தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு தரப்பினர் சந்தேகத்தை எழுப்பி வந்தனர். இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி விசாரணை ஆணைய தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் குறித்து புகார் அளித்தவர்களையும், புகாருக்கு உள்ளானவர்களையும் விசாரித்து […]
Author: தமிழவன்
செங்கோட்டையன் தான் எங்கள் முதல்வர்
அதிமுகவை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் இன்றைய வாதத்தின் போது தகுதி நீக்கம் செய்ய 18 எம்எல்ஏக்கள் தரப்பை நோக்கி நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். ஆளுநரிடம் எதற்காக புகார் அளித்தார்கள் என்று கேட்டார் நீதிபதி. அதற்கு முதல்வர் மீதான எங்களின் அதிருப்தியை ஆளுநரிடம் தெரிவித்தோம் […]
ஆட்சியை கலைக்க குதிரை பேரம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க சில எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க தினகரன் தரப்பு குதிரை பேரம் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் இந்த கூட்டத்தில் முதல் முறையாக கலந்து கொண்டுள்ளார். ஆளுநர் தன்னுடைய உரையை தொடங்கியதுமே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் […]
சசிகலா அடித்த அடியில் ஜெ. கன்னத்தில் ஏற்பட்ட அந்த புள்ளிகள்
சசிலா ஜெயலலிதாவை ஆணிக்கட்டையால் அடித்ததே அவர் கன்னத்தில் ஏற்பட்ட புள்ளிகளுக்கு காரணம் என அதிமுக முதன்மை செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பீதியை கிளப்பியுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆறுமுகசாமி தலைமையில் நடந்து வருகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பொன்னையன் கூறியுள்ளது புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. அவர் கூறியதாவது:- ஜெ.கன்னத்தில் உள்ள புள்ளிகள் என்பார்மிங்கிற்கு அப்பாற்பட்ட புள்ளிகள் என்று அரசு மருத்துவர் சுதா சேஷையன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். […]
சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார்
சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார் என்று நமல் ராஜபக்சே கூறியிள்ளார். ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார். இலங்கை தமிழர்கள் மீது சீமானுக்கு உண்மையில் அக்கறையில்லை. தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் சீமான் எழுப்பிய கேள்விக்கு நமல் ராஜபக்சே டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயம் ரவி
தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் மலேசியாவில் நடைபெற்று வரும் நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொண்டனர். திரையுலகை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு நாட்களாக கலைவிழா ரஜினி கமல் முன்னிலையில் நடைபெற்றது. நடிகர் ஜெயம்ரவி உடல்நிலை சரியில்லாத போதும் இவ்விழாவில் கலந்துகொண்டார். ஆனால் அவருக்கு கடுமையான ஜுரம் அடித்ததால் தற்போது மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதே போல், கால்பந்து போட்டியின் […]
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமம்
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமமானது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். கமல்ஹாசனை தொடர்ந்து ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கடந்த மாதம் 31ஆம் தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் வாரப்பத்திரிகை ஒன்றில் எழுதும் தொடரில் ஆர்.கே.நகர் குறித்து விமர்சித்தது பெரும் பரபப்பை ஏற்படுத்தியது. இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். […]
இராமநாதபுரம் தாக்குதல்: தாயும், மகனும் மறியலில்
இராமநாதபுரம் – மாயவனூர் பகுதியில் மூன்று வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அத்துடன் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேகநபரின் தாயாரும் கைதுசெய்யப்பட்டார். இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் – என்று இராமநாதபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரி சதுரங்க தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: மாயவனூர்ப் பகுதியில் இருதினங்களுக்கு முன்னர் இரவுவேளையில் வீடுகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டன. ஏழு பேர் கொண்ட குழு வீடுகளுக்குள் புகுந்து தாக்கியது. […]
பூநகரியில் நள்ளிரவு விபத்தில் ஒருவர் சாவு!!
பூநகரி, செல்விபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்தார். விபத்துக்குக் காரணமானது எனக் குற்றஞ்சாட்டப்படும் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டார். சாரதியைக் காப்பாற்றுவதற்காக விபத்துக்குக் காரணம் உயிரிழந்தவர் பயணித்த உந்துருளி (மோட்டார் சைக்கிள்) மாட்டுடன் மோதுண்டதே என்று பொலிஸார் ஏமாற்ற முற்படுகின்ற னர் எனச் சந்தேகம்கொண்ட உறவினர்கள் சடலத்தைப் பொறுப்பேற்கமாட்டோம் என்று கூறிப் போராட்டம் நடத்த முற்பட்டதால் கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் […]
புதிய அரசமைப்பு நிறைவேறாது ?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது என்ற செய்தி பெப்ரவரி 11ஆம் திகதி வருமாக இருந்தால், புதிய அரசமைப்பை நிறைவேற்ற முடியாது போகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் கொடுத்திருந்த ஆணையை மக்கள் மீளவாங்கி விட்டார்கள் என்ற செய்தி வரக்கூடாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பருத்தித்துறையில் நேற்று இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். […]





