கோஸ்டா ரிகா நாட்டில் தனியார் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் 10 வெளிநாட்டவர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ளது கோஸ்டா ரிகா நாடு. பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள புண்டா இஸ்லிடா நகரில் தனியார் பயணிகள் விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 10 வெளி நாட்டவர்களும், ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 12 பேர் பயணம் […]
Author: அருள்
ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி !
கடந்த காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் எம்மை அறிவாலும் அனுபவத்தாலும் பரிபூரணப்படுத்தும் அதேவேளை, மலரும் ஒவ்வொரு நிமிடமும் எமது ஆற்றல்களை பரீட்சித்துப் பார்த்தவண்ணமே இருக்கிறது. இதன்போது நாம் வெளிப்படுத்தும் உன்னத அர்ப்பணிப்பும் உறுதிப்பாடுமே எம்மை வெற்றியை நோக்கி இட்டுச் செல்கின்றன. நிறைவேறும் வருடத்திற்கு விடைகொடுப்பதும் மலரும் புத்தாண்டை எதிர்பார்ப்புக்களுடன் வரவேற்பதும் இந்த அடிப்படையிலேயே நிகழ்கின்றது. அதற்கமைய, கடந்த வருடத்தை ஒரு நாடு என்றவகையில், எமக்கு எண்ணற்ற சாதகமான […]
இன்றைய ராசிபலன் 01.01.2018
மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். முகப்பொலிவு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள். ரிஷபம்: அதிகாலை 3.12 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம் பவங்கள் நினைவுக்கு வரும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் […]
இன்றைய ராசிபலன் 31.12.2017
மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்னை களுக்கு தீர்வு காண்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். நன்றி மறந்த […]
இன்றைய ராசிபலன் 30.12.2017
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக் குள் இருந்த மோதல்கள் விலகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத் தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்தி ரன் நுழைவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் உணர்ச்சிவசப் படாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். […]
3 நாளில் 7,706 பேர் கைது: சவுதியில் அதிரடி!
சவுதியில் 3 நாளில் 7,706 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3,312 பேர் சவுதி குடிமக்கள் என்றும் மீதமுள்ள 4,494 பேர் வெளிநாட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த் அதிரடி நடவடிக்கைகள் குறித்து சவுதி ஊடகமான அல்-மடினா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை 21 ஆம் தேதியில் இருந்து 23 ஆம் தேதி வரை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த நடவடிக்கையின் போது 434 வாகனங்கள் பிடிப்பட்டதாகவும் […]
காலம் வந்தால் சினிமாவில் மட்டுமில்லை அரசியலிலும் மாற்றம் வரும்
இந்த சந்திப்பின் இறுதியில் ரஜினி அரசியலுக்கு வருவது தொடா்பான முக்கிய முடிவுகளை அறிவிக்கலாம் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இன்று 4 ஆம் நாளாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் வேலூர் மாவட்ட ரசிகர்களை சந்தித்தார். அப்போது பேசிய ரஜினிகாந்த்,“சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி காலம் மிக முக்கியம். காலம் வரும்போது எல்லாம் தானாக மாறும்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் “ஒருவன் வாழும் வாழ்க்கையை வைத்தே மக்கள் அவனை […]
தினகரனிடம் கோரிக்கை வைத்த சபாநாயகர் தனபால்!
தினகரன் தரப்புக்கு கிடைத்த முதல் வெற்றி ஆர்கே நகர் தேர்தல் வெற்றி. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் இந்த பதவியேற்பு விழாவை அமோகப்படுத்தினார்கள். வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். டிடிவி தினகரன் சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டதும் அவரது ஆதரவாளர்கள், வருங்கால முதல்வர் டிடிவி தினகரன் வாழ்க என கோஷமிட்டனர். இந்த கோஷம் அறையையும் தாண்டி வெளியே கேட்டது. இதனால் என்ன செய்வதென்பது புரியாமல் […]
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான விவாதம் மார்ச் 21 ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மார்ச் மாதம் 21 ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தொடர்பான பிரதான விவாதம் 27ஆம் திகதி இடம்பெறும். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை முன்வைப்பார். அதன்பின்னர் இலங்கை தனது தரப்பு நியாயம் […]
பொம்மை வெளி குடி தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு
பொம்மை வெளிப் பகுதியில் யாழ்ப்பாண மாநகர சபையால் ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கப்படவுள்ளது. அந்தக் கிணறு அமைக்கப்பட்டால் பொம்மை வெளியில் உள்ள மக்களின் குடி தண்ணீர்த் தேவை பூர்த்தி செய்யப்படும் என யாழ்ப்பாண மா நகர சபை ஆணையாளர் ரி. ஜெயசீலன் தெரிவித்தார். யாழ்ப்பாணம், பொம்மை வெளிப்பகுதியில் குடியி ருக்கும் மக்கள் அந்தப் பகுதியில் யாழ்ப்பாண மாநகர சபையால் அமைக்கப்பட்ட நீர்க் குழாயில் இருந்து வரும் தண்ணீரையே தமது தேவைகளுக்காகப் […]





