தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- (அடைப்புக்குறிக்குள் இருப்பது பழைய பதவி) கவிதா ராமு – அருங்காட்சியகங்கள் இயக்குனர் – (தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக பொது மேலாளர்). டி.அன்பழகன் – ஆவணக் காப்பக இயக்குனர் – (எல்காட் பொது மேலாளர்). எஸ்.சிவராசு – கோயம்புத்தூர் வணிக வரிகள் (அமலாக்கம்) இணை கமிஷனர் – (திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர்). எஸ்.பி.அம்ரித் […]
Author: குமார்
13,140 வங்கி கணக்குகள் மூலம் ரூ. 4574 கோடி கறுப்பு பணம் டெபாசிட் செய்த நிறுவனங்கள்
பிரதமர் மோடி கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மக்கள் தங்களிடம் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றினர். இதற்கிடையே 2000, 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்திற்கு வரதொடங்கின. அந்த கால கட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் தங்களிடம் இருந்த கறுப்பு பணங்களை வங்கிகள் மூலம் மாற்றியதாக கூறப்பட்டது. இந்நிலையில், 13 வங்கிகள் பணமதிப்பு […]
இந்த (2017) ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதங்களை ஒழிக்க பிரசார இயக்கம்
அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது உலகில் உள்ள 101 நாடுகளை சேர்ந்த 468 அமைப்புகள் இணைந்து ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த ‘ஐகேன்’ அமைப்புடன் உலக நாடுகளில் அணு ஆயுதங்களை ஒழிக்கவும், அணு ஆயுதங்களால் ஏற்படும் மிகப்பெரிய பேரழிவை சுட்டிக்காட்டியும் […]
ஜப்பானில் அரசு டெலிவிஷனில் பணிபுரிந்த பெண் திடீரென மரணம் அடைந்தார். இவர் அதிக நேரம் ஓவர் டைம் பணிபுரிந்ததால் மரணம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த பெண் மிவா சடோ (31). இவர் அங்கு அரசு டெலிவிஷனில் பணிபுரிந்து வந்தார். இவர் மாதத்தில் 2 நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்தார். 159 மணி நேரம் ஓவர் டைம் (கூடுதல் நேரம்) பணிபுரிந்தார். இந்த நிலையில் அவர் திடீரென மரணம் அடைந்தார். இவர் அதிக நேரம் ஓவர் டைம் பணிபுரிந்ததால் மரணம் அடைந்து விட்டதாக தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் எற்கனவே […]
சிக்கிம் எல்லையில் டோக்லாம் பகுதியில் மீண்டும் ரோடு போடும் பணியை சீனா மீண்டும் தொடக்கம்
இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லையில் சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பீடபூமி உள்ளது. இதற்கு சீனாவும், பூடானும் சொந்தம் கொண்டாடுகின்றன. இதற்கு பூடானுக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. இந்த நிலையில் டோக்லாம் பகுதியில் சீனா கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி சாலை அமைக்க முயன்றது. அதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து சீனாவும், இந்தியாவும் ராணுவ வீரர்களை குவித்தது. இதனால் […]
ராணுவ வீரர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை: ரஷ்யா புதிய சட்டம்
பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ராணுவ சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது. ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் தொழில்முறை சிப்பாய்களும், மற்ற ராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்ட மசோதா ஒன்றை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. ராணுவ வீரர்கள் இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இதர அம்சங்கள் எதிரிக்கு விவரங்களை […]
ரயில் பயணிகள் இனிமேல், மாதம் தோறும் 12 முறை ஆன்லைன் மூலம் முன்பதிவு
இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது: செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தவர்கள் இனி மாதம் தோறும் 12 முறை ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மாதம் 6 முறை மட்டுமே ஆன் லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலாய் லாமாவின் 1300 வருட பழமையான அரண்மனையை சீரமைக்கிறது சீன அரசு
திபெத் தன்னாட்சிப் பகுதியிலுள்ள பொட்டலா அரண்மனை, 1959-ம் ஆண்டு வரையில் தலாய் லாமாவின் பிரதம வசிப்பிடமாக இருந்தது. இப்போது இது நூதன காட்சிச்சாலையாகவும் உலகப் பாரம்பரியக் களமாகவும் உள்ளது. அரண்மனை 3,700 மீட்டர் (12,100 அடி) உயரத்தில், லகாசா பள்ளத்தாக்கின் மத்தியில் சிவப்பு மலையின் பக்கத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனை 1694-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இதற்கு சுமார் 45 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த அரண்மனை “யு.எஸ்.ஏ டுடே” செய்தித்தாளால் புதிய […]
இந்தோனேசியாவில் 25 அடி ராட்சத மலைப்பாம்பை கொன்று விருந்தாக்கிய கிராம மக்கள்
இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பொதுவாக 20 அடி நீள மலைப்பாம்புகள் உள்ளன. அவற்றை அங்குள்ள கிராம மக்கள் பிடித்து உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், சுமத்ரா தீவின் துணை மாவட்டமான பட்டாங் கன்சாலில் 37 வயது மதிக்கத்தக்க சுடராஜா என்பவர் அங்குள்ள பகுதியில் பாம்பு பிடிக்க சென்றுள்ளார். அப்போது 26 அடி மலைப்பாம்பு ஒன்று அங்கு இருந்துள்ளது. அதனை பிடிக்க முயன்ற போது பாம்பு அவரின் இடது […]
சர்வதேச உஷூ சாம்பியன்ஷிப் போட்டியில் பூஜா கடியன் இந்தியாவிற்கு முதன்முறையாக தங்கப்பதக்கம் பெற்று தந்தார்.
உஷூ மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும். பன்னாட்டு உஷூ கூட்டமைப்பு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் உஷூ போட்டிகளை நடத்துகின்றது. முதல் சர்வதேச போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் 1991-ம் ஆண்டு நடைபெற்றன. உஷூ போட்டிகளில் டயோலு மற்றும் சான்டா என இரண்டு வடிவங்கள் உள்ளன. இந்நிலையில், 14-வது சர்வதேச உஷூ போட்டிகள் ரஷியாவின் கஸான் நகரில் கடந்த […]





