Tuesday , June 24 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / பிரான்சில் மசூதி அருகே மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கி சூடு – 8 பேர் காயம்

பிரான்சில் மசூதி அருகே மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கி சூடு – 8 பேர் காயம்

பிரான்சில் மசூதி அருகே மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் காயம் அடைந்தனர்.

தெற்கு பிரான்சில் அவிக்னான் பகுதி உள்ளது. அங்கு அர்ராமா என்ற மசூதி உள்ளது. நேற்று இரவு 10.30 மணியளவில் மசூதியில் இருந்து பலர் வெளியே வந்த கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த 2 மர்ம வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

துப்பாக்கி சூட்டில் 8 பேர் காயம் அடைந்தனர் அவர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்களில் 7 வயது சிறுமியும் அடங்குவார்.

இத்தாக்குதல் தீவிரவாதத்தால் நடைபெற்றது இல்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இத்தாக்குதல் நடைபெற்றது என்றார்.

பாரீஸ் புறநகரான கிரேடில் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மசூதி அருகே கூட்டத்தினர் மீது கார் ஏற்றிய நபர் கைது செய்யப்பட்டார். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் பிரான்சின் முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …