Wednesday , February 5 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / பிரான்சில் உயிரழந்த பின்னும் எட்டுப்பேரைக் காப்பாற்றிய யாழ் இளைஞன்!

பிரான்சில் உயிரழந்த பின்னும் எட்டுப்பேரைக் காப்பாற்றிய யாழ் இளைஞன்!

பிரான்சில் உயிரழந்த பின்னும் எட்டுப்பேரைக் காப்பாற்றிய யாழ் இளைஞன்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.

முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும், எட்டுப் பேருக்கு அவரது உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.

சில தினங்களின் முன்னர் அவர் திடீரென மயக்கமடைந்துள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று, அதீதீவிர சிகிச்சையளிக்கப்பட்டபோதும் , அவர் மூளைசாவடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் , அவரை காப்பாற்ற முடியாதென்ற நிலையேற்பட்டபோது, உறவினர்களின் சம்மதத்துடன் அவர் கருணைக் கொலை செய்யப்பட்டார்.

தனது உடல் உறுப்புக்களை தானம் செய்ய வேண்டுமென அவர் தனது விருப்பத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியதன் அடிப்படையில், இளைஞர் உயிரிழப்பதற்கு முன்னதாக அவரது உடல் பாகங்கள் தானம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, இருதயம் மற்றும் ஈரல் பிரச்சனைகளால் உயிரிழக்கும் தறுவாயில் இரண்டு நோயாளர்கள் இருக்கும் விடயம் தெரியவரவே, அவர்களிற்கு அந்த பாகங்கள் தானம் வழங்கப்பட்டன.

விசேட உலங்குவானூர்தி மூலமாக, இருதயம் கொண்டு செல்லப்பட்டு அந்த நோயாளிக்கு மாற்றப்பட்டது. இருதயம், ஈரல் மாற்றப்பட்ட பிரான்ஸ் நாட்டவர்கள் உயிர்பிழைத்தனர்.

இதயம், ஈரல், நுரையீரல், பித்தப்பை, சிறுநீரகம், வழித்திரை உள்ளிட்ட எட்டு உடல் பாகங்களை சாருஜன் தானம் செய்திருந்தார்.

இதேவேளை இறந்த பின்னரும் தன் உறுப்புகளை தானம் செய்த குறித்த யாழ் இளைஞருக்கு பிரான்ஸ் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv