Author: பார்த்தீபன்

எமது விடுதலை கானல் நீராகுகின்றது! - சார்ள்ஸ் எம்.பி

எமது விடுதலை கானல் நீராகுகின்றது! – சார்ள்ஸ் எம்.பியிடம் அரசியல் கைதிகள் கவலை

எமது விடுதலை கானல் நீராகுகின்றது! – சார்ள்ஸ் எம்.பியிடம் அரசியல் கைதிகள் கவலை “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கும் பட்சத்தில் தமது விடுதலை கானல் நீராகும் என தமிழ் அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இலங்கை அரசுக்கு ஏற்கனவே கால அவகாசம் […]

குற்றவாளிகள் தப்புகின்றனர்! - குமாரபுரம் படுகொலை

குற்றவாளிகள் தப்புகின்றனர்! – குமாரபுரம் படுகொலை வழக்கு குறித்து ஜெனிவாவில் அறிக்கை

குற்றவாளிகள் தப்புகின்றனர்! – குமாரபுரம் படுகொலை வழக்கு குறித்து ஜெனிவாவில் அறிக்கை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கான வாய்ப்புக்கள் இலங்கையின் நீதித்துறையில் உள்ளன என்று எடுத்துரைக்கும் அறிக்கை நேற்று ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டது. குமாரபுரம் படுகொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் தீர்ப்புக்கள் அதில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இலங்கை மக்களின் சமத்துவ அமைப்பால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு ஐ.நாவில் முன்வைக்கப்பட்டது. காணாமல்போனோர், தமிழர் படுகொலைகள் உள்ளிட்ட […]

கால அவகாசம் வழங்கப்பட்டால் தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்

கால அவகாசம் வழங்கப்பட்டால் தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்! – நல்லிணக்க செயலணி நம்பிக்கை

கால அவகாசம் வழங்கப்பட்டால் தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்! – நல்லிணக்க செயலணி நம்பிக்கை “இலங்கை அரசுக்குக் கால அவகாசம் வழங்குவதன் மூலமே தீர்மானத்தில் உள்ள ஏனைய விடயங்களையும் நடைமுறைப்படுத்த முடியும். அரசுக்கு இந்தக் காலப் பகுதியில் அழுத்தங்களைப் பிரயோகித்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியும்.” – இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் தெரிவித்தார் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் நல்லிணக்க செயலணியின் செயலாளருமான கலாநிதி பாக்கியசோதி […]

நாடு கடந்த தமிழீழ அரசு - மஹிந்த அணி

நாடு கடந்த தமிழீழ அரசு – மஹிந்த அணி இடையே ஜெனிவாவில் கடும் சொற்போர்!

நாடு கடந்த தமிழீழ அரசு – மஹிந்த அணி இடையே ஜெனிவாவில் கடும் சொற்போர்! மஹிந்த அணியின் குழுவினருக்கும், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையே ஜெனிவாவில் கடும் மோதல் இடம்பெற்றது. இந்த மோதல் காரணமாக, சரத் வீரசேகர ஏற்பாடு செய்திருந்த பக்க நிகழ்வு இறுதியில் அவராலேயே கலைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான போர்க்குற்றச்சாட்டு ஆதாரங்களுடன், மஹிந்த அணியினர் ஜெனிவாவை களமிறங்கியுள்ளனர். முன்னாள் கடற்படைத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான […]

காணாமல் ஆக்கப்பட்டவர்களை

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி வடக்கு, கிழக்கில் தொடர்கின்றன அறவழிப் போராட்டங்கள்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி வடக்கு, கிழக்கில் தொடர்கின்றன அறவழிப் போராட்டங்கள்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 5 மாவட்டங்களில் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டம் தீர்வு கிடைக்காமல் தொடர்கின்றன. வடக்கின் 4 மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலை மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலிறுத்தியே அவர்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர். “எமக்கு உறுதியான தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. எம்மை வீதியில் விட்டு வேடிக்கை […]

ஜெனிவாவில் இலங்கை

ஜெனிவாவில் இலங்கை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ரொட்டுக்கு அளித்தது அமெரிக்கா!

ஜெனிவாவில் இலங்கை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ரொட்டுக்கு அளித்தது அமெரிக்கா! இலங்கை விவகாரம் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் அதிகாரம், அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான முதன்மைப் பிரதி உதவிச்செயலர் வில்லியம் ஈ ரொட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெனிவாவில் இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கான முழு அதிகாரத்தையும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான முதன்மைப் பிரதி உதவிச்செயலர் வில்லியம் ஈ ரொட்டுக்கு […]

போரின்போது இலங்கைப் படைக்கு சீனா

போரின்போது இலங்கைப் படைக்கு சீனா வழங்கிய பங்களிப்புக்கு மைத்திரி பாராட்டு!

போரின்போது இலங்கைப் படைக்கு சீனா வழங்கிய பங்களிப்புக்கு மைத்திரி பாராட்டு! “இலங்கைப் படையினருக்குத் தேவையான பயிற்சிகளை சீன அரசு தொடர்ந்தும் வழங்கவேண்டும்” என்று அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சரும் அரச ஆலோசகருமான ஜெனரல் சேன்ங் வான்குவாங், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்துவரும் உறவுகளை […]

இலங்கைக்கு அவகாசம்: எதிர்க்கவேண்டும் இந்தியா

இலங்கைக்கு அவகாசம்: எதிர்க்கவேண்டும் இந்தியா! – அ.தி.மு.க. எம்.பி. வலியுறுத்து

இலங்கைக்கு அவகாசம்: எதிர்க்கவேண்டும் இந்தியா! – அ.தி.மு.க. எம்.பி. வலியுறுத்து போர்க்குற்ற விசாரணை தொடர்பாக இலங்கைக்கு அவகாசம் வழங்குவதற்கான தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. மைத்திரேயன் வலியுறுத்தினார். இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்கு இலங்கை அரசு 2 வருட அவகாசம் கேட்டுள்ளது. இதற்கு அனுமதி அளிக்கும் வகையில், ஜெனிவாவில் நாளைமறுதினம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் […]

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள்

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் கட்டாயம்! – பிரிட்டன் உறுதி

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் கட்டாயம்! – பிரிட்டன் உறுதி நம்பகமான விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்கள், வழக்குத் தொடுநர்கள் அவசியம் இடம்பெறவேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. கலப்பு நீதிமன்றப் பொறிமுறைப் பரிந்துரையை நிராகரித்து, இலங்கை அரசின் உயர்மட்டத் தலைவர்கள் அண்மையில் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள பிரிட்டன் தூதரகப் பேச்சாளர், “நம்பகமான நீதிப் பொறிமுறைகளின் மூலம், ஐ.நா. […]

இலங்கை அரசுக்கு கடும் கண்காணிப்பு

இலங்கை அரசுக்கு கடும் கண்காணிப்பு வேண்டும்! – ஐ.நாவை வலியுறுத்துகின்றார் ஸ் ரீபன் ரப்

இலங்கை அரசுக்கு கடும் கண்காணிப்பு வேண்டும்! – ஐ.நாவை வலியுறுத்துகின்றார் ஸ் ரீபன் ரப் “போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் செயன்முறையை செயற்படுத்த இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படும்போது, அதற்கான கால அட்டவணையையும் வலுவான கண்காணிப்பையும் ஐ.நா. உறுதிப்படுத்த வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ் ரீபன் ரப். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு […]