மேஷம்: இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3 ரிஷபம்: இன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை […]
Author: அருள்
மஹிந்தவினால் புகழ்பெறும் நல்லாட்சி!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஓராண்டுக்கு முன்னரே போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட பாலங்களை, நல்லாட்சியின் அதிகாரிகள் மீண்டும் திறந்து வைக்கவுள்ளனர். காலி, மாத்தறை மாவட்டங்களை மையப்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள பத்து பாலங்களே இவ்வாறு நாளை திறந்து வைக்கப்படவுள்ளன. ஜப்பானின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் கடந்த 2014ஆம் ஆண்டு, 7 பில்லியன் ரூபாய் மதிப்புடைய இந்த திட்டம், மஹிந்த அரசாங்கத்தினால் ஒப்பந்தம் செய்யப்பட்டது. குறித்த பாலங்களுக்கான நிர்மாணப் பணிகள் […]
இஸ்ரேல் மீது ஈரான் முதல்தடவை ஏவுகணை தாக்குதல் – மத்திய கிழக்கில் நெருக்கடி தீவிரம்
இஸ்ரேல் மீது ஈரான் முதல்தடவை எவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளதை தொடர்ந்து மத்திய கிழக்கில் நெருக்கடி தீவிரமடையலாம் என்ற அச்ச நிலை உருவாகியுள்ளது. இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கோலான் குன்றிலுள்ள இஸ்ரேலிய தளங்களை நோக்கி ஈரானிய படையினர் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.சிரியாவிலிருந்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஈரான் 20 எவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் இவற்றில் பலவற்றை நடுவானில் அழித்துவிட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் வெற்றி பெற இவரா காரணம்?
அமைச்சர் மங்கள சமரவீரவின் தலையீடு காரணமாகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததாக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சிக்குள் இருந்த பிரச்சினையான நிலைமையில் அந்த கட்சியை சேர்ந்த 28 நாடாளுமன்ற உறுப்பினர்களை இலகுவாக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சார்பான நிலைப்பாட்டுக்கு கொண்டு வர முடிந்தது. வெற்றி நெருங்கி வரும் வேளையில், அமைச்சர் […]
குற்றவாளிகள் தப்புகின்றனர்: நாடாளுமன்றில் சுமந்திரன் சுட்டிக்காட்டு
குற்றவியல் வழக்குகளில் தாமதம் என்பதே பெரும் பிரச்சினையாக உள்ளது. சட்டங்கள் தாமதப்படுத்தப்படுவதைப் பயன்படுத்தி பாரிய குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துக்கொள்கின்றனர்.’ இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிகாரத்தில் […]
இன்றைய ராசிபலன் 10.05.2018
மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள். ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் […]
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தமிழ் மக்களுக்கு ஏமாற்றம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தனது கொள்கை விளக்க அறிக்கையை இரண்டாவது தடவையாக நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். நடைபெற்று வரும் ஆட்சியின் 8வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அவர் முன்வைத்த கொள்கை விளக்க அறிக்கைக்குப் பின்னர் இரண்டாவது தடவையாக இந்த ஆட்சியின் எஞ்சிய இரண்டு வருட காலத்துக்கான கொள்கை விளக்க அறிக்கையை அவர் முன்வைத்தார். ஆட்சிக்கு வரும் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் எதனையும் உருப்படியாக நிறைவேற்றியிருக்காத நிலையில் அவரது இந்தக் […]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனர்த்தம்! ஒரு கோடி ரூபாவுக்கு மேல் நட்டம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பொருட்கள் எரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திலுள்ள தீர்வையற்ற வர்த்தக நிலையத்தின் களஞ்சிய அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான உபகரணங்கள் தீயில் கருகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக, அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. விமான […]
ஜெயலலிதா மரண விசாரணையில் திடீர் திருப்பம்!
ஜெயலலிதாவின் உடல்நிலை, 2016 மே மாதத்திலேயே மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது’ என, விசாரணை கமிஷனில், சர்க்கரை நோய் நிபுணர் ராமச்சந்திரன் கூறியது, விசாரணையில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை, 40க்கும் மேற்பட்டோரிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று, சென்னை, அப்பல்லோ டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், சர்க்கரை நோய் நிபுணர் ராமச்சந்திரன் ஆகியோர், விசாரணைக்கு […]
மீண்டும் சிதறும் முள்ளிவாய்க்கால்! தவிர்ப்பார்களா ஈழத்தமிழர்கள்?
உலகின் எல்லா தேசிய இனங்களின் மீதும் வரலாறு ஆழமான வடுக்களைப் பதித்துவிட்டுத் தான் செல்கின்றது. ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 18, 2009 அன்று வரலாறு இழைத்ததை, வெறுமனே ஒரு வடு அல்லது ஒரு காயம் என்று மட்டும் சொல்லிவிட்டு, தாண்டிச் சென்றுவிட முடியாது. தமிழர்கள் விடுதலை பெறவும், உரிமைகளை அடையவும், தனது வாழ்நாளின் பெரும் பகுதியைச் யுத்தத்தில் செலவிட்டு, கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதியுடன் […]





