கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், சாதாரண மற்றும் ஒருநாள் சேவை கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை காலமும், சாதாரண சேவை ஊடாக கடவுச்சீட்டு விநியோகிப்பு நடவடிக்கையின் போது, 3000 ரூபாய் அறவிடப்பட்டு வந்தநிலையில், அந்த கட்டணம் 3500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சேவைக்காக இதுவரை காலமும் 10 ஆயிரம் ரூபா […]
Author: அருள்
மரண தண்டனை குற்றவாளிகள் தொடர்பில் மைத்திரியின் முக்கிய அறிவித்தல்
மரண தண்டனை விதிக்கப்படவேண்டிய போதைப்பொருள் வர்த்தகர்களின் விபரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த நபர்களுக்கு விரைவில் மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மரண தண்டனையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருந்தார். யார் எதிர்த்தாலும் போதைப்பொருள் கடத்தல் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயம் என அவர் கூறியிருந்தார். அதன்படி போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான திகதி […]
தமிழ் மக்கள் மீது விடுதலைப் புலிகளே அதிக அக்கறை உடையவர்கள்
தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தனர் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தமிழ் மக்கள் தொடர்பாக எவ்வித அக்கறையும் கிடையாது. இவர்கள் சுயநல சிந்தனை கொண்டவர்கள். இதனைத் தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தலைவர்களைவிட தமிழீழ […]
இன்றைய ராசிபலன் 01.04.2019
மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மரியா தைக் கூடும். புகழ், கௌரவம் கூடும் நாள். ரிஷபம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி […]
இன்றைய ராசிபலன் 31.03.2019
மேஷம்: இன்று மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். குடும்பத்தாரிடம் பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம்: இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். […]
இன்றைய ராசிபலன் 30.03.2019
மேஷம்: இன்று செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் பயணங்களின் போது உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக […]
சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டம் இன்று
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் மே தினம் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
மன்னாரில் அமைதி வழியில் பேரணி
மன்னாரில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் சிவராத்திரி வளைவு உடைக்கப்பட்டதையும், நந்திக்கொடியை காலால் மிதித்ததையும் கண்டித்து நேற்று மன்னாரில் அமைதி வழியில் பேரணி, கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இன்று காலை 8.30 மணியளவில் ஆலடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஒன்று கூடியவர்கள், மன்னார் மாவட்ட செயலகத்திற்கு அமைதிப் பேரணியாக சென்றனர். மாவட்ட செயலகத்திற்கு எதிராக, வீதியின் இருபுறமும் நூற்றுக்கணக்கான மக்கள் பதாதைகளையும் ஏந்தியபடி, அமைதி வழியில் எதிர்ப்பை தெரிவித்தனர். மன்னார் மாவட்ட இந்து குருமார் […]
ரணிலுக்கு ஆபத்தா ?
நேற்று நாடாளுமன்றத்தில் குழுநிலை வாக்கெடுப்பின்போது இரண்டு அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள் தோல்வியடைந்தன. வஜிர அபேவர்த்தனவின் கீழ் உள்ள உள்நாட்டு விவகார, மகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் சம்பிக்க ரணவக்கவின் கீழ் உள்ள பெருநகர, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றிற்கான ஒதுக்கீடுகளே தோல்வியடைந்தன. நேற்று இந்த அமைச்சுக்கள் மீதான விவாதம் நடைபெற்றது. மாலையில் ஆளுந்தரப்பில் உறுப்பினர்கள் குறைவாக இருந்த சமயத்தை பயன்படுத்தி, எதிரணியின் ரஞ்சித் சொய்சா எம்.பி, வாக்கெடுப்பை கோரினார். […]
மகிந்தவின் முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த சந்திரிக்கா
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் நாட்டில் நிலவும் மின்சாரப் பிரச்சினை தொடர்பில் திடீர் கருத்துத் வெளியிட்டுள்ளனர். மேற்படி 2015, 2017 ஆம் ஆண்டுகளில் சம்பூரில் அமைக்கப்படவிருந்த மின் உற்பத்தி நிலையங்களை தற்போதைய அரசாங்கம் அமைக்காததன் பிரதிபலனையே இன்று எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும் தமது காலத்தில் மாத்திரமே சிக்கல் இன்றி மக்களுக்கு மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த […]





