போலியான அனுமதிப் பத்திரத்தைத் தயாரித்து டிப்பர் வாகத்தில் மணல் கடத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறிய லில் வைகுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று உத்தரவிட் டது. முல்லைத்தீவு, புதுக் குடியிருப்புப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மணல் எற்றிச்சென்ற டிப்பர் வாகனங்கள் மறித்து சோதனையிடப் பட்டன. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட் டங்களின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெலிக்கன்ன வின் உடனடி முறிய டிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி […]
Author: தமிழவன்
ஆசனப் பங்கீட்டு விவரம்!!
யாழ்ப்பாணம்- இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி யாழ்ப்பாணம் மாநகர சபை சாவகச்சேரி நகர சபை பருதித்துறை நகர சபை சாவகச்சேரி பிரதேச சபை பருதித்துறை பிரதேச சபை வலி.வடக்குப் பிரதேச சபை ரெலோ- வல்வெட்டித்துறை நகர சபை ஊர்காவற்துறை பிரதேச சபை காரைநகர் பிரதேச சபை நெடுந்தீவு பிரதேச சபை கலப்பு ஆட்சி (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் ரெலோ) நல்லூர் பிரதேச சபை வேலணை பிரதேச சபை […]
க.பொ.த. சாதாரண தர பரீட்சை நாளைமறு நாள் ஆரம்பம்
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 8.30 மணியளவில் பரீட்சைகள் ஆரம்பமாகும். எனினும் பரீட்சார்த்திகள் 8 மணியளவில் பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்க வேண்டும். பரீட்சைக்கு சமுகமளிக்கும்போது பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள […]
93 உள்ளூராட்சி சபைகளுக்கு 14 ஆம் திகதி வரை வேட்புமனு ஏற்பு
93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் நாளை 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி பகல் 12.00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும். தேர்தல் நடைபெறும் திகதியை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் அன்றைய தினம் அறிவிப்பார்கள். வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட கச்சேரி சூழலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
கால நிலை மாற்றத்தால் கடல் உணவுவகைகள் நஞ்சாக மாறும் ஆபத்து.!
காலநிலை மாற்றத்தின் விளைவாக ஆக்டிக் கடலில் இருந்து, இந்து சமுத்திரம் வரை புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. வெறும் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல, பவன வெப்பம் அதிகரித்து வருதல் மற்றும் துருவப் பனிமலைகள் உருகுதல் என்பன பெரும் ஆபத்தை விளைவிக்க வல்லனவாக உருவாகியிருக்கின்றன. வளி மண்டல வெப்பம் உயர்தல், தவிர மண்ணையும் கடலோரங்களையும் வெகுவாகப் பாதித்து பெரும் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இவ்வகைப் பாதிப்புகளில் கடலோரங்களில் கொட்டப்படும் கழிவுகள் பெரும் பங்களிப்புச் […]
மூடப்படும் நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்?
உறுதியானதும் நிலையானதுமான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால், தேசிய விமான சேவையான ‘ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்’ நிறுவனம் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக அதன் தலைவர் அஜித் டயஸ் தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் பிரதான கடன் வழங்குனர்களான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன நெருக்கடியான சூழலில் இருப்பதாகவும் இந்த ஆபத்தில் இருந்து நிறுவனம் தப்புவதற்கு இரண்டே வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “ஒன்று, நிறுவனத்திற்கு புதிதாக ஒரு சம பங்குதாரரை இணைத்துக்கொள்ளவேண்டும். அப்படியொரு […]
ஆர்.கே.நகரில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்!!
ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. கடந்த முறை பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்ற காரணத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த முறையும் அதேபோன்று நடந்துவிட கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. இன்று வாகன சோதனை நடத்தியபோது, ஒரு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல் […]
மீனவர்களை மீட்கக்கோரி சென்னையில் போஸ்டர் ஓட்டிய 2 பேர் கைது
ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க வலியுறுத்தி சென்னையில் போஸ்டர் ஓட்டிய புரட்சிகர மாணவர் முன்னணியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலையில் மீனவர்களை மீட்டுத்தரக்கோரி அவர்களது உறவினர்கள் மூன்று நாட்களாக தொடர்ந்து குழித்துறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் ஆங்காங்கே பரவலாக மீனவர்களை மீடகக் கோரி, மீட்பு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து […]
பெற்றோருக்கு முழு அறிவு வேண்டும்!
மாணவர்கள் காப்பீட்டுத்திட்டம் தொடர்பாக பெற்றோர்களும் பூரணமாக அறிந்து வைத்திருக்கவேண்டும். காப்புறுதி பெறுவதில் கடப்பாடுகள் இருக்கின்றன. எனவே பெற்றோர் அதைப்பற்றிய விளக்கத்துடன் இருந்தாலே உரிய நன்மையை இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம். வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இலவச காப்பீட்டுத்திட்டத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வலய கல்விப்பிரதிநிதியும் தமிழ்பாட ஆசிரிய ஆலோசகருமான நிறைமதி தெரிவித்தார். அவர் மேலும் தனது உரையில் தெரிவித்ததாவது: மாணவ சமூகத்தை முன்னேற்று வதன் […]
வீதியை சீரமைக்கக் கோரிக்கை
தாளையடியில் இருந்து கட்டைக்காடு செல்லும் முதன்மை வீதியை சீரமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியில் உள்ள கட்டைக்காடு கிராமத்தையும் தாளையடிக் கிராமத்தையும் இணைக்கம் முதன்மை வீதி மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த கட்டைக்காட்டினைச் சேர்ந்த விமலதாஸ் தெரிவித்ததாவது; ‘நான் 12 வயதில் இருக்கும்போது இந்த வீதியில் பள்ளிக்கு நடந்துசென்றேன். அப்போதிலிருந்து இன்றுவரை, சுமார் […]





