Sunday , June 29 2025
Home / தமிழ்மாறன் (page 33)

தமிழ்மாறன்

டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் 18 லட்சம் ரூபாய்க்கு ஏலம்

அமெரிக்காவின் மான்ஹட்டன் நகரில் உள்ள கட்டிடங்களை குறிக்கும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று 18 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மான்ஹட்டன் நகரில் உள்ள கட்டிடங்களை குறிக்கும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று 18 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முக்கிய நகரமாக மான்ஹட்டனில் உள்ள வானுயர்ந்த கட்டிடங்களை குறிக்கும் விதமாக கடந்த 2005 ஆம் ஆண்டில் தொண்டு …

Read More »

ரஷ்யா – அமெரிக்கா இடையே வெடிக்கும் மோதல்: 755 தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற புதின் உத்தரவு

ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் …

Read More »

பாகிஸ்தான் புதிய பிரதமர் நாளை தேர்வு: எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்

பாகிஸ்தானில் பிரதமர் பதவி காலியாக உள்ள நிலையில் அதை நிரப்புவதற்காக தேர்தல் நாளை நடக்கிறது. இதில் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கிறார்கள். ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பதவி பறிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து அவர் பதவி விலகினார். தற்போது பிரதமர் பதவி காலியாக உள்ள நிலையில் அதை நிரப்புவதற்காக தேர்தல் நாளை (1-ந்தேதி) நடக்கிறது. அதற்கான அறிவிப்பை …

Read More »

திங்களன்று விஜயகலாவை அழைத்துள்ள இரகசிய பொலிஸ்

புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் மகாலிங்கம் சிவகுமார் என்ற சுவிஸ் குமாரை புங்குடுதீவு சென்று காப்பாற்றுமாறு சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் அநுருந்த ஜயசிங்கவிற்கு பணித்தமை தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவென மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இரகசிய பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். நாளை 28ம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் விஜயகலா அதனை மாற்றி 31ம் திகதி …

Read More »

ரஷியா, ஈரான், வட கொரியா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

ரஷியா, ஈரான், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது. ரஷியா, ஈரான், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது. பொதுவாக அமெரிக்க நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும் ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த …

Read More »

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை: டிரம்ப் அடுத்த அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பலரும் ஆதரித்தனர். ஆனால், அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேருவது வரும் ஜனவரி 1ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் …

Read More »

பெண்களுக்கு 50 வயதுக்கு பிறகு ‘செக்ஸ்’ அவசியம்: ஐரோப்பிய கோர்ட்டு கருத்து

பெண்கள் ‘செக்ஸ்’சில் ஈடுபட வயது வரம்பு இல்லை என்றும் 50 வயதுக்கு பிறகு பெண்கள் ‘செக்ஸ்’சில் ஈடுபடுவது அவசியம் என ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர் மரியா ஜிவோன் கார்வல்கோ மொராய்ஸ் (72). 1995-ம் ஆண்டு 50-வது வயதில் அவரது பிறப்பு உறுப்பில் ஆபரேசன் நடந்தது. அப்போது நடந்த தவறான ஆபரேசனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவரால் ‘செக்ஸ்’சில் ஈடுபட முடியவில்லை. அதை தொடர்ந்து …

Read More »

புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீடிக்கும் : ஐரோப்பிய ஒன்றியம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ரத்துச் செய்துள்ள போதிலும், தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. லக்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு, விடுதலைப் புலிகளை தீவிரவாத அமைப்பாக பட்டியலிடுவதற்கு, பயன்படுத்தப்பட்ட நடைமுறைகளின் சட்டபூர்வ தன்மை தொடர்பானதே என்றும் ஐரோப்பிய …

Read More »

வித்தியா கொலை விவகாரம்: முக்கிய அரசியல்வாதியிடம் விசாரணை

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வித்தியா கொலை வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் சட்டத்தரணிகள், அண்மையில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் தெரிவித்திருந்த தகவல்களின் பிரகாரம், இவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவி வித்தியா படுகொலை தொடர்பான பிரதான சந்தேகநபரை மக்கள் பிடித்து கட்டிவைத்திருந்த நிலையில், …

Read More »

நல்லூர் சம்பவத்திற்கு நீதி விசாரணை வேண்டும்

யாழ். நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நீதியான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டுமென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்று 158 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்த காணாமல் …

Read More »