Author: அருள்

வடக்கு – கிழக்கு இணைப்பு: பேச்சு நடத்த முஸ்லிம் சகோதரர்களுக்கு சம்பந்தன் அழைப்பு

வடக்கு, கிழக்கு மாகாண இணைப்புத் தொடர்பில் உரையாற்ற முஸ்லிம் சகோதரர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் மன்னார் மாவட்ட மக்களோடு நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசியல் யாப்புக்கான நடவடிக்கை குழுவின் அறிக்கை தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது இறுதியானது அல்ல. அதேநேரம் இந்த […]

ஆரவ் வெற்றி பெற்றது சிரிப்பாக உள்ளது. ! ஓவியா ஆர்மி..!!

பிரபல நடிகர் கமல்ஹாசன் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சுமார் 100 நாட்களாக நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளாரகா அறிவிக்கப்பட்டார். வெற்றி பெற்ற அவருக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர் . பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஓவியா. இவருக்கு ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைதளங்களி ஒரு குருப்பே உள்ளது. […]

ஓவியா பற்றி ஆரவ் ஆவேச பேட்டி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது, நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் தான். ஆனால் மக்களால் இவரது வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதைத்தொடர்ந்து, தற்போது வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் ஆரவ் தனக்காக ஓட்டுபோட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். அதோடு டைட்டிலை அனைவருக்கும் சமர்பிப்பதாக ட்விட்டரில் கூறியுள்ளார். இவரது ட்விட்டுக்கு ஓவியா ஆர்மியினர் வறுத்தெடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஓவியாவுடன் வேண்டுமானால் படங்களில் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கேன் ஆனால் வாழ்க்கையில் ஒன்று சேர வாய்ப்பில்லை என்று […]

மோடி மீது நடிகர் பிரகாஷ்ராஜ் ஆவேசம்

பிரபல கர்நாடக பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் பேசுகையில், லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்களின் செயல்பாடுகள் குறித்து, மவுனமாக இருப்பதன் மூலம் தன்னைவிட மிகச்சிறந்த நடிகர் என்பதை பிரதமர் நிரூபித்திருப்பதாக விமர்சித்துள்ளார். […]

பிக்பாஸ் சீசன்-2 வில் சூர்யா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு ரூ. 50 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-2வை விரைவில் ஆரம்பிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது விஜய் டிவி. ஆனால் அந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்று தெரிகிறது. அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் தயாராகிக் கொண்டிருப்பதால் பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியை நடிகர் சூர்யா […]

ஓவியாவை ரொமான்ஸ் செய்ய நான் ரெடி: ஆரவ்

ஓவியாவுடன் சேர்ந்து படத்தில் நடிப்பேன் என்று ஆரவ் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகை ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால் ஆரவ் அவரின் காதலை ஏற்கவில்லை. இதையடுத்து ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ஓவியா ஆர்மிக்காரர்களுக்கு ஆரவ் எதிரியானார். இந்நிலையில் ஆரவ் பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ளார். ஓவியாவுடன் சேர்ந்து படத்தில் நடிப்பீர்களா என்று ஆரவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, ரசிகர்களின் விருப்பம் அதுவாக […]

யாழ்.காரைநகரில் கடற்படையின் படகு மோதி மீனவர் ஒருவர் பலி!

யாழ்.காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினரின் படகு மோதியதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மீனவர் படுகாயமடைந்துள்ளார். மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகுடன் கடற்படையின் படகு மோதிப் படகு கவிழ்ந்ததில் அதில் இருந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய மீனவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். காரைநகர் கடற்பரப்பில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், காரைநகர் வெடியரசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை கேதீஸ்வரன் (வயது – 38) […]

பிக்பாஸில் ஆரவ் ஜெயித்தது அநியாயம்: நடிகை கஸ்தூரி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ்வை வெற்றியாளராக அறிவித்தது அநியாயம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. நூறாவது நாள் நிகழ்ச்சியில் ஓவியா, பரணி உட்பட பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டு 50 லட்சம் பரிசு தொகையை தட்டி சென்றார். இந்நிலையில், ஆரவ்வின் வெற்றியை விமர்சித்து நடிகை கஸ்தூரி டுவிட் […]

கனடா எட்மன்டனில் பயங்கரவாத தாக்குதல்?

கனடா-எட்மன்டனில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஒரு பயங்கரவாத தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் குத்தப்பட்டதுடன் பாதசாரிகள் U-Haul டிரக்கினால் தாக்கப்பட்டுள்ளனர். ஓடிக்கொண்டிருந்த யு-ஹால் வாகனத்தில் இருந்து இத்தாக்குதல் நடாத்தப்பட்டுளளது. நான்கு பாதசாரிகள் மோதி விழுத்தப்பட்டுள்ளனர். எட்மன்டனை சேர்ந்த 30-வயதுடைய மனிதன் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவன் தனியாக செயல்பட்டதாக தெரிவித்த பொலிசார் இதில் மற்றவர்கள் சம்பந்தப்பட்டடிருப்பார்களா என கருதப்படவில்லை. எட்மன்டன் மக்களை- அவர்களது சுற்றாடல்களில் இருப்பவர்களை எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு எட்மன்டன் […]

பிரான்சில் புகையிரத நிலையத்தில் தாக்குதல்: இருவர் படுகொலை

தென் பிரான்ஸ் பகுதியில் உள்ள மார்செய்ல் (Marseille ) நகரில் உள்ள செயின்ட் சார்ள்ஸ் (Saint Charles ) நிலக்கீழ் புகையிரத நிலயத்தில் இன்று இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி மேற்கொண்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த பிரதேசத்துக்கு சென்ற காவல்துறையினர் தாக்குதலாளியை சுட்டுக் கொன்றுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் குறித்த தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை. குறித்த பகுதிக்கு பொதுமக்கள் […]