யாழில் இந்திய மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 31 பேர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டள்ள இராமேஸ்வரம், புதுக்கோட்டை, தங்கச்சிமடம், தேசாபட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தாம் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தம்மை …
Read More »முஸ்லிம் மக்களுக்கு சமஷ்டி கட்டமைப்பு உருவாக்க வேண்டும் – எஸ். வியாழேந்திரன்
முஸ்லிம் மக்களுக்கு சமஷ்டி கட்டமைப்பு உருவாக்க வேண்டும் – எஸ். வியாழேந்திரன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வு வேண்டுமென்றால், முஸ்லிம் மக்களுக்கென சமஷ்டிக் கட்டமைப்பொன்றை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் தலைமைகள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துதற்கு முன்னர், முஸ்லிம் அரசியல் தலைமைகளுடன் பேசி ஓர் இணக்கப்பாட்டினை …
Read More »சர்வஜன வாக்கெடுப்பிற்கு அனுமதியோம்
சர்வஜன வாக்கெடுப்பிற்கு அனுமதியோம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தை மீறி, நாட்டு மக்களை ஏமாற்றும் வகையில் செயற்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸாமில் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது, ஐக்கிய தேசியக் கட்சியின் அழுக்குகளை கழுவும் ஒன்றாக தற்போது மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நல்லாட்சி …
Read More »சமஷ்டி வேண்டாம் என்ற முட்டாள்களே தமிழ் தலைவர்கள் – மனோ கணேசன்
சமஷ்டி வேண்டாம் என்ற முட்டாள்களே தமிழ் தலைவர்கள் சமஷ்டி முறையிலான அரசியலமைப்பை வேண்டாம் என மறுத்துவிட்ட முட்டாள்களை ஆரம்பகால தலைவர்களாக கொண்ட இனம் தமிழ் இனம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முஹமத் அலி ஜின்னாவை போல 1948 ஆம் ஆண்டு பிடிவாதமாக நின்று தனிநாட்டை பெற முயன்று இருக்கலாம். அல்லது அன்று தென்னிலங்கை …
Read More »தீர்வின்றி 14 ஆவது நாளை எட்டியது கேப்பாபிலவு மக்களின் போராட்டம்
தீர்வின்றி 14 ஆவது நாளை எட்டியது கேப்பாபிலவு மக்களின் போராட்டம் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 14 ஆவது நாளை எட்டியுள்ளது. பிலவுக்குடியிருப்பில் விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளில் தம்மை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த 30 ஆம் திகதி தமது காணிகள் விடுவிக்கப்படும் என தெரிவித்து, கிராமசேவகர், அழைத்தபோதும் …
Read More »அரசுக்கு மஹிந்த அழுத்தம் : தேர்தலை உடன் நடத்துக
அரசுக்கு மஹிந்த அழுத்தம் : தேர்தலை உடன் நடத்துக உள்ளுராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலை, கால்டன் வீட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களின் ஒன்றியத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தல் பிற்போடப்படுவதன் காரணமாக உள்ளுராட்சி நிறுவனங்கள் தற்போது செயலற்று போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி …
Read More »பொறுப்புக் கூறல் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பின்வாங்குகிறது – இரா.சம்பந்தன்
பொறுப்புக் கூறல் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பின்வாங்குகிறது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச குற்றங்கள் தொடர்பான பொறுப்பு கூறல் விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் பின்வாங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிக்கு மாறான அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால், தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் இரா. சம்பந்தன் கூறியுள்ளார். ஐ.நா மனித …
Read More »ஐ.நாவிடம் 18 மாத கால அவகாசம் கோரவுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம்
ஐ.நாவிடம் 18 மாத கால அவகாசம் கோரவுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா அரசாங்கம் 18 மாத கால அவகாசம் கோரவுள்ளது. இந்த நிலையில், கால அவகாசத்தைக் கோருவது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு விளக்கமளிக்கும் முகமாக …
Read More »எழுக தமிழ் பேரணியில் எமக்கு பிரச்சினையில்லை: அரசாங்கம்
“எழுக தமிழ்” பேரணியில் எமக்கு பிரச்சினையில்லை: அரசாங்கம் மட்டக்களப்பில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி தொடர்பில் தமக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட இந்தப் பேரணி, நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுதந்திரத்தை எடுத்துக்காட்டுவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்கட்சி கொழும்பில் பேரணி நடத்தினால் வடக்கு கிழக்கில் எந்தவொருவரும் பேரணியை நடத்துவதில் எந்தவொரு தவறும் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எழுக தமிழ் பேரணி …
Read More »இலங்கை அரசியலில் புதிய அத்தியாயம் மைத்திரி ரணில் அரசு வழிவகுக்குமா? சு.நிஷாந்தன்
இலங்கை அரசியலில் புதிய அத்தியாயம் மைத்திரி ரணில் அரசு வழிவகுக்குமா? சு.நிஷாந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி என்று மக்களால் தோட்கடிக்கப்பட்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகவும் தெரிவுசெய்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் பேரினவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை தோட்கடித்து மீண்டும் இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சியை மலரச்செய்வதற்கு தற்போதைய அரசு கடுமையான பிராயச்சித்தங்களை மேற்கொண்டு வருகின்றமை கண்கூடு. முன்னாள் மஹிந்த அரசின் …
Read More »