ஜப்பானுக்கு ஒரு வாரகால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று அதிகாரபூர்வ பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவின் பிரதமராகப் பதவியேற்ற பின்னர், ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது தடவையாக நேற்றைய தினம் ஜப்பான் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நரிடா அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்த ஸ்ரீலங்கா பிரதமரை, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் சிறப்பு ஆலோசகர் ஹிரோரோ இசுமி, ஸ்ரீலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா ஆகியோர் வரவேற்றனர்.
இன்று தொடக்கம் ஜப்பானிய அரச மற்றும் தனியார் துறை பிரமுகர்களை ஸ்ரீலங்கா பிரதமர் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயுடன் அவர் பேச்சுக்களை நடத்தவுள்ளதுடன், அத்துடன் ஸ்ரீலங்கா பிரதமருக்கு ஜப்பானிய பிரதமர் இராப்போசன விருந்தும் அளிக்கவுள்ளார்.