Author: தமிழவன்

பாக்தாத்தில் கார் குண்டுவெடிப்பு தாக்குலில் 21 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வடக்கு பகுதியில் உள்ள டாஸ் குர்மாமுட்டில் காய்கறி சந்தை உள்ளது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் சந்தையில் திடீரென கார் குண்டு வெடிப்பு மூலம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குலுக்கு இதுவரை எந்தவித பயங்கரவாதமும் பொறுப்பேற்கவில்லை. காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை உறுதி -அதிபர் சிறிசேனா

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று குவித்தது. இதுதொடர்பான புள்ளிவிவரங்கள், ஐ.நா. சபையில் அறிவிக்கப்பட்டு, இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச நீதிவிசாரணை தேவையை வலியுறுத்தி பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதுவரை இந்த இனப்படுகொலை குறித்து, இலங்கை ராணுவத்தினருக்கு ஆதரவாக பேசிவந்த அதிபர் சிறிசேனா, முதன்முறையாக போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை ராணுவத்துக்கு எதிராக பகிரங்கமாக […]

ஈராக் நில நடுக்கம் பலி எண்ணிக்கை 328

ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஹலாப்ஜா நகரத்தில் நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 -ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஏராளமான பொருள்கள் விழுந்து சேதமடைந்துள்ளன. மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 328 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் நடைபெறுவதால் பலி எண்ணிக்கை […]

நெகமம் அருகே பிளஸ்–2 மாணவி உயிருடன் எரித்துக்கொலை காதலன் கைது

கோவை மாவட்டம் நெகமம் அருகே செஞ்சேரிப்புதூரை சேர்ந்தவர் கமலா (வயது 75). இவருடைய பேத்தி ஜான்சிபிரியா (17). இவருக்கு தாய், தந்தை இல்லை. இதனால் பாட்டி கமலா வீட்டில் தங்கி அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் செல்வகுமார் (22). விசைத்தறி தொழிலாளி. செல்வகுமாரும், ஜான்சிபிரியாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இவர்களுடைய காதல் […]

ஈராக் நில நடுக்கம் பலி எண்ணிக்கை 210

ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து 350 கி.மீ. தூரத்தில் உள்ள ஹலாப்ஜா நகரத்தில் நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 -ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஏராளமான பொருள்கள் விழுந்து சேதமடைந்துள்ளன. மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 210 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் நடைபெறுவதால் பலி எண்ணிக்கை […]

சன்னி லியோனும்.. வளர்ப்பு மகளும்.

கவர்ச்சிப் புயல் சன்னி லியோனை பற்றிய வித்தியாசமான விஷயம் இது. அவர் தனது வளர்ப்பு மகள் நிஷாவுடன் ஜாலியாக முதல்முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட சந்தோஷத்தில் இருக்கிறார். அந்த அனுபவம் குறித்து சன்னி லியோனிடம் பேசுவோம்: மகளுடன் உங்களின் வெளிநாட்டுச் சுற்றுலா எப்படி இருந்தது? அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் முடிந்த அளவு ஜாலியாக பொழுதைக் கழிக்கவேண்டும் என்பது எங்கள் திட்டம். அங்கு எனது கணவர் டேனியல் வெப்பரின் குடும்பத்துடன் இனிமையாக […]

பேய் படங்களில் நடிக்க விரும்புகிறேன் நடிகை திரிஷா பேட்டி

பேய் படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று நடிகை திரிஷா கூறினார். இதுகுறித்து நடிகை திரிஷா அளித்த பேட்டி வருமாறு:– 15 வருடங்கள் ‘‘சினிமாவில் 10 ஆண்டுகளை தாண்டுவது கஷ்டம். ஆனால் நான் 15 வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். அழகி போட்டிகளில் வென்று இன்னொரு நடிகைக்கு தோழியாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பதை அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன். தற்போது 7 படங்கள் கைவசம் உள்ளன. […]

மணிலாவில் ஆசியன் மாநாடு துவங்கியது

ஆசியான் நாடுகளின் 50–வது ஆண்டு சிறப்பு விழா, 15–வது இந்தியா–ஆசியான் மற்றும் 12–வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகள் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். பிரதமர் ஆன பிறகு மோடி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு செல்வது இதுவே முதல் முறை ஆகும். மணிலா சென்றடைந்த மோடிக்கு […]

ஈரானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 135 ஆக அதிகரிப்பு,

ஈரான் -ஈராக் எல்லையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுலமெனியா என்ற இடத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது. துபாய், அபுதாபி, ஐக்கிய அரபு நாடுகளில் பல இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தால் ஈராபில், தூகூக், அல்பஜ்ஜா ஆகிய இடங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. வடக்கு ஈராக் நகரான சுலைமெனியாவில், வீடுகள் குலுங்கியதால், அதிர்ச்சி அடைந்த மக்கள் தெருக்களில் பீதி அடைந்து […]