அரசு பராமுகம்! உறவுகள் கடும் கவலை!! – தொடர்கின்றது நீதி வேண்டி போராட்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

காணாமல்போனோரின் உறவுகள் தமிழர் தாயகத்தில் முன்னெடுத்து வருகின்ற போராட்டங்கள் தீர்வு எதுவும் இல்லாமல் இன்று வியாழக்கிழமையும் தொடர்கின்றன. தேசிய அரசும் இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தமக்குக் கடும் வேதனையாக உள்ளது என்று போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக, கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 46ஆவது நாளாகவும் தொடர்கின்றது. வவுனியா நகரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 42 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

அதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 27ஆவது நாளகவும் தொடர்கின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமும் இன்று தொடர்கின்றது.

அதேவேளை, கிழக்கில் திருகோணமலையில் இன்று 33ஆவது நாளாகவும் காணாமல்போனோரின் உறவுகளின் போராட்டம் தொடர்கின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *