பிரான்ஸ், பரிஸ் நகரிலுள்ள இந்திய உணவகம் ஒன்றில் இலங்கையர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆயுதம் ஏந்தி வந்த குழுவினரால் குறித்த இலங்கையர் தாக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலில் குறித்த நபரின் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர் 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரெஞ்சு தலைநகர் பகுதியில் இந்த கொடூரமான தாக்குதலை மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் […]
Author: அருள்
இன்றைய ராசிபலன் 07.03.2018
மேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மாலை 6.55 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதிகம் உழைக்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு. ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் […]
இன்றைய ராசிபலன் 06.03.2018
மேஷம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். […]
பிரான்சில் இந்த மாதம் முதல் வந்துள்ள மாற்றங்கள்
பிரான்சில் மார்ச் 1ம் திகதி முதல் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. சிகரெட் விலை சிகரெட் பாக்கெட் ஒன்றின் விலை சராசரியாக ஒரு யூரோ வரை அதிகரித்துள்ளது. அதாவது புகை பிடிப்பவர்கள் இனி ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு 8 யூரோக்கள் செலுத்த வேண்டும். பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macronஇன் பதவிக் காலம் முடிவதற்குள் இது 10 யூரோக்கள் வரை உயரலாம். சமையல் எரிவாயுவின் விலை சமையல் எரிவாயுவின் விலை […]
ஆர்யா நிகழ்ச்சியில் இலங்கை பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்
ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார். இதில் பல பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை வரலட்சுமி அந்த 16 பெண்களுடன் சாதாரணமாக கலந்துரையாடியுள்ளார். அப்போது 16 பெண்களில் வரலட்சுமி, ஸ்வேதா-சூசன்னாவை ஆர்யாவுக்காக தேர்வு செய்தார். சூசன்னா விவாகரத்து பெற்ற ஒரு இலங்கை பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ராசிபலன் 05.03.2018
மேஷம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் […]
யாழில் சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல்!
யாழ். கொக்குவில் – பிரம்படி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த வீட்டின் கதவையும் கோடரியால் வெட்டி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் கூறியுள்ளனர்.
இன்றைய ராசிபலன் 04.03.2018
மேஷம்: வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். புதுமை படைக்கும் நாள். மிதுனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மனதிற்கு […]
சரத் பொன்சேகாவுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டால் தமிழர்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும்?
சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் நீதித்துறை சார்ந்த அமைச்சு பதவி வழங்கப்படும் போது தமிழர்களின் நிலை கேள்விக்குரியாகிவிடும் என்ற அச்சம் தோன்றியுள்ளதால் இதனை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கப்பட்டுள்ள […]
தமிழர்களுக்கு எதிராக இனவாத செயற்பாட்டில் மஹிந்த!
காணாமல் போனோர் பணியகத்திற்கு ஆணையாளர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார். ஹோகந்தர பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். காணாமல் போனார் பணியகத்திற்காக ஆணையாளர் நியமிக்கப்பட்டமையின் ஊடாக அரசாங்கம் காட்டிகொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் காட்டி கொடுப்பு வேலைத்திட்டங்கள் மீண்டும் இதன் ஊடாக தெளிவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். இந்த கருத்தின் […]





