திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்த திருமணவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி காலை காரில் சென்றார். காரை அவருடைய டிரைவர் மேத்யூ என்பவர் ஓட்டினார். அவருடன் சேலத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவரும் சென்று உள்ளார். இவர்கள் சென்ற கார், திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள அஞ்சலி ரவுண்டானா மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் இடதுபக்க தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது. இதில் […]
Author: தமிழவன்
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்’ டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அது குறித்த அறிவிப்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நள்ளிரவில் வெளியிட்டார். மேலும் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மாற்றவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். சர்வதேச அளவில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கிற முதல் உலக நாடாக அமெரிக்கா திகழ்கிறது. முன்னதாக இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, பாலஸ்தீன நிர்வாக தலைவர் மகமது […]
தொப்பி சின்னம் யாருக்கு கிடைத்துள்ளது தெரியுமா?
சென்னை ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன், தொப்பி சின்னத்தை பெற சுப்ரீம் கோர்ட் வரை சென்றும் அவரால் இந்த விஷயத்தில் வெற்றி பெற முடியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், அந்த சின்னம் மக்கள் மனதில் பதிய பணத்தை தண்ணீராக செலவு செய்ததாக கூறப்பட்டது. எனவே மீண்டும் அதே சின்னத்தை பெற்றால் வெற்றி பெறுவது எளிது என்பதால் அந்த […]
8 மாத கர்ப்பிணியை பலாத்காரம் செய்து தீ வைத்த ராணுவ வீரர்!!
மியான்மரின் வடக்கு பகுதியில் வசித்து வரும் ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு ஆளாகிவருகின்றனர். ராணுவத்தினரின் தாக்குதலுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பிச்செல்கின்றனர். பெரும்பாலான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு தப்பி செல்கின்றனர். இதுவரை சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில், ராணுவத்தினரின் கோரமான தாக்குதல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரோஹிங்கிய முஸ்லிம் பெண் ஒருவர் இது குறித்து கூறியதாவது, நான் 8 மாத […]
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல், வாபஸ் ஆகியவை முடிந்து, தற்போது ஆர்.கே.நகர் தேர்தலுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டிடிவி தினகரன் தனக்கு தொப்பி சின்னம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் இதே சின்னத்தை மேலும் 29 பேர் கேட்டுள்ளதால் தினகரனுக்கு தொப்பி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. […]
யானைத் தந்தங்களுடன் இருவர் கைது
யானைத் தந்தங்களை அனுமதியின்றி வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபர்களைக் கைது செய்த நிக்கவரெட்டிய புலனாய்வுப் பொலிஸார், அவர்களிடமிருந்து யானைத் தந்தங்களின் ஏழு பாகங்களைக் கைப்பற்றினர். மீகலேவ மற்றும் கிரிபாவ பகுதிகளில் கைது செய்யப்பட்ட இவ்விருவரும் கல்கமுவை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கடும் காற்றுடன் இன்று கனமழை.!
வட அந்தமானில் ஏற்பட்ட குறைந்த வலுவான தாழமுக்கத்தின் தொடராக வங்காள விரிகுடாவில் ஏற்படும் தாழமுக்கத்தினால் உருவாகும் கடுங்காற்று இலங்கை திருகோணமலையிலிருந்து 850 கிலோமீற்றர் தூரத்திலேயே இன்று பயணிக்கின்றது. இது கடலின் வடக்கு திசையில் இந்தியாவை நோக்கி பயணிப்பதால் இன்று இலங்கையிலும் இடிமின்னலுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகின்றது என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பிரேமலால் தெரிவித்தார். நேற்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் […]
16 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்
வவுனியா, ஓமந்தை பகுதியிலுள்ள 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா, ஓமந்தை அலகல்லுபோட்டகுளம் பகுதியிலுள்ள 16 வயதுடைய சிறுமியின் வீட்டிற்குச் சென்று நல்லுறவுடன் பழகிய நபர் ஒருவரே இவ்வாறு 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று மாணவி வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை குறித்த மாணவி கர்ப்பம் என அறியவந்துள்ளதையடுத்தும் கடந்த […]
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி
சிவில் பாதுகாப்பு பிரிவி னரால் வன்னிப் பிரதே சத்தில் இயக்கப்படும் முன் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கட்டாய இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்படு கின்றனர். அவர்கள் தமது பணியிலிருந்து இதன் காரணமாக விலகுகின்றனர். இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஆர்னோல்ட் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட் டது. பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் உரையாற்றிய […]
மகாதேவா சிறுவர் இல்ல குழப்ப நிலையை
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மகாதேவா சிறுவர் இல்லத்தில் தற்போது ஏற்பட்டுள்ள திடீர் குழப்ப நிலை தொடர்பில் ஆராய்ந்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தினார். வடக்கு மாகாண சபையின் 111ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் இடம்பெற்றது. இந்த அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பி னர் ஜெயசேகரம் மகாதேவா சிறுவர் இல்லத்தில் உள்ள திடீர் குழப்பநிலை தொடர்பில் மாகாண […]





