Sunday , June 29 2025
Home / தமிழ்மாறன் (page 38)

தமிழ்மாறன்

துப்பாக்கி பிரயோகம்  நீதிபதி இளஞ்செழியன் மீதான இலக்கல்ல :  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் 

யாழ். நல்லூர் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். நீதிபதி இளஞ்செழியன் விசாரணை செய்யும் எந்த வழக்கு தொடர்பிலான விடயங்களும் இந்தச் சம்பவத்தின் பின் புலத்தில் இல்லை. விசாரணைகளின் மூலம் இந்த விடயம் உறுதியாகியுள்ளது. யாழ். நல்லூர் பகுதியில் வைத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் …

Read More »

தீவிரவாதத்தை ஒழிக்க புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் சவூதி அரேபியா

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முறியடிக்க உள்துறை அமைச்சகத்தில் இருந்து பிரித்து புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க சவூதி அரேபியா மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முறியடிக்க உள்துறை அமைச்சகத்தில் இருந்து பிரித்து புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க சவூதி அரேபியா மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் தலைமையிலான கேபினட் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட விவகாரங்களை கையாள்வதற்காக …

Read More »

உளவு மற்றும் தீவிரவாத குழுவுடன் தொடர்பு: குவைத்தில் இருந்து ஈரான் தூதர்கள் வெளியேற்றம்

உளவு மற்றும் தீவிரவாத குழுவுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி குவைத்தில் இருந்து 15 ஈரான் தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். குவைத்தில் 2015-ம் ஆண்டில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. அந்த வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் 24 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதல் நடத்தவும், உளவு வேலை பார்க்க இவர்களுக்கும் ஈரான் தூதரக அதிகாரிகள் மற்றும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து குவைத்தில் இருந்து …

Read More »

நடைபயிற்சியின்போது ஏற்பட்ட பாசத்தால் நாயை தத்தெடுத்த ராணி எலிசபெத்

நடைபயிற்சியின்போது ஏற்பட்ட பாசத்தால் நாயை தத்தெடுத்து இங்கிலாந்து ராணி எலிசபெத் பராமரித்து வருகிறார். இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு நாய்களின் மீது பிரியம் அதிகம். எனவே அவர் 3 நாய்களை வளர்க்கிறார். அந்த நாய்களுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வார். அப்போது முன்னாள் விளையாட்டு வீரர் பில் பென்விக் என்பவரும் தனது விஸ்பா என்ற கார்ஜி இன நாயுடன் நடைபயிற்சி செய்து வருவார். அந்த நாயின் மீது ராணி எலிசபெத் பாசம் வைத்தார். இந்த …

Read More »

பின்லேடனை துப்பாக்கியால் 3 முறை சுட்டு கொன்றேன்: அமெரிக்க ராணுவ அதிகாரி தகவல்

அல்கொய்தா தலைவர் பின்லேடனை 3 முறை சுட்டு கொன்றதாக அமெரிக்க ராணுவ அதிகாரி ராபர்ட் ஓ நீல் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் ரகசியமாக தங்கி இருந்தது அமெரிக்க படைக்கு தெரியவந்தது. இதையடுத்து அமெரிக்க கமாண்டோ படையினர் ஹெலிகாப்டரில் சென்று அதிரடி தாக்குதல் நடத்தி பின்லேடனை கொன்றனர். 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. …

Read More »

கத்தாருக்கு விதித்த நிபந்தனைகளை தளர்த்திய அரபு நாடுகள்

கத்தாருக்கு விதித்த 13 நிபந்தனைகளில் 6 நிபந்தனைகளை கைவிட்டதாக சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் அறிவித்துள்ளது. அரபு நாடுகளில் ஒன்றான கத்தாருக்கும் அதையொட்டியுள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரசு எமிரேட், பக்ரைன், எகிப்து ஆகிய நாடுகளுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. கத்தார் நாடு ஈரான் மற்றும் துருக்கிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இது மற்ற நாடுகளுக்கு பிடிக்கவில்லை. எனவே கத்தாரை அச்சுறுத்தும் வகையில் அந்த நாட்டுக்கு பல்வேறு …

Read More »

வித்தியா கொலை விவகாரம்: ஊர்காவற்றுறை நீதவானுக்கு அழைப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான சாட்சியப்பதிவிற்காக, ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.ரியாழுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ட்ரயல் அட் பார் விசாரணையின்போது, நீதிபதிகள் இவ் அறிவித்தலை விடுத்துள்ளனர். வித்தியா கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில், நீதவான் ரியாழை எதிர்வரும் 24ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான நிசாந்த சில்வாவையும் அன்றைய தினம் மன்றில் …

Read More »

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் ஐ.நாவின் அரசியல் விவகாரச் செயலர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அலரி மாளிகையின் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியும், சிறிலங்காவின் சட்டம் , ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் உடன் இருந்தனர். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா சென்றிருந்த போது …

Read More »

அரசியலமைப்பு உருவாக்க விவகாரம் – இரண்டாக உடைந்தது கூட்டு எதிரணி

அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதையடுத்து, கூட்டு எதிரணியின் முக்கிய பங்காளிக் கட்சியான விமல் வீரவன்ச தலைமையிலான, தேசிய சுதந்திர முன்னணி அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகியுள்ளது. தமது கட்சியைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளில் இருந்து வெளியேறுவதாக, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், விமல் வீரவன்ச நேற்று கடிதத்தைக் கையளித்தார். அதேவேளை,மகிந்த ராஜபக்ச தலைமையிலான …

Read More »

தமிழ் அகதிகளுக்கு குடியேறும் வாய்ப்பை மறுக்கும் அமெரிக்காவின் தேசப்பற்று சட்டம்

நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள், அமெரிக்காவின் தீவிரவாத சட்டத்தினால் அமெரிக்காவில் குடியேறும் வாய்ப்பு நிராகரிக்கப்படலாம் என்று அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கு படகுகள் மூலம் அகதிகளாகச் சென்றவர்களில், அடைக்கலம் பெறுவதற்குத் தகுதி பெற்ற ஒரு தொகுதியினரை நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் உள்ள கடல் கடந்த முகாம்களில் அவுஸ்ரேலியா, தங்க வைத்துள்ளது, இவர்களை மூன்றாவது நாடு ஒன்றில் குடியேற்றுவதற்கான முயற்சிகளிலும் …

Read More »