தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை வெலிமடை போரகஸ் சில்மியாபுர – பதுரியா மாவத்தையில் வசித்து வரும் 21 வயதான இளைஞரே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இளைஞன், தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீம் நடத்திய உபதேச கூட்டங்களில் கலந்துக்கொண்டுள்ளதுடன் மாவனெல்லையில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளை […]
Author: அருள்
இன்றைய ராசிபலன் 16.06.2019
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பற்றிக் குறைக்கூற வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். ரிஷபம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாத்தில் கூடுதல் […]
இன்றைய ராசிபலன் 15.06.2019
மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். மிதுனம்: […]
இன்றைய ராசிபலன் 14.06.2019
மேஷம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர் களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். […]
2020 இலும் ஜனாதிபதி யார்?
கடந்த 2005 ஆம் ஆண்டும் 2010 ஆம் ஆண்டும் 2015 ஆம் ஆண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானித்தது ஜாதிக ஹெல உறுமய எனவும் 2020 ஆம் ஆண்டிலும் தாமே அதனைத் தீர்மானிப்பதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நேற்று நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். கடந்த காலத்தில் […]
நாட்டை விட்டு புறப்பட்டார் மைத்திரி
தஜிகிஸ்தான் நாட்டில் இடம்பெறும் மாநாடொன்றில் கலந்து கொள்ள ஜனாதிபதி சற்று முன்னர் கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார். அவருடன் 50 பேர் கொண்ட குழாமும் பயணமாகியுள்ளது.
பொசனை முன்னிட்டு அனுராதபுரத்தில் 8000 படையினர்!
பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்தில் 8000 ஆயிரம் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இத்தகவலை அனுராதபுர வலைய பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். பொசனை முன்னிட்டு அனுராதபுரம் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பாதுகாப்பிற்காக 4000 பொலிஸார், 2000 இராணுவத்தினர், 1000 சிவில் பாதுகாப்பு படையினர், புலனாய்வு அதிகாரிகள், கடற்படையினர் உள்ளடங்கலாக 8000 பேர் கடமையில் ஈடுபடவுள்ளதாகவு அவர் குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரம் புனித பூமி மற்றும் குட்டம் பொகுண ஆகியன […]
அமைச்சரவைக் கூட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு!
அடுத்த அமைச்சரவை கூட்டம் வரும் 18ம் திகதி இடம்பெறும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகநூலில் இது குறித்த பதிவை வெளியிட்டுள்ளார். வரும் வாரத்திற்குள் ஜனாதிபதியுடனான லடாய் தீர்ந்து, அமைச்சரவை கூடுமா அல்லது ஜனாதிபதியை தவிர்த்து பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூடுமா என்பது குறித்து மனோ கணேசன் எதுவும் குறிப்பிடவில்லை.
உலக தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை
உலக அமைதி சுட்டெண் தரவரிசையில், இலங்கை பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அமைதி தொடர்பான நிறுவனம் வருடாந்தம் மேற்கொள்ளும் மதிப்பீட்டு தரவரிசைப் பட்டியலில், இந்த வருடம் இலங்கை 72 ஆவது இடத்தில் உள்ளது. இதேவேளை கடந்த 2018 ஆம் ஆண்டில், 67 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, நடப்பாண்டில் 72 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. உலகில் உள்ள 163 நாடுகளுக்கிடையில் குறித்த மதிப்பீட்டுப் பணி மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் […]
இன்றைய ராசிபலன் 13.06.2019
மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் […]





