காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள சனிபகவான் தலமான தர்பாரண்யேஸ்வரசுவாமி கோவில் நேற்று முன்தினம் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி கோவில் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அங்குள்ள நளதீர்த்தத்தில் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று சனிபகவானை தரிசனம் செய்தனர். ஒரேநேரத்தில் 10 ஆயிரம் பக்தர்கள் புனிதநீராடும் வகையில் குளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு […]
Author: தமிழவன்
என்னது சசிகலா இறந்துவிட்டாரா? பிரபலத்தின் டுவீட்டால் பரபரப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் நாட்டின் தேரிக் இ இன்சாஃப் என்ற அரசியல் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் தனது டுவிட்டரில் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகையும், அரசியல்வாதியுமான சசிகலா இறந்துவிட்டார் என்றும், அவருடைய வீட்டில் இருந்து கிலோ கணக்கில் பணம், நகைகள் கைப்பற்றப்பட்டதாகவும் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார் இந்த தவறான டுவீட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் அரசியலே சரியாக தெரியாத நிலையில் அவர் ஏன் […]
ஜெ.வின் வீடியோ போயஸ் கார்டனில் எடுக்கப்பட்டதா?
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தற்போது வெளியிட்டுள்ளார். 20 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்த நிலையில், பழச்சாறு பருகியபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார். ஜெ.வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், முதன் முதலாக தினகரன் தரப்பில் இருந்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு […]
ஜெயலலிதா மரணம் பற்றி போலீசில் புகார் அளித்த 302 பேரிடம் விசாரிக்க முடிவு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்து வருவதாகவும், அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும் என்றும் சிலர் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனுக்கள் […]
பிரான்ஸ் நாட்டில் ஒரு கின்னஸ் சாதனை
பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு திருமணத்தில் மணப்பெண் சுமார் 8 கிமீ நீளத்தில் உள்ள ஆடையை அணிந்து திருமணம் செய்து கொண்டார். உலகிலேயே இதுதான் நீளமான திருமண ஆடை என்ற கின்னஸ் சாதனையை இந்த ஆடை அடைந்துள்ளது கின்னஸ் சாதனை பெற்ற இந்த ஆடையின் நீளம் 8095 மீட்டர். அதாவது எட்டு கிலோமீட்டருக்கும் மேல். இந்த ஆடையை அமைக்க 2 மாதங்கள் சுமார் 15 ஊழியர்கள் வடிவமைத்துள்ளனர். இதற்கு முன்னர் […]
விரக்தியில் குடும்பமே தற்கொலை!!
திருப்பூரில் இளைஞர் ஒருவர் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கலப்புத் திருமணம் செய்து கொண்டதால், விரக்தியில் இளைஞனின் குடும்பமே தற்கொலை செய்து கொண்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் மறையூரைச் சேர்ந்தவர் முருகன்(50). இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், பானுப்பிரியா என்ற மகளும், பாண்டியராஜன் என்ற மகனும் இருந்தனர். முருகன் டீ எஸ்டேட் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். மகள் பானுப்பிரியா அருகில் உள்ள கல்லூரியில் படித்து […]
ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடந்தே தீரும்
ஆர்.கே நகரில் பணப் பட்டுவாடா காரணமாக இடைத்தேர்தல் ரத்தாகிறது எனப் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தள்ளிப்போன சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை(டிசம்பர் 21-ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஆளுங்கட்சியான எடப்பாடி அணியின் சார்பில் மனுசூதனனும், ஆளுங்கட்சியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் […]
சிறுமிகளை கற்பழிக்கும் காம மிருகங்களுக்கு மரண தண்டனை?
சிறுமிகளை கற்பழிக்கும் காம மிருகங்களுக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யும் மசோதாவை மத்தியப்பிரதேச அரசு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுபோன்ற கொடூரங்கள் தொடராமல் இருக்கவும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களை முடிவுக்கு கொண்டு வரவும் மத்தியப்பிரதேச அரசு, சட்டசபையில் சமீபத்தில் ஒரு புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது. சிறுமிகளை கற்பழிக்கும் காம மிருகங்களுக்கு மரண தண்டனை […]
கிரக தோஷங்களை நீக்கி நன்மைகள் வழங்கும் ஸ்படிக லிங்கம்
பல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து ஸ்படிக லிங்கம் செய்வார்கள். ஸ்படிக லிங்கம் என்பது பொதுவாக நீண்ட குச்சி போன்ற வடிவமும், சுமார் ஒரு இன்ச்சிலிருந்து, பத்து இன்ச் வரை உயரமும் ஆறு முகங்கள் அல்லது பட்டைகள் உடையதாகவும் இருக்கும். இந்த ஸ்படிக லிங்கங்கள் அனைத்து கிரக தோஷங்களையும் மிக முக்கியமாக எதிர்மறை சக்திகளை […]
விவாகரத்து கேட்டு கோர்ட் வாசல் ஏறிய டிடி!!
பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி) தனது கணவரிடம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த 2014 ஆம் அண்டு ஜூன் 29 ஆம் தேதி நடிகை டிடி தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். டிடிக்கும் அவரது கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது. தனுஷ் இயக்கத்தில் ப.பாண்டி […]





