சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் தற்போது 39.42 அடி தண்ணீர் மட்டுமே இருப்பதால் வரும் 12ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக நீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார். தமிழகத்தில் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக அரசு செய்யும் […]
Author: அருள்
இன்றைய ராசிபலன் 08.06.2018
மேஷம்: இன்று உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்திதரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். உதவிகளை செய்து மன திருப்தி அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 ரிஷபம்: இன்று மனதில் இருந்த […]
அய்யாக்கண்ணு கைது – முதல்வர் பழனிசாமி விளக்கம்
கேள்வி நேரம் முடிந்த பின் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரை பார்க்க வந்த விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு வரும் வழியிலே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக பேசினார். இதற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாதவரம் – அம்பத்தூர் பகுதிகளில் துண்டுச்சீட்டு பிரச்சாரத்தை செய்ய அனுமதியை பெற்றுவிட்டு, அனுமதி பெறாமல் வடபழனி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் எனவும், அதன் காரணமாகவே […]
முள்ளியவளையில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை! நடந்தது என்ன?
மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் முள்ளியவளை பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் Information Technologg and management பிரிவில் கல்விகற்று வரும் 24 அகவையுடைய இராசநாயகம் நிறோசிகா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக முள்ளியவளை மூன்றாம் வட்டாரத்தில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கடந்த […]
முன்னாள் ஜனாதிபதியிடம் இரகசிய விசாரனை! மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுமா?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இரகசிய விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பாகவே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, விசாரணைகளுக்கான நாளை மஹிந்த தெரிவிக்க வேண்டும் எனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர் வழங்கிய முக்கிய தகவல்களின் அடிப்படையிலேயே […]
இன்றைய ராசிபலன் 07.06.2018
மேஷம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்வீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கை யாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகள் […]
காலா படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் கதை மற்றும் தலைப்பு தன்னுடையது என்று கூறி, திரைப்படத்திற்கு தடை கோரி ராஜசேகரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அசோக் பூஷண், ஏ.கே. கோயல் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஏற்க முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி […]
வடக்கு முதலமைச்சரின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்
போருக்கு பின்னரான காலத்தில் இளைஞர், இளம் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்ளும் நோக்கில் தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு விரைவில் நடைபெறும் என்று மாகாண முதலைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்த இளைஞர் மாநாட்டுக்கான ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றிபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவை அரசியல் […]
இன்றைய ராசிபலன் 06.06.2018
மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சிறப்பான நாள். ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் […]
கர்நாடக முதல்வருடன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் குமாரசாமி தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியை பெங்களூருவில் இன்று சந்தித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கர்நாடக முதல்வர் […]





