பது புரிகின்றது. எனவே, இந்தக் கட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசு தெரிவித்துள்ளது. ஜெனிவா கூட்டத் தொடரில் …
Read More »