பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பங்களாதேஷிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹஸீனா இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இரு தலைவர்களுக்குமிடையில் சுமுகமான கலந்துரையாடலை தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

இலங்கை மற்றும் பங்களாதேஷிற்கு இடையில் வர்த்தக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பிலும் விஷேட பொருளாதார வலயமொன்றை உருவாக்கிக் கொள்வது தொடர்பிலும் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *