ஆப்கானில் கூடுதலாக 3 ஆயிரம் அமெரிக்க வீரர்கள்: டிரம்ப் புது திட்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தலிபான்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தானில் கூடுதலாக அமெரிக்க வீரர்கள் 3 ஆயிரம் பேரை இறக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது.

இந்த தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க ஆப்கான் அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

ஆப்கானிஸ்தான் அரசுக்கு உறுதுணையாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளைச் சேர்ந்த 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருந்து வந்தனர். அமெரிக்க படைகள் வீர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலான பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த அமெரிக்க படைகள் அதிபர் பராக் ஓபாமா ஆட்சி காலத்துடன் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர்.

இந்த நிலையில், தலிபான்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தானில் கூடுதலாக அமெரிக்க வீரர்கள் 3 ஆயிரம் பேரை இறக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

ஆப்கான் – பாகிஸ்தான் திட்டம் தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் உள்ளது. போர் பதற்றம் உள்ள பகுதிகளில் வெற்றிகரமான யுக்திகளை கையாள டிரம்ப் விரும்புவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *