இன்றைய ராசிபலன் 01.08.2019 மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில […]
Author: மலரவன்
இன்றைய ராசிபலன் 31.07.2019
மேஷம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. […]
இன்றைய ராசிபலன் 30.07.2019
மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக் கமாவீர்கள். தைரியம் கூடும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடை யும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் […]
இன்றைய ராசிபலன் 29.07.2019
மேஷம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த […]
க. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆரம்பம்
க. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை உயர்தர பரீட்சைக்காக புதிய கற்கைநெறி சிபாரிசின் கீழ் 198 229 பரீட்சாத்திகளும், பழைய பாடத்திட்டசிபாரிசின் கீழ் 139 475 பரீட்சாத்திகளும் தோற்றவுள்ளனர். அதன்படி பரீட்சைக்கு தோற்றவுள்ள மொத்த பரீட்சாத்திகளின் எண்ணிக்கை 337 704 என்பதாகும். அத்துடன், 2678 பரீட்சை மத்திய […]
தள்ளாத வயதில் பொல்லூன்றாமல் சைக்கிளோட்டி சாதிக்கும் வயோதிப தமிழ்த்தாய்!
மட்டக்களப்பு ஆயித்தியமலை உன்னிச்சை சந்தியில் முதுமையிலும் துவிச்சக்கர வண்டி ஓட்டி தனது நாளாந்த கடமைகளை செய்யும் வீரத்தமிழ்த்தாய் ஒருவர் வாழ்ந்துவருகின்றார். வாழ்வில் முதுமை என்பது ஒரு தடையல்ல என உணர்த்துகின்றார் அந்த வீர வயோதிப தமிழ்த்தாய். தானே தனது கடமைகளை துவிச்சக்கர வண்டி ஓடி சாதிக்கின்றார். பொதுவாகவே வயோதிபம் தொடங்கினாலே நோய் எனும் உளநிலையை ஏற்படுத்தி மனம் பலவீனப்பட்டு மற்றவரின் ஆதரவை நாடி தங்கிவாழ்வது சாதரணமானவர்களின் மனநிலை. ஆனால் இத்தாயின் […]
தனது குறைபாட்டை கூறிய ரணில்
தமிழ் மொழியை கற்றுக்கொள்ளாதது தனது பெரும் குறைபாடு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த வெவ்வெறு மொழிகளைப் பேசும் திறமை முக்கியமானது எனத் தெரிவித்த அவர், இவ்வாறு பேச முடியாமல் போவதால் யுத்த சூழ்நிலைக்கும் வழிவகுப்பதாக அவர் குறிப்பிட்டார். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இரண்டாம் மொழி கல்வியில் விசேட சித்தி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பிரதமர் தலைமையில் சான்றிதழ்கள் […]
சம்மாந்துறையில் தீவிரவாதிகள்!
அம்பாறை சம்மாந்துறை பகுதியில் ஆயுதம் தாங்கிய இரண்டு நபர்களால் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியொன்றில் உலாவிக்கொண்டிருந்த குறித்த ஆயுதம் தாங்கிய இருவரும் காணி உரிமையாளரை துப்பாக்கியால் சுட முயற்சி செய்துள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் […]
இன்றைய ராசிபலன் 18.07.2019
மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது […]
அனைத்து சிறைகளிலும் சிசிடிவி கேமரா ! முதல்வர் அதிரடி
இன்றைய நவீன உலகில் எந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதோ..அந்த அளவுள்ள குற்றங்களும் குற்றவாளிகளும் பெருகியுள்ளது துரதிஷ்டவசமானது. அதனால் உலகில் அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாவலுக்கு இருந்தாலும் கூட.. தற்போது அதற்கும் மேலாக கடவுள் கண் போலவும், மூன்றாவது கண்ணாகவும் இந்த சிசிடிவி கேமரா உள்ளது. எத்தையோ ,கொலை, கொள்ளை, திருட்டு, போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க போலிஸுக்கு உதவியாகவும், குற்றசம்பவங்கள் நடக்காமல் மக்களைக் காக்கவும் இந்த சிசிடிவி கேமரா உதவிகரமாக […]





