தயாரிப்பாளர் சங்க பிரச்சனைக்கு அரசு எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடிகர் விஷால் பூட்டு போடப்பட்டிருந்த தயாரிப்பாளர் சங்க கட்டிடத்தை பூட்டை உடைத்து திறக்க முயற்சித்தால் இன்று காலை கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மாலையில் விடுவிக்கப்பட்டார்.

அதன் பின் அவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள மற்றொரு சங்க கட்டிடத்தில் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் திநகரில் உள்ள தயாரிப்பாளர்சங்க கட்டிடத்திற்கு சீல் வைக்க அரசு உத்தரவிட்டு, தற்போது கட்டிடம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இருதரப்பும் சமாதானம் அடைத்த பிறகு தான் கட்டிடம் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் விஷால் உட்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.