ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைக்கு எதிரான சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கும் மாநாடு இலங்கையில் நாளை நடைபெறவுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு பிராந்திய அமைப்புக்களின் பங்களிப்புடன் நடைபெறும் செயலமர்வில் முக்கிய உரையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தவுள்ளார். நிதி மற்றும் ஊடக அமைச்சு மற்றும் அரச தகவல் திணைக்களமும் இணைந்து முன்னெடுக்கும் இந்த மாநாட்டில் […]
Author: தமிழவன்
மாற்றத்தின் மூலம் நிலையான மகிழ்ச்சி
உடலளவில் பலவீனமாக இருந்தாலும், உள்ளத்தில் தைரியமாகவே இருப்பவர்களே மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்துள்ளன. இதனை பார்க்காமல் உடல் குறையை மட்டும் வைத்து, அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, உரிமை, வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் 1992 முதல் டிச.3ம் தேதி, ‘சர்வதேச மாற்று திறனாளிகள் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ‘மாற்றத்தின் மூலம் நிலையான மற்றும் மகிழ்ச்சியான சமூகத்தை அனவருக்கும் உருவாக்குவோம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. […]
மீனவர்களின் வலையில் சிக்கியது பாம்பா? மீனா? அச்சத்தில் மக்கள்!
மட்டகளப்பில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ள பாம்புகளின் வருகை தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ள நிலையில் இது உண்மையில் பாம்பா? அல்லது ஒரு வகை மீன் இனமா? என பல கேள்விகள் எழுந்தவண்ணமே உள்ளது. உண்மையில் இது ஒரு வகை மண் உழுவி எனப்படும் பாம்பு இனம் என்பதே இதன் பெயராக உள்ளது. இந்த பாம்பினத்தை சிலர் ஆரல் மீன் எனுவும் அழைக்கின்றனர். ஆரல் மீனுக்கும் இந்த வகை பாம்பினத்திற்கும் […]
வீடுகள் தாழிறக்கம், வெடிப்புகளால் மக்கள் இடப்பெயர்வு
வீடுகள் தாழிறக்கம் மற்றும் வீடுகள் வெடிப்புற்று காணப்படுவதன் காரணமாக, அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட சாமிமலை – ஓல்டன் பகுதியை சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மஸ்கெலியா – சாமிமலை ஓல்டன் மேற்பிரிவு, கீழ்பிரிவு, கிங்கோரா, நிலாவத்த ஆகிய தோட்டத்தில் அமைந்துள்ள தற்காலிக குடியிருப்புப் பகுதியில் தாழிறக்கம் மற்றும் வெடிப்புகள் காணப்படுகின்றன. அத்துடன், குடியிருப்பு பகுதியில் நிலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு நீர் வெளியேறுவதனால் அச்சம் நிலவுவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். 25 குடும்பங்களை […]
தனித்தும் சேர்ந்தும் போட்டியிடுவோம்
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அலரி மாளிகையில் சந்தித்து இறுதி சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்கள் என முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். அமைச்சர் மனோ கணேசன் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடவுள்ள உள்ளூராட்சி சபைகள் தொடர்பாக […]
திருமதி சின்னத்தங்கம் விஸ்வநாதன்
கொக்கன் கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தங்கம் விஸ்வநாதன் 01.12.2017 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – சின்னாச்சிப் பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா விஸ்வநாதனின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, கதிரேசம்பிள்ளை, சின்னத்தம்பி, பார்வதிப்பிள்ளை, கிருஷ்ணராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், புஷ்பகாந்தி, காலஞ்சென்ற சாரதாதேவி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும், மேகலா, […]
இலங்கையை நோக்கி மற்றுமொரு புயலா ?
இலங்கைக்கு 1700 கிலோமீற்றர் தொலைவில் தெற்கு அந்தமான் தீவுகளை அண்டிய பகுதியில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குறைந்த தாழமுக்க வலையமானது எதிர்வரும் சில தினங்களில் வலுவடைந்து வங்காள விரிகுடா கடற்பரப்பினூடாக இந்திய நிலப்பரப்பிற்குள் இதன் தாக்கம் ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறைந்த காற்றழுத்த வலயமானது எதிர்வரும் 5 ஆம் அல்லது 6 ஆம் திகதிகளில் இலங்கையின் ஊடாக மேற்கு திசையில் செல்ல உள்ளதால் […]
சீ இவ்வளவு கேவலமானவரா அமலாபால்? கழுவி ஊற்றிய எடிட்டர்!!
சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் அமலா பால், பிரசன்னா, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அமலாபால் இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். படத்தில் என் தொப்புள் தெரிவது இவ்வளவு பெரிய விஷியமாக பேசப்படும் என நான் நினைக்கவில்லை. நாம் 2017 ஆம் ஆண்டில் வாழ்கிறோம். இருப்பினும் என் தொப்புள் தெரிவது பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது என பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். இந்நிலையில், […]
திருவண்ணாமலை 2,668 அடி உயர மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது
பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக திகழ்வது இந்த திருத்தலம் திருவண்ணாமலை. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் தீபத்திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து, 10ம் நாளான இன்று முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடந்தது. இதில், சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழுங்க பரணி தீபம் அதிகாலை ஏற்றபட்டது. இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அருணாசலேசுவரர் தரிசனம் பெற்றனர். இதையடுத்து, 200 […]
ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் அறிவிப்பு
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதை அடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகியுள்ளன. அதிமுக வேட்பாளராக மதுசூதனன், திமுக வேட்பாளராக மருதுகணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் சுயேட்சைகளாக தினகரன் மற்றும் தீபா ஆகியோர்களும் போட்டியிடவுள்ளனர். இந்த நிலையில் பாஜக சார்பில் பிரபலமான வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவார் என்று அந்த கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். ஆனால் வேட்புமனு தாக்கலுக்கான […]





