சென்னையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது இந்நிலையில், சுற்றுலா தளங்களில் காதல் ஜோடிகள் குவிந்து கொண்டாடி மகிழ்ந்தனர். காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் போராட்டத் தில் ஈடுபட்டன. கொருக்குப்பேட்டை மன்னப்ப தெருவில் தர்ம ரக்ஷா சபா சார்பில் அதன் மாநில தலைவர் செல்வம் […]
Author: அருள்
பலாலி விமானநிலையத்தில் ரணில் தலைமையில் கூடிய குழு
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் தற்போது விமா நிலையத்தில் கூடியுள்ளனர்.
பொலிஸார் தீடீர் தேடுதல் வேட்டை: 22 இலங்கையர்கள் கைது!
வெளிநாட்டுக்குச் செல்வதற்காக, சியபலாண்டுவ பகுதியில் தங்கியிருந்த 22 இலங்கையர்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான முறையில், வெளிநாடு செல்வதற்கு முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் பின்னரே, இந்த 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, அவர்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்த இரண்டு வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஆள்கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபடும் இரண்டு சந்தேக நபர்கள், திஸ்ஸமஹாராம – பன்னேகமவ […]
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜனாதிபதி வலியுறுத்தல்!
போதைப்பொருள் கடத்தல், சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களது பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். இன்று முற்பகல் அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெற்ற சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அநுராதபுர மாவட்ட விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவம் என்பது இன்று ஒரு முக்கிய விடயமாக அறியப்பட்டாலும் […]
இன்றைய ராசிபலன் 14.02.2019
மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். தோற்றப் பொலிவுக் கூடும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். பழைய சிக்கல்கள் தலைத்தூக்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் […]
மகிந்தவை தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும்!
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மகிந்தவை மிகவும் பிடிக்கும் என்றும் அவர்களின் மனதில் எனது தந்தை தொடர்ந்து நிலைத்திருக்கின்றார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும் மகிந்தவின் மகனுமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்தவுடன் இந்தியாவுக்குச் சென்ற நாமல் அங்கு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, வடக்கு, கிழக்கில் ராஜபக்ச குடும்பத்துக்கு தனி மரியாதை உண்டு. தமிழ் மக்களுக்குத் தொல்லை கொடுத்த புலிகளை நாம் தோற்கடித்தோம் […]
விக்னேஸ்வரனின் மனு நிராகரிக்கப்பட்டது
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வட மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே விக்னேஸ்வரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் வட மாகாண அமைச்சர் ப.டெனீஸ்வரன் இந்த […]
அனந்தி ஐ.நாவுக்கு செல்வதில் சிக்கல்
போர் நிறைவடைந்து 10 வருடங்களாகும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதில் ஐ.நா.சபை தொடா்ந்தும் கால தாமதத்தையே காட்டுவதாக முன்னாள் மாகாண அமைச்சா் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் 40 வது கூட்டத்தொடா் ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலமைச்சா் ஐ.நா செல்வதற்கான விசேட குழு ஒன்றிணை அமைத்து நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களை சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை கூறவேண்டும், அதுமட்டுமல்லாமல் இலங்கை […]
அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம்
தேசிய அரசாங்கம் அமைக்கும் பிரேரணையை மீண்டும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்ளில் இருந்து தெரியவருகின்றது. அதன் பிரகாரம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 48 ஆகவும் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 வரை அதிகரிக்கும் பிரேரணை எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பிரேரணை தற்போது பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் […]
நாடு திரும்பும் மகிந்த ராஜபக்சே
எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தனது இந்திய பயணத்தை நிறைவு செய்து இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 178 என்ற விமானத்தின் ஊடாக அவர் ஹைய்தராபாத் நகரில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ இந்தியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





