Tuesday , June 24 2025
Home / முக்கிய செய்திகள் / ரவிராஜ் கொலை வழக்கு: மேன்முறையீட்டை விசாரிக்க தீர்மானம்!

ரவிராஜ் கொலை வழக்கு: மேன்முறையீட்டை விசாரிக்க தீர்மானம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டை எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேல்நீதிமன்ற தீர்மானித்துள்ளது.

தனது கணவரின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, சசிகலா ரவிராஜினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மேல் நீதிமன்றத்தின் ஜூரிகள் சபை முன்னிலையில், வழக்கு விசாரிக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானது என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகநபர்களான கடற்படை அதிகாரிகள் மூவருக்கும் அழைப்பாணை விடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv