150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப்போகும் முழு சந்திர கிரகணம் வரும் 31 ஆம் தேதி தோன்றவுள்ளது. இது Blue Moon Eclipse என அழைக்கப்படுகிறது. மேலும், 2018 ஆம் ஆண்டு தோன்றும் முதல் கிரகணம் இதுவாகும் இந்த சந்திர கிரகணம் மொத்தமாக 77 நிமிடங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் இந்த கிரகணத்தால் பசிபிக் பெருங்கலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கிரகணத்தின் போது […]
Author: தமிழவன்
ரஜினிகாந்த் ஒரு 420: சீண்டும் சுவாமி!
நடிகர் ரஜினிகாந்த தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் வழக்கத்தைவிட வேகமாக செயல்பட ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ரஜினியை சீண்டியுள்ளார். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆரம்பம் முதலே நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்து வருகிறார். பலமுறை ரஜினியை மிகவும் கடினமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசத்தை சுப்பிரமணியன் சுவாமி ரசிக்கவுமில்லை, விரும்பவுமில்லை. இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேச […]
போர்ப்பாதிப்புகளில் மாற்றங்கள் இல்லை
நீண்டகாலப் போரால் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்த மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்தக் கூடிய மாற்றங்கள் இன்னமும் ஏற்படவில்லை – என அமெரிக்க மிசன் திருச்சபையின் முன்னாள் தலைவர் அருட்தந்தை ஈனோக் புனிதராஜ் தெரிவித்தார். அராலி தேவாலயத்தில் புதுவருட நள் ளிரவுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்து மறையுரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் ஆயுதமோதல் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து எதிர்வரும் எட்டாம் திகதியுடன் நான்காவது […]
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை பரப்புரைகளில் தவிர்த்து கொள்ளப்பட வேண்டும்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தர முடியாதவர்கள் இந்தப் பிரச்சினையை தேர்தல் காலங்களில் பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும். பயன்படுத்துவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினது தலைவி யோகராசா கனகரஞ்சனி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: போர் முடிவுக்கு வந்து எட்டு வருடங்களை […]
நீர்வேலியில் சற்றுமுன்னர் விபத்து: இருவர் உயிரிழப்பு!!
நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு முன்பாக சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டியும் கயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்துள்ளது. விபத்தில் பருத்தித்துறைப் பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்தனர். அவர்களில் 5 வயதுச் சிறுமியும் உயிரிழந்தார் எனத் தெரியவருகிறது.
சுவிடனில் வித்தியாசமான சூரிய கதிர் எதிரொளி: வைரல் வீடியோ!!
சூரியனின் கதிர்கள் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும் போது சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரியும். இது மிகவும் சாதரணமான ஒன்றுதான். ஆனாலும், சுவீடன் நாட்டில் காணப்படும் ஒளிவட்டம் வித்தியாசமானதாக இருக்கும். அதாவது, சுவீடனில் நடுவில் சூரியனும் அதன் வலது மற்றும் இடது பக்கத்தில் சூரியனின் பிரதிபலிப்பும் தெரியும். இந்நிலையில், இதற்கான அறிவியல் காரணத்தை நாசா விளக்கியுள்ளது. நாசா கூறியுள்ளதாவது, ஒளிவட்டமானது சூரியனை பெரிய லென்சால் பார்ப்பது போல இருக்கும். அதாவது […]
கணவனின் சிகிச்சைக்காக பெற்ற குழந்தையை விற்ற மனைவி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவரின் சிகிச்சைக்கு பணமில்லாததால் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஸ்வரூப் மௌர்யா. இவரது மனைவி சஞ்சு தேவி. இவர்களுக்கு 15 நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கிய மௌர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் பலத்த காயமடைந்த கணவருக்கு சிகிச்சை அளிக்க பணமில்லாமல் சஞ்சு தேவி […]
2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் – 12 ராசிகள்
2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் – 12 ராசிகள் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மேஷம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – ரிஷபம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மிதுனம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – கடகம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – துலாம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – விருச்சிகம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – தனுசு 2018 […]
பிரச்சனைகள் வந்தபோது எங்க போனார்?
ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்களிடம் மத்தியில் தனது அரசியல் நிலைபாடு குறித்து அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:- தமிழ் நாட்டில் மட்டும்தான் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் […]
பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய படை தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எல்லைப்பகுதியில் தொடர்ந்து இந்திய படைகள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் நேற்று புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் […]





