இன்றே இறுதி நாள் : கோப்பாபுலவு மக்கள் எச்சரிக்கை சொந்த காணிகளை மீளப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கோப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை முதல் மக்கள் இரவு பகலாக பிலக்குடியிருப்பு பகுதியிலுள்ள இராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிள்ளைகள் இன்றும் பாடசாலை செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. குறித்த மாணவர்கள் பாடசாலை செல்வதற்கான ஒழுங்குகளை செய்து …
Read More »அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஒருநாள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு, ஓய்வூதியம், சம்பள முரண்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கோரி, நாடாளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப் பணிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்கச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் கல்விசாரா ஊழியர்கள் கடந்த வருடம் ஜூலை …
Read More »ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை பரிந்துரையை நிராகரியுங்கள் : சர்வதேச மனித உரிமை அமைப்பு
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை பரிந்துரையை நிராகரியுங்கள் : சர்வதேச மனித உரிமை அமைப்பு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஸ்ரீலங்காவுக்கு வழங்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, ஐரோப்பிய நாடாளுமன்றம் நிராகரிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. ஸ்ரீலங்காவில் உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், சித்திரவதையில் இருந்து விடுதலை, சமாதானம் மற்றும் நீதிக்கான ஸ்ரீலங்காவின் பரப்புரை அமைப்பு உள்ளிட்ட பல …
Read More »ரணிலை எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
ரணிலை எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், சிறிலங்கா மெதுவாகவே செயற்படுவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்,கவலை வெளியிட்டுள்ளார். டாவோசில் கடந்த மாத நடுப்பகுதியில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார். இந்த மாநாட்டின் பக்க நி்கழ்வாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா மனித உரிமை …
Read More »கிளிநொச்சியில் கண்ணிவெடி மீட்பு
கிளிநொச்சியில் கண்ணிவெடி மீட்பு கிளிநொச்சி வட்டக்கச்சியிலுள்ள கிராம அலுவலா் காணியிலிருந்து மிதி வெடி ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. வட்டக்கச்சி சில்வா வீதியில் அமைந்துள்ள கிராம அலுவலகரின் காணியில் துப்பரவு செய்யும் பணியின் போதே காணியில் மிதி வெடி காணப்பட்டுள்ளது. இதனையடுத்து இராமநாதபுரம் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டு அவா்களால் மீட்கப்பட்டு இன்று திங்கள் கிழமை விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச்செய்யடவுள்ளது. …
Read More »விடுதலைப் புலிகளால் மஹிந்தவின் உயிருக்கு அச்சுருத்தல்
விடுதலைப் புலிகளால் மஹிந்தவின் உயிருக்கு அச்சுருத்தல் தமிழீழ விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்காவில் மீண்டும் தலைதூக்குவது நிச்சயமே என்று ஒன்றிணைந்த எதிர்கட்சியின் முக்கிய பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படியும் நல்லாட்சி அரசாங்கத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமய ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் …
Read More »தற்கொலை செய்தால் சம்பந்தனே பொறுப்பு
தற்கொலை செய்தால் சம்பந்தனே பொறுப்பு தமது காணிகளை மீட்கும் தமது போராட்டத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கவனத்தில் எடுக்காமை குறித்து கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். நாளை மறுதினத்திற்குள் உரிய தீர்வு வழங்கப்படாது விடின் தீக்குளித்து தற்கொலை செய்யப்பபோவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏழாவது நாளாக இன்றைய தினமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கடந்த எட்டு ஆண்டுகாளக …
Read More »விட்டுக்கொடுப்பு இல்லாவிடின் 30 வருட துன்பம் தொடரும்
விட்டுக்கொடுப்பு இல்லாவிடின் 30 வருட துன்பம் தொடரும் நாட்டில் வாழும் அனைவரும் பெரும்பான்மை, சிறுபான்மை என்று சிந்திக்காமல் சகலரும் சமத்துவமானவர்கள் எனக் கருதி, விட்டுக் கொடுப்புடன் வாழ முடியாவிட்டால் துன்பம் தொடரும் என கல்முனை ஸ்ரீசுபத்திராம மகா விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார். அன்பையும், ஆதரவையும், கண்ணியத்தையும் வழங்க மறந்தால் கடந்த 30 வருட கால பகைமை உணர்வு இன்னமும் நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முள்ளந்தண்டு வலி, …
Read More »மட்டு. எழுக தமிழ் பேரணியை சர்வதேசம் திரும்பிப் பார்க்க வேண்டும்
மட்டு. எழுக தமிழ் பேரணியை சர்வதேசம் திரும்பிப் பார்க்க வேண்டும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் இன மத பேதம் பாராமல் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இ. துரைரெட்ணம் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி மட்டக்களப்பு மண்ணை சர்வதேசம் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவாவது, அனைவரும் …
Read More »தமிழ் பேரணியில் அனைவரும் ஒன்றிணைவார்கள் – எஸ். வியாழேந்திரன்
தமிழ் பேரணியில் அனைவரும் ஒன்றிணைவார்கள் – எஸ். வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 மேற்பட்ட பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய …
Read More »