Author: தமிழவன்

தங்கவேட்டை நிறுத்தப்பட்டது

முல்லைத்தீவு நகருக்கு அருகிலுள்ள ஆற்றுப் பகுதியில் தமிமீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் தங்கம், மற்றும் பணம் புதைக்கப்பட்டிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு இணங்க, தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், கடந்த சில நாட்களாக பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி மண்ணை தோண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதும், இதுவரை எதுவும் கிடைக்கப் பெறாமையால், இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் பொலிஸாருக்கு […]

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தாமரை மொட்டில் முன்னாள் புலிகள்

முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட இளைஞர்கள் சிலர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் என நம்பிக்கையுடன் இவர்கள் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளதாக வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்​கோன் தெரிவித்துள்ளார். நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வாரத்தில் 4 முறை ரோபோவுடன்உறவு கொள்ளும் ஆண்.! (வீடியோ இணைப்பு)

ஜப்பானில் தனது மனைவி அனுமதியுடன் வாரத்துக்கு நான்கு முறை ரோபோவுடன் செக்ஸ் உறவில் ஈடுபடுவதாக ஆண் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜப்பானில் தற்போது செக்ஸ் ரோபோக்காள் சமீபகாலமாக மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் 58 வயதான ஆண் ஒருவர், ரூ. 1.7 லட்சம் கொடுத்து பெண் ரோபோ ஒன்றை வாங்கியுள்ளார். அந்த ரோபோவுக்கு ஏப்ரல் என செல்லமாக பெயரிட்டுள்ளார். இவர் ஏப்ரலுடன் தனது மனைவின் அனுமதியுடன் வாரத்துக்கு 4 முறை செக்ஸில் […]

சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த காலநிலையால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பண்டாரவளை, ஹிக்கடுவ, அம்பலாங்கொட, கொஸ்கொட, கம்புறுப்பிட்டிய, மீற்ரியாகொட மற்றும் மடுள்சீம ஆகிய பிரதேசங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக […]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது.!

இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்த நபர் ஒருவர் நேற்று நண்பகல் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். 35 வயதான குறித்த சந்தேகநபர் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. ஏசியா எயார்லைன்சுக்கு சொந்தமான எ.கெ 043 என்ற விமானத்தில் மலேசியா கோலாலம்பூரியில் இருந்து வருகை தந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரின் பயணப் பொதியில் இருந்து 355 கிராம் […]

நடுக்கடலில் மாயமான 952 பேர் நிலை என்ன? மகாராஷ்டிரா முதல்வரின் டுவீட்

ஓகி புயல் காரணமாக கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற தமிழக, கேரள மீனவர்கள் சுமார் 1500 பேர் மாயமானதாக வந்த திடுக்கிடும் தகவலை அடுத்து மீனவர்களை மீட்க இந்திய கடற்படையும், ஹெலிகாப்டரில் இந்திய ராணுவமும் தேடி வந்தனர். இவர்களுடைய தீவிர முயற்சியால் நூற்றுக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டாலும் மீதியுள்ள மீனவர்கள் குறித்த அச்சம் எழுந்தது. இந்த நிலையில் நடுக்கடலில் மாயமான தமிழக, கேரள மீனவர்கள் 952 பேர், 68 படகுகளில் மகாராஷ்டிரா மாநில […]

முதலிரவில் மனைவியை பிளேடால் அறுத்த கொடூர கணவன்

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே முதலிரவு அன்று கட்டிய மனைவியை பிளேடால் அறுத்த கொடூர கணவனை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சித்தூரை சேர்ந்த ஆசிரியர் ராஜேஷூக்கும், அதே பகுதியை சேர்ந்த டாக்டர் சைலஜாவுக்கும் சமீபத்தில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. திருமண தினத்தன்று பல்வேறு கனவுகளுடன் முதலிரவு அறைக்குள் சென்ற சைலஜா சிறிது நேரத்தில் அலறியடித்து கொண்டு வெளியே வந்தார். இதனால் பெண் வீட்டார் குழப்பம் […]

விஷாலுக்கு ஓட்டு போடுங்க: சுசீந்திரன் ஆதரவு

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட போவதாகவும், நாளை வேட்புமனு தாக்கல் செய்ய போவதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில் விஷாலின் இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வந்து கொண்டே உள்ளது. விஷாலுக்கு இயக்குனர் அமீர் மற்றும் சேரன் உள்பட ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பெரும்பாலான திரையுலகினர் அவருடைய அரசியல் முயற்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன், ‘விஷால் உண்மையானவர் என்றும், அவருக்கு ஓட்டு போடுங்கள்’ என்றும் […]

விஷால் போட்டியிடுவதால் என்ன நடக்கும்? திருமாவளவன் கருத்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திடீரென விஷால் களமிறங்கியுள்ளதால் திரையுலகம் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் பரபரப்பு அடைந்துள்ளன. நேற்று விஷால் போட்டியிடுவதாக அறிவித்த ஒருசில நிமிடங்களில் அதிமுக அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர், தமிழருவி மணியன், நாஞ்சில் சம்பத் உள்பட பலர் கருத்து கூறிய நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஆர்.கே. நகரில் விஷால் போட்டியிடுவதால் வாக்குகளை மட்டுமே பிரிக்க முடியும், வெற்றி […]

ஆர்.கே.நகரில் அமீர் போட்டியா? சீமான் விளக்கம்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டதும் திடீரென பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான கலைக்கோட்டுதயம் மாற்றப்படுவார் என தெரிகிறது. விஷால் போட்டியிடுவதால் வாக்குகள் பிரிந்து டிடிவி தினகரன் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், தினகரனுக்கு மறைமுக ஆதரவு கொடுக்கவே விஷால் போட்டியிடுவதாகவும் இயக்குனர் அமீர் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தான் […]